ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...
ஹஜ் செல்லாத அண்ணன் மீதான விமர்சனத்திற்கு அபகரிக்கப்பட்ட வார இதழில் பதிலளித்துள்ள அண்ணன், பல்வேறு நொண்டிச் சாக்குகளை சொல்லியுள்ளார். அதில் முதலாவதாக, ''ஒரு மனிதருக்கு குலுக்கலில் இடம் கிடைத்தும் அவர் ஹஜ் செய்யவில்லையானால் அவரது நிலை அவருக்குத்தான் தெரியும் என்ற அடிப்படை நாகரீகத்தைப் பேணுவது தான் மார்க்கத்தின் நிலைப்பாடு என்பதையும் இங்கே சுட்டிக்காட்டிக் கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.
அண்ணனின் கூற்றுப்படி, ஹஜ் செல்லாததை விமர்சிக்கக் கூடாது என்று சொல்லும் இவர், மற்றவர்கள் விசயத்தில் மார்க்கத்தை பேனினாரா? 'முகலாய மன்னர்களில் எவனும் ஹஜ் செஞ்சவன் கெடையாது'ன்னு எத்தனை மேடைகளில் இவர் முழங்கியிருப்பார். அவர்கள் ஹஜ் செய்யாததற்கு எதாவது காரணம் இருக்கலாம் என்று இவர் விட்டு வைத்தாரா? இன்னும் சொல்லப்போனால் உயிருக்கு அச்சுறுத்தல் என்று உதார் விடுகிறாரே! இந்த வாதம் முகலாய மன்னர்களுக்கு தான் மிகவும் பொருந்தும் ஏனென்றால், இன்று இவர் விமான நிலையம் வரை உள்ளூர் போலீஸ் பாதுகாப்புடன் செல்வார். பின்பு விமானத்தில் இவரை எவனும் கொல்லப்போவதில்லை. சவூதியில் அபயபூமியான மக்காவில் இவரை எவனும் கொல்லப்போவதில்லை. அப்படிப்பட்ட இவரே உயிர்பயம் காரணமாக ஹஜ் செய்யாமல் இருக்கலாம் என தனக்குத் தானே பத்வா வழங்கிக் கொள்கிறாரே! ஆனால் முகலாய மன்னர்கள் இவரைப் போல் விமானத்தில் பயணிக்கக் முடியாது. சுற்றிலும் எதிரிகள் சூழ இருந்தார்கள். அப்படிப்பட்ட அவர்கள் ஹஜ் செய்யாமல் இருப்பதற்கு இவரது இந்த பத்வா பொருந்துமே! பிறகு ஏன் முகலாயர்களை இவர் விமர்சித்தார்? அதுவும் முகலாயர்கள் உண்மையான முஸ்லிம்கள் அல்ல என்று காட்டுவதற்காக ஏன் விமர்சித்தார்? அப்படியானால் இவர் அடிப்படை நாகரீகம் மறந்தது ஏன்? மார்க்கத்தின் நிலைப்பாட்டை மறந்தது ஏன்?
இறுதியாக தனது உயிர்பயத்தை மறைக்க, எனக்கு எந்த அச்சமும் இல்லை; அதனால் தான் இந்த ஆண்டும் விண்ணப்பித்தேன்; ஆனால் என் பெயர் குலுக்கலில் வரவில்லை என்று 'கைப்புள்ள' பாணியில் உதார் விடுகிறார். இவர் தனக்கு உயிர்பயம் இல்லை என்று சொன்னது உண்மையானால், அழுது ஒப்பாரி வைத்து பெற்ற பாதுகாப்பை விளக்கிக் கொண்டு தனது திராணியைக் காட்டுவாரா? அல்லது தான் ஒரு வெற்றுச் சவடால் 'கைப்புள்ள' தான் என்று காலம் தள்ளுவாரா?
இறுதியாக தனது உயிர்பயத்தை மறைக்க, எனக்கு எந்த அச்சமும் இல்லை; அதனால் தான் இந்த ஆண்டும் விண்ணப்பித்தேன்; ஆனால் என் பெயர் குலுக்கலில் வரவில்லை என்று 'கைப்புள்ள' பாணியில் உதார் விடுகிறார். இவர் தனக்கு உயிர்பயம் இல்லை என்று சொன்னது உண்மையானால், அழுது ஒப்பாரி வைத்து பெற்ற பாதுகாப்பை விளக்கிக் கொண்டு தனது திராணியைக் காட்டுவாரா? அல்லது தான் ஒரு வெற்றுச் சவடால் 'கைப்புள்ள' தான் என்று காலம் தள்ளுவாரா?
0 comments:
Post a Comment