********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

முகவை அப்பாஸின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாத பிஜெ! - முகவை அப்பாஸ்

Friday, October 14, 2011

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் முகவை அப்பாஸ், உங்களின் ஆக்கங்களை intjonline.in என்ற இந்த இணையதளத்தில் அடிக்கடி படிப்பது

உண்டு. அல்லாஹ் உங்கள் மீது அருள் செய்யட்டும். அல்ஹம்துலில்லாஹ்.

அந்த வரிசையில் சென்ற வாரம் வந்த ஜூம்ஆ தொழுகையில் குத்பாவில் கைத்தடி; பீஜே அன்றும் இன்றும்! என்ற தலைப்பில் வந்த கட்டுரையை படித்தேன்.மாஷா அல்லாஹ்.... சகோதரர் முகவை அப்பாஸ், நீங்கள் நியாயமாக கேட்டுள்ள மார்க்க சமபந்தமான எந்த கேள்விக்கும்  பிஜெ அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை என்பதை அவரது பொறம்போக்கு பினாமியினை கொண்டு உங்களை வசைபாடுதல் மூலமாக நிரூபித்து வருகிறார். 

சகோதரர் பிஜெ அவர்கள், எந்த ஹதீஸ் அடிப்படையில் மார்க்க விஷயமாக தீர்வு சொன்னாரோ, அந்த ஹதீஸை கொண்டே முந்தைய தீர்ப்புக்கு முரணாக மறு தீர்வு சொல்கிறார் என்பதை ஆதாரபூர்வமாக  நிரூபித்துள்ளீர்கள். அதை பிஜெ மறுப்பதாக இருந்தால், நான் இந்த அடிப்படையில் முன்பு தீர்வு சொன்னேன், இந்த அடிப்படையில் இப்போது தீர்ப்பை மறுகிறேன் என சொல்ல வேண்டும்.   
அதை விடுத்து, அவரது சீடர்கள், பிஜெயின் தீர்ப்பை சிறப்புக்குரிய இமாம்களுடனும், மரியாதைக்குரிய சஹாபாக்காளின் நிலைப்பாட்டுடனும் ஏன் அருமைக்குரிய இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தீர்ப்புடனும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்கள். நவுதுபில்லாஹ்.
இமாம் ஹனபியோ அல்லது ஷாபியோ அன்று ஒரு மார்க்க தீர்வை ஒரு ஹதீஸின் அடிப்படையில் சொல்லிருந்து, அதை பிறகு மாற்றுவதாக இருந்தால், அதை விட கூடுதலான ஆதாரம் உள்ள ஒரு ஹதீஸை கொண்டுதான் மாற்றி இருக்கிறார்களே தவிர, சகோ.பிஜெ போல், ஒரே ஹதீஸை கொண்டு அன்று ஒன்று சொல்லி, அது தனக்கு தற்பொழுது சரியாக படவில்லை என இன்று மாற்றி கூறியதாக நாம் பார்க்கவில்லை.  
சகோதரர் அப்பாஸ் அவர்களே! தாங்கள் என்ன தவறு செய்தீர்களோ, நான் தெரிந்து இருக்கவில்லை. அது எனக்கோ இந்த சமுதாயத்திற்கோ தேவையும் இல்லை என நினைக்கிறேன். பிஜெ அவர்களின் அமைப்பில் இருந்தப் பொழுது, தாங்கள் செய்தாக சொல்லப்படும் தவறுகளை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு, அவரை விட்டு வெளியேறி, மார்க்கம் மற்றும் சமுதாய விசயங்களில் தவறு செய்கிறார் என்பதை சுட்டிக் காட்டும் பொழுது,  பொறாமையின் வெளிபாடாக உங்களை சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக இதை இப்போதும் நாகரிகமற்று எழுதுவதுவது, அவருக்கும், அவரது பினாமிக்கும் பெருமையாக தெரியலாம். ஆனால் அது இறைவன் முன்பு வெட்க கேடானது.   இது ஒரு கோழையின் செயலாகும். அதற்கான தண்டனைகளை அவர்கள் பெற்றே தீருவார்கள். 

இத்தவறுகளுக்காக தாங்கள் பாவமன்னிப்பு தேடி இருப்பீர்கள். இல்லாவிட்டால் தயவு செய்து பாவ மன்னிப்பு தேடிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் பாவத்தை மன்னிக்கட்டுமாக!
ஒரு சகோதரனின் மான மரியாதை மறைக்க வேண்டும் என இஸ்லாம் சொல்லிய போதும், தன் சுயநலத்திற்காக கடந்த போன ஒரு சம்பவத்தை எழுதுவது ஷைத்தானின் வரம்புமீறிய செயலாகும்.
தாங்களின் அதிகமான ஆக்கங்களை படித்து இருக்கிறேன். நல்ல மார்க்க விசயங்களை, சமுதாயம் பயன் பெறும் விசயங்களை எழுது வருகிறீர்கள். அதிலும் குறிப்பாக சஹாபாக்களின் வாழ்வினிலே என்ற கட்டுரைகள். மிக மிக அருமை.

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் தாங்கள் மீது வற்றாத பெரும் கருணையை பொழியட்டும் என துஆச் செய்கின்றேன்வஸ்ஸலாம்.
தாங்களின் மார்க்க சகோதரன்
அஹ்மது முஹைதீன்
சென்னை.
********************************************************************************************
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
சகோதரர் முகவை அப்பாஸ், உங்களின் ஆக்கங்களை intjonline.in என்ற இந்த இணையதளத்தில் அடிக்கடி படிப்பது

உண்டு. அல்லாஹ் உங்கள் மீது அருள் செய்யட்டும். அல்ஹம்துலில்லாஹ்.

அந்த வரிசையில் சென்ற வாரம் வந்த ஜூம்ஆ தொழுகையில் குத்பாவில் கைத்தடி; பீஜே அன்றும் இன்றும்! என்ற தலைப்பில் வந்த கட்டுரையை படித்தேன்.மாஷா அல்லாஹ்.... சகோதரர் முகவை அப்பாஸ், நீங்கள் நியாயமாக கேட்டுள்ள மார்க்க சமபந்தமான எந்த கேள்விக்கும்  பிஜெ அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை என்பதை அவரது பொறம்போக்கு பினாமியினை கொண்டு உங்களை வசைபாடுதல் மூலமாக நிரூபித்து வருகிறார். 

சகோதரர் பிஜெ அவர்கள், எந்த ஹதீஸ் அடிப்படையில் மார்க்க விஷயமாக தீர்வு சொன்னாரோ, அந்த ஹதீஸை கொண்டே முந்தைய தீர்ப்புக்கு முரணாக மறு தீர்வு சொல்கிறார் என்பதை ஆதாரபூர்வமாக  நிரூபித்துள்ளீர்கள். அதை பிஜெ மறுப்பதாக இருந்தால், நான் இந்த அடிப்படையில் முன்பு தீர்வு சொன்னேன், இந்த அடிப்படையில் இப்போது தீர்ப்பை மறுகிறேன் என சொல்ல வேண்டும்.   
அதை விடுத்து, அவரது சீடர்கள், பிஜெயின் தீர்ப்பை சிறப்புக்குரிய இமாம்களுடனும், மரியாதைக்குரிய சஹாபாக்காளின் நிலைப்பாட்டுடனும் ஏன் அருமைக்குரிய இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் தீர்ப்புடனும் ஒப்பிட்டுக் காட்டுகிறார்கள். நவுதுபில்லாஹ்.
இமாம் ஹனபியோ அல்லது ஷாபியோ அன்று ஒரு மார்க்க தீர்வை ஒரு ஹதீஸின் அடிப்படையில் சொல்லிருந்து, அதை பிறகு மாற்றுவதாக இருந்தால், அதை விட கூடுதலான ஆதாரம் உள்ள ஒரு ஹதீஸை கொண்டுதான் மாற்றி இருக்கிறார்களே தவிர, சகோ.பிஜெ போல், ஒரே ஹதீஸை கொண்டு அன்று ஒன்று சொல்லி, அது தனக்கு தற்பொழுது சரியாக படவில்லை என இன்று மாற்றி கூறியதாக நாம் பார்க்கவில்லை.  
சகோதரர் அப்பாஸ் அவர்களே! தாங்கள் என்ன தவறு செய்தீர்களோ, நான் தெரிந்து இருக்கவில்லை. அது எனக்கோ இந்த சமுதாயத்திற்கோ தேவையும் இல்லை என நினைக்கிறேன். பிஜெ அவர்களின் அமைப்பில் இருந்தப் பொழுது, தாங்கள் செய்தாக சொல்லப்படும் தவறுகளை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டு, அவரை விட்டு வெளியேறி, மார்க்கம் மற்றும் சமுதாய விசயங்களில் தவறு செய்கிறார் என்பதை சுட்டிக் காட்டும் பொழுது,  பொறாமையின் வெளிபாடாக உங்களை சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக இதை இப்போதும் நாகரிகமற்று எழுதுவதுவது, அவருக்கும், அவரது பினாமிக்கும் பெருமையாக தெரியலாம். ஆனால் அது இறைவன் முன்பு வெட்க கேடானது.   இது ஒரு கோழையின் செயலாகும். அதற்கான தண்டனைகளை அவர்கள் பெற்றே தீருவார்கள். 

இத்தவறுகளுக்காக தாங்கள் பாவமன்னிப்பு தேடி இருப்பீர்கள். இல்லாவிட்டால் தயவு செய்து பாவ மன்னிப்பு தேடிக் கொள்ளுங்கள். அல்லாஹ் உங்கள் பாவத்தை மன்னிக்கட்டுமாக!
ஒரு சகோதரனின் மான மரியாதை மறைக்க வேண்டும் என இஸ்லாம் சொல்லிய போதும், தன் சுயநலத்திற்காக கடந்த போன ஒரு சம்பவத்தை எழுதுவது ஷைத்தானின் வரம்புமீறிய செயலாகும்.
தாங்களின் அதிகமான ஆக்கங்களை படித்து இருக்கிறேன். நல்ல மார்க்க விசயங்களை, சமுதாயம் பயன் பெறும் விசயங்களை எழுது வருகிறீர்கள். அதிலும் குறிப்பாக சஹாபாக்களின் வாழ்வினிலே என்ற கட்டுரைகள். மிக மிக அருமை.

இன்ஷா அல்லாஹ், அல்லாஹ் தாங்கள் மீது வற்றாத பெரும் கருணையை பொழியட்டும் என துஆச் செய்கின்றேன்வஸ்ஸலாம்.
தாங்களின் மார்க்க சகோதரன்
அஹ்மது முஹைதீன்
சென்னை.

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010