********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சைபுல்லாஹ் செய்து காட்டிவிட்டார்; பீஜே செய்யத் தயாரா? - அப்துல் முஹைமின்

Saturday, September 17, 2011


ஒப்பற்ற  ஓரிறையின்  திருப்பெயரால்...

அண்ணன் ஜமாஅத்தின் பெயரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் வசூல் செய்து ஒரு இடத்தை வாங்கி, அதை தனது வேண்டப்பட்டவர் பெயரில் பதிவு செய்து தனதாக்கிக் கொண்டார் சைபுல்லாஹ். அதை ததஜ பெயரில் எழுதித் தராமல் மோசடி செய்து விட்டார் என்று சைபுல்லாஹ்வின் மீது குற்றம் சாட்டி ஒரு செட்டப் பொதுக்குழு நடத்தி, பைலாவுக்கு முரணாக சைபுல்லாஹ்வை அண்ணன் ஜமாஅத் நீக்கியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். எந்த மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் விரிவாக்கத்திற்காக அந்த இடத்தை சைபுல்லாஹ் வாங்கினாரோ, அதற்கு பயன்படும் வகையில் தனிநபர் பெயரில் பதிவு செய்திருந்த அந்த இடத்தை சங்கப்பதிவில் பதிவு செய்யப்பட்ட, ஜமாஅத் மஸ்ஜித் முபாரக் என்ற அமைப்பிற்கு எழுதித்தந்து பொதுவுடமையாக்கி விட்டார் சைபுல்லாஹ். அதற்கான அறிவிப்பு; 

முக்கிய அறிவிப்பு

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் மூலம் வசூல் செய்யப்பட்டு முபாரக் பள்ளிவாசல் விரிவாக்கத்திற்காக வாங்கப்பட்ட இடம் சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஜமாஅத்து மஸ்ஜித் முபாரக் (பதிவு எண் : 123 / 2011) என்ற அமைப்பிற்கு 08.07.2011 (வெள்ளிக்கிழமை) அன்று (ஆவண எண் : 4676) பத்திரப் பதிவு செய்யப்பட்டு பொதுவுடமையாக்கப்பட்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதற்கு உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் வல்ல அல்லாஹ் ஈருலகத்திலும் நல்லருள் புரிவானாக..

சைபுல்லாஹ்வின் மேற்கண்ட நடவடிக்கை மூலம், மோசடி செய்துவிட்டார் என்று அண்ணன் ஜமாத்தால் சுமத்தப்பட்ட அவதூறை விட்டும் 
நீங்கியதோடு, 
அண்ணன்  ஜமாத்தின் மிரட்டலுக்கு பணியாமல், அவர்களுக்கு எழுதித்தராமல் தான் வசூலித்த நோக்கத்தையும் நிறைவேற்றிஇருக்கிறார். இதன் மூலம் அந்த  இடம் தனி இயக்கத்திற்கு சொந்தமாகி விடாமல் அல்லாஹ்வின் ஆலயத்திற்கு கிடைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே பதிவு செய்கிறோம். தமுமுகவுக்காக வாங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்க உருவாக்கபப்ட்ட இரு டிரஸ்டு'களை அடாவடியாக அமுக்கிக் கொண்டு ஆயுட்கால சேர்மன் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டு, அந்த சொத்துக்களின் வரவு செலவுகளை மக்கள் மன்றத்தில் காட்டாமல் சர்வாதிகாரம்  செய்துவரும் அண்ணன், சைபுல்லாஹ்வை போல, வசூலிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு, தமுமுகவிடம் ஒப்படைத்து தன்னை தூயவான் என்று நிரூபிப்பாரா? அல்லது சில பல கோல்மால்  செய்து டிரஸ்டு சொத்துக்களை  விற்க முடியும் என்று பீஜே சொன்னாரே! அதை செய்யப் போகிறாரா? பார்ப்போமே.
********************************************************************************************

ஒப்பற்ற  ஓரிறையின்  திருப்பெயரால்...

அண்ணன் ஜமாஅத்தின் பெயரை பயன்படுத்தி லட்சக்கணக்கில் வசூல் செய்து ஒரு இடத்தை வாங்கி, அதை தனது வேண்டப்பட்டவர் பெயரில் பதிவு செய்து தனதாக்கிக் கொண்டார் சைபுல்லாஹ். அதை ததஜ பெயரில் எழுதித் தராமல் மோசடி செய்து விட்டார் என்று சைபுல்லாஹ்வின் மீது குற்றம் சாட்டி ஒரு செட்டப் பொதுக்குழு நடத்தி, பைலாவுக்கு முரணாக சைபுல்லாஹ்வை அண்ணன் ஜமாஅத் நீக்கியது அனைவருக்கும் நினைவிருக்கலாம். எந்த மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல் விரிவாக்கத்திற்காக அந்த இடத்தை சைபுல்லாஹ் வாங்கினாரோ, அதற்கு பயன்படும் வகையில் தனிநபர் பெயரில் பதிவு செய்திருந்த அந்த இடத்தை சங்கப்பதிவில் பதிவு செய்யப்பட்ட, ஜமாஅத் மஸ்ஜித் முபாரக் என்ற அமைப்பிற்கு எழுதித்தந்து பொதுவுடமையாக்கி விட்டார் சைபுல்லாஹ். அதற்கான அறிவிப்பு; 

முக்கிய அறிவிப்பு

அன்புள்ள கொள்கை சகோதரர்களுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
கடையநல்லூர் தவ்ஹீத் சகோதரர்கள் மூலம் வசூல் செய்யப்பட்டு முபாரக் பள்ளிவாசல் விரிவாக்கத்திற்காக வாங்கப்பட்ட இடம் சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஜமாஅத்து மஸ்ஜித் முபாரக் (பதிவு எண் : 123 / 2011) என்ற அமைப்பிற்கு 08.07.2011 (வெள்ளிக்கிழமை) அன்று (ஆவண எண் : 4676) பத்திரப் பதிவு செய்யப்பட்டு பொதுவுடமையாக்கப்பட்டு விட்டது. அல்ஹம்துலில்லாஹ். இதற்கு உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் வல்ல அல்லாஹ் ஈருலகத்திலும் நல்லருள் புரிவானாக..

சைபுல்லாஹ்வின் மேற்கண்ட நடவடிக்கை மூலம், மோசடி செய்துவிட்டார் என்று அண்ணன் ஜமாத்தால் சுமத்தப்பட்ட அவதூறை விட்டும் 
நீங்கியதோடு, 
அண்ணன்  ஜமாத்தின் மிரட்டலுக்கு பணியாமல், அவர்களுக்கு எழுதித்தராமல் தான் வசூலித்த நோக்கத்தையும் நிறைவேற்றிஇருக்கிறார். இதன் மூலம் அந்த  இடம் தனி இயக்கத்திற்கு சொந்தமாகி விடாமல் அல்லாஹ்வின் ஆலயத்திற்கு கிடைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கே பதிவு செய்கிறோம். தமுமுகவுக்காக வாங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்க உருவாக்கபப்ட்ட இரு டிரஸ்டு'களை அடாவடியாக அமுக்கிக் கொண்டு ஆயுட்கால சேர்மன் என்று அழிச்சாட்டியம் செய்து கொண்டு, அந்த சொத்துக்களின் வரவு செலவுகளை மக்கள் மன்றத்தில் காட்டாமல் சர்வாதிகாரம்  செய்துவரும் அண்ணன், சைபுல்லாஹ்வை போல, வசூலிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு, தமுமுகவிடம் ஒப்படைத்து தன்னை தூயவான் என்று நிரூபிப்பாரா? அல்லது சில பல கோல்மால்  செய்து டிரஸ்டு சொத்துக்களை  விற்க முடியும் என்று பீஜே சொன்னாரே! அதை செய்யப் போகிறாரா? பார்ப்போமே.

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010