********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

அன்னா ஹசாரே போராட்டம்: சங்பரிவார் மற்றும் அமெரிக்க ஆதரவு அம்பலம் - தமுமுக

Sunday, September 4, 2011


அன்னா ஹசாரே யின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு அன்னிய நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது.
இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்பரிவார பயங்கரவாத இயக் கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு தாராளமாக செலவழிப்பதாக ஆதாரப்பூர்வ தகவல் கள் தெரிவிக்கின்றன.

ஹசாரே குழுவினரின் பிரதிநிதியாக செயல்படும் அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பான ‘கபீர்’ மூலமாக போராட்டத்திற்கு அந்நிய நிதி வருகிறது. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற அமைப்பு கேஜ்ரவாலின் ‘கபீர்’ அமைப்பிற்கு இவ்வாண்டு இரண்டு லட்சம் டாலர் அளித்துள்ளது. இப்பணத்தின் பெரும்பகுதியும் ஹசாரேவின் போராட்டத்தை பிரபலப்படுத்த செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஹசாரேவின் போராட்டத்திற்கு பணத்தை இறைக்கின்றன. முன்னாள் இந்தியன் ரெவினியூ சர்வீஸ் பணியாளரான அரவிந்த் கேஜ்ரவால் கார்பரேட்டுகளுடன் நெருங்கிய தொடர்புடையவர். ஹசாரேவின் போராட்டத்திற்கு வலைதள உலகிலும் செயற்கையான எழுச்சி பிரச்சாரம் நடைபெறுகிறது. எஸ்.எம்.எஸ், இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியன வழியாக நடத்தப்படும் பிரச்சாரத்திற்கு அரவிந்த் கேஜ்ரவாலுடன் செயல்படும் அஸ்வதி முரளீதரனும், மனீஷ் ஸிஸோடி போன்றோரும் முதுகெலும்பாக செயல்பட்டுள்ளனர்.

தகவல் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ’கபீர்’ என்ற அமைப்பின் எக்ஸ்க்யூட்டிவ் உறுப்பினர்தாம் கேஜ்ரவால். தற்போது ஹசாரேவின் போராட்டத்திற்கான பிரச்சாரத்தை இவ்வமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. காந்தியவாதியாக வேடமிடும் அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு அமைப்பாளர்களாக காந்தியைக் கொலை செய்த தேசத்துரோக ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் துணை அமைப்புகளான வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், யுவமோர்ச்சா, ஏ.பி.வி.பி போன்றவை உள்ளன. இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்தாம் ஹசாரேவுக்காக வீதிகளில் இறங்கியுள்ளனர்.

யூத் எகைன்ஸ்ட் கரப்ட்(ஒய்.எ.சி), இந்தியா எகைன்ஸ்ட் கரப்ட்(ஐ.எ.சி) ஆகிய ஹசாரே ஆதரவு இயக்கங்களை கட்டுப்படுத்துவது சங்பரிவார் அமைப்புகளாகும். ஒய்.ஏ.சி இணை கன்வீனர் கோபால் அகர்வால், ஏ.பி.வி.பியின் தலைவராவார். ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தனது வலைப்பூவில் ஹசாரேவின் பிரச்சார இயக்கத்தை அவசரக் காலக்கட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயாணன் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் நடத்திய போராட்டத்திற்கு ஒப்பீடு செய்கிறார். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்ஸும், ஏ.பி.வி.பியும் முக்கியப் பங்கை ஆற்றியுள்ளன. அதுபோலவே ஊழலுக்கு எதிரான இதரப் போராட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அதன் பங்கை வகிக்கும் என ராம் மாதவ் கூறுகிறார்.

ஹசாரேவின் போராட்டத்தை நாங்கள் வெற்றிபெறச் செய்வோம் என வி.ஹெச்.பியின் செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சலும் தெரிவித்துள்ளார். ஹசாரேவுடன் போராட்டத்திற்கு களமிறங்கப் போவதாக பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரியும் கூறியுள்ளார்.

முன்பு கறுப்புப் பணத்திற்கு எதிராகப் போராட ஹைடெக் யோகா குரு ராம்தேவை களமிறக்கி ஆதாயம் தேட முயன்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் முயற்சியை மத்திய அரசு முறியடித்திருந்தது. தற்போது காந்தியவாதி வேடத்தில் அன்னா ஹசாரே காங்கிரஸ் எதிர்ப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறார். இது காவி முகாம் எழுச்சிபெற நடைபெறும் மறைமுக சதித்திட்டமாகவே உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
********************************************************************************************

அன்னா ஹசாரே யின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்திற்கு அன்னிய நிதி தாராளமாக செலவழிக்கப்படுகிறது.
இப்போராட்டத்தின் அமைப்பாளர்களாக சங்பரிவார பயங்கரவாத இயக் கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற வெளிநாட்டு அமைப்பின் பணம்தான் அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு தாராளமாக செலவழிப்பதாக ஆதாரப்பூர்வ தகவல் கள் தெரிவிக்கின்றன.

ஹசாரே குழுவினரின் பிரதிநிதியாக செயல்படும் அரவிந்த் கேஜ்ரவாலின் அமைப்பான ‘கபீர்’ மூலமாக போராட்டத்திற்கு அந்நிய நிதி வருகிறது. ஃபோர்ட் ஃபவுண்டேசன் என்ற அமைப்பு கேஜ்ரவாலின் ‘கபீர்’ அமைப்பிற்கு இவ்வாண்டு இரண்டு லட்சம் டாலர் அளித்துள்ளது. இப்பணத்தின் பெரும்பகுதியும் ஹசாரேவின் போராட்டத்தை பிரபலப்படுத்த செய்யவே பயன்படுத்தப்பட்டுள்ளன.

பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஹசாரேவின் போராட்டத்திற்கு பணத்தை இறைக்கின்றன. முன்னாள் இந்தியன் ரெவினியூ சர்வீஸ் பணியாளரான அரவிந்த் கேஜ்ரவால் கார்பரேட்டுகளுடன் நெருங்கிய தொடர்புடையவர். ஹசாரேவின் போராட்டத்திற்கு வலைதள உலகிலும் செயற்கையான எழுச்சி பிரச்சாரம் நடைபெறுகிறது. எஸ்.எம்.எஸ், இமெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியன வழியாக நடத்தப்படும் பிரச்சாரத்திற்கு அரவிந்த் கேஜ்ரவாலுடன் செயல்படும் அஸ்வதி முரளீதரனும், மனீஷ் ஸிஸோடி போன்றோரும் முதுகெலும்பாக செயல்பட்டுள்ளனர்.

தகவல் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ’கபீர்’ என்ற அமைப்பின் எக்ஸ்க்யூட்டிவ் உறுப்பினர்தாம் கேஜ்ரவால். தற்போது ஹசாரேவின் போராட்டத்திற்கான பிரச்சாரத்தை இவ்வமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. காந்தியவாதியாக வேடமிடும் அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு அமைப்பாளர்களாக காந்தியைக் கொலை செய்த தேசத்துரோக ஆர்.எஸ்.எஸ்.ஸும் அதன் துணை அமைப்புகளான வி.ஹெச்.பி, பஜ்ரங்தள், யுவமோர்ச்சா, ஏ.பி.வி.பி போன்றவை உள்ளன. இந்த அமைப்பைச் சார்ந்தவர்கள்தாம் ஹசாரேவுக்காக வீதிகளில் இறங்கியுள்ளனர்.

யூத் எகைன்ஸ்ட் கரப்ட்(ஒய்.எ.சி), இந்தியா எகைன்ஸ்ட் கரப்ட்(ஐ.எ.சி) ஆகிய ஹசாரே ஆதரவு இயக்கங்களை கட்டுப்படுத்துவது சங்பரிவார் அமைப்புகளாகும். ஒய்.ஏ.சி இணை கன்வீனர் கோபால் அகர்வால், ஏ.பி.வி.பியின் தலைவராவார். ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ் தனது வலைப்பூவில் ஹசாரேவின் பிரச்சார இயக்கத்தை அவசரக் காலக்கட்டத்தில் ஜெயப்பிரகாஷ் நாராயாணன் ஆர்.எஸ்.எஸ். ஆதரவுடன் நடத்திய போராட்டத்திற்கு ஒப்பீடு செய்கிறார். ஜெயப்பிரகாஷ் நாராயணனின் தலைமையில் நடந்த போராட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ்ஸும், ஏ.பி.வி.பியும் முக்கியப் பங்கை ஆற்றியுள்ளன. அதுபோலவே ஊழலுக்கு எதிரான இதரப் போராட்டங்களிலும் ஆர்.எஸ்.எஸ். அதன் பங்கை வகிக்கும் என ராம் மாதவ் கூறுகிறார்.

ஹசாரேவின் போராட்டத்தை நாங்கள் வெற்றிபெறச் செய்வோம் என வி.ஹெச்.பியின் செய்தித்தொடர்பாளர் வினோத் பன்சலும் தெரிவித்துள்ளார். ஹசாரேவுடன் போராட்டத்திற்கு களமிறங்கப் போவதாக பா.ஜ.க. தலைவர் நிதின் கட்கரியும் கூறியுள்ளார்.

முன்பு கறுப்புப் பணத்திற்கு எதிராகப் போராட ஹைடெக் யோகா குரு ராம்தேவை களமிறக்கி ஆதாயம் தேட முயன்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் முயற்சியை மத்திய அரசு முறியடித்திருந்தது. தற்போது காந்தியவாதி வேடத்தில் அன்னா ஹசாரே காங்கிரஸ் எதிர்ப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறார். இது காவி முகாம் எழுச்சிபெற நடைபெறும் மறைமுக சதித்திட்டமாகவே உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010