********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

உணர்வு அலுவலகம் மீட்பு; ஒரே போராட்டத்தில் ஊத்திமூடிய அவலம். - அப்துல் முஹைமின்

Monday, July 4, 2011

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கேள்வி; இந்த உணர்வு அலுவலக ஆக்கிரமிப்புக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  நடத்தப்படுவதாக இருந்த சட்டமன்ற முற்றுகையும்,

அதிகாரிகள் துணை இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில்
முடிவெடுக்கப்பட்ட தர்ணா போராட்டங்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரால் முழுமையாக கைவிடப் பட்டது. இந்த சட்ட விரோத ஆக்கிரமிப்பை முதல்வர் விரும்பவில்லை எனபது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் மூலம் மிகத் தெளிவாகிவிட்டது. [உணர்வு ஜூலை 1 -7  பக்கம் 14 ]

என்று கூறியதன் மூலம் போராட்டங்களை அண்ணன் ஜமாஅத் போராட்டங்களை கைவிட்டதாக தெரிகிறதே? 
-அப்துல்லாஹ். பாப்பாவூர்.

பதில்; தமுமுகவால் கைப்பற்றப்பட்ட உணர்வு அலுவலகத்தை[?] மீட்பது மார்க்கத்தின் கடமை என்று பேசியதோடு, 'ஏகத்துவத்தை பாதுக்காக்க அணி திரண்டு வாருங்கள் என்று அறை கூவல்  விடுத்தது அண்ணன் ஜமாஅத். முதலில் தமுமுகவின் இந்த ஆக்கிரமிப்பு, காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடும், காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் ஆசியோடும் தான் இந்தச் சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதியானதால் ஜூன் 9ஆம் தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டம் என்றார்கள்.

பின்னர்,

மமகட்சியின் இந்த அராஜகங்களுக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்கிறதா? அல்லது அரசுக்கு தெரியாமலேயே இவர்கள் ஆட்டம் போடுகிறார்களா என்ற சந்தேகமாக  இருக்கிறது என்று அந்தர் பல்டியடித்து 09 .6 .2011   அன்று நடை பெறவிருந்த தமிழக சட்டமன்ற முற்றுகை போரடடத்தை ஜூன் 14  ம் தள்ளி வைத்ததோடு அதற்குள் தங்களிடம் சாவி ஒப்படைக்கப்பட  வேண்டும் என்று அதிகாரிகளிடம் கண்டிப்பாக கூறியுள்ளதாக கூப்பாடும்  போட்டார்கள்.

இவர்கள் கூறியது போன்று சாவி கிடைக்காத  நிலையில், இவர்கள் அறிவித்தபடி 14  ம் தேதி சட்டமன்ற முற்றுகை அல்லது முதல்வர் வீடு முற்றுகை உறுதியாக நடத்தியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் அதிலிருந்தும் பல்டியடித்து அடுத்த சட்டமன்றம் எப்போது கூடுகிறதோ அன்றைக்கு முற்றுகை என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பின் போது, ''காவல்துறை தமுமுகவிடமிருந்து சாவியை வாங்கி நம்மிடம் தராமல் ஆர்.டி.ஒ விடம் வழங்கி விட்டது. எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் போல பல ஆண்டுகளுக்கு பூட்டி  வைத்து நம்மை ஏமாற்ற நினைக்கிறது. எனவே இந்த காவல்துறை ஒரு போதும்   திருந்தப் போவதில்லை. எனவே காவல்துறைக்குக்கும், அரசுக்கும்  நமது கண்டனத்தை  வலுவாக பதிவு செய்யவே சட்டமன்றம் கூடும் முதல் நாள் முற்றுகை போராட்டம் என்றார்கள். பார்க்க; http://www.tntj.net/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/

இதற்கிடையில் திடீரென்று,
1- ஒரு வாரத்துக்குள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தர்னா – தொடர் முழக்கப்போர்ராட்டம் – நடத்துவது
2- சட்ட சபை கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன் சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்துவது
3- நமக்குச் சொந்தமான உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் போரட்டத்துக்கான தேதியை சட்ட சபை முற்றுகைப் போராட்டத்தில் அறிவித்து அந்தப் போராட்டத்தை வீரியத்துடன் செயல்படுத்துவது
4- உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் அந்தப் போராட்டத்தின் போது நான்காம் கட்டமாக இறுதிக் கட்ட போராட்டத்தை அறிவிப்பது .
என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். சொன்னது மாதிரி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தாமல் சென்னையில்  மட்டும் கடந்த 28  ம் தேதி போராட்டம் நடத்தியவர்கள் அது பிசுபிசுத்த காரணத்தால் இப்போது நீங்கள் சொன்னது போன்று போராட்டத்தை ஒத்தி வைத்ததோடு இன்னொரு தமாஷான விஷயத்தையும் சொல்லியுள்ளார்கள்.
''மம கட்சியினரின் உணர்வு அலுவக ஆக்கிரமிப்பை அடியோடு பெயர்த்தெறிந்து எச்சரிக்கை விடுத்ததன் மூலம் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வெறுப்பைச் சம்பாதிப்பதில் இருந்து தன்னைக் காத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்' என்று கூறியுள்ளார்கள்.
என்ன புரிகிறதா? தமுமுகவின் ஆக்கிரமிப்புக்கு ஜெயலலிதாவோ அவரது அதிகாரிகளோ  காரணம் இல்லை என்று இவர்கள் அதிகாரிகளின் நடவடிக்கை மூலம் புரிந்து கொண்டார்களாம். எனவே போராட்டம் ரத்தாம். ஆகா என்னே ஞானோதயம்? அதிகாரிகளின் எந்த நடவடிக்கையை பார்த்து  இவர்கள் திருப்தியடைந்தார்கள்? சாவியை இவர்களிடம் தந்து விட்டார்களா? ''சாவியை அதிகாரிகள் கைப்பற்றி ஆர்.டி.ஒ. விடம் ஒப்படைத்து விட்டார்கள். இந்த அலுவலகத்தை  இன்னொரு எஸ். பி. பட்டினமாக்க  பார்க்கிறார்கள் என்று குமுறித்தானே சட்டமன்றம் கூடும் முதல் நாள் போராட்டம் என்றீர்கள்? பார்க்க வீடியோ;http://www.tntj.net/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/
இப்போது இவர்கள் போராட்டங்கள் ரத்து என்று சொல்வதற்கு அதிகாரிகளின் செயல்பாடுகள் காரணமல்ல. மாறாக தமுமுக வைத்த 'செக்' தான்  காரணம். சாவி ஆர்.டி. ஓ கையில் சென்றவுடன் எப்படியாவது நம்ம கைக்கு வந்துவிடும் என்ற நப்பாசையில் இருந்த அண்ணன் ஜமாஅத்தின் 
எண்ணத்தில் மண்ணள்ளி போட்டது தமுமுக. ஆர்.டி.ஓ விசாரணைக்கு கோர்ட்டில் தடை வாங்கிவிட்டது தமுமுக. அதனால் அந்த  தடையை உடைக்க அண்ணன் ஜமாஅத் கோர்ட்டு படியேறியே தீர வேண்டும். என்னதான் ஆர்பாட்டம்- முற்றுகை என்று காட்டுக் கத்தல் கத்தினாலும், கோர்ட்டில் ஆர்.டி.ஓ விசாரணைக்கு தடை  இருக்கும் வரைக்கும் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. அது மட்டுமன்றி சமீபத்தில் நடத்திய போராட்டம் பிசுபிசுத்ததோடு சமுதாயத்தவரின் எதிர்ப்பையும் அண்ணன் ஜமாத்திற்கு பெற்றுத் தந்ததால்  தான் இந்த ஒத்தி வைப்புகள் என்பதுதான் உண்மை. அனாலும் அண்ணனை பின்பற்றும் அவரது தம்பிகளுக்கு ஒரு போதும் மண்டையில் ஏறாது.
********************************************************************************************
ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்...

கேள்வி; இந்த உணர்வு அலுவலக ஆக்கிரமிப்புக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில்  நடத்தப்படுவதாக இருந்த சட்டமன்ற முற்றுகையும்,

அதிகாரிகள் துணை இருக்குமோ என்ற சந்தேகத்தின் அடிப்படையில்
முடிவெடுக்கப்பட்ட தர்ணா போராட்டங்களும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரால் முழுமையாக கைவிடப் பட்டது. இந்த சட்ட விரோத ஆக்கிரமிப்பை முதல்வர் விரும்பவில்லை எனபது அதிகாரிகள் எடுத்த நடவடிக்கைகள் மூலம் மிகத் தெளிவாகிவிட்டது. [உணர்வு ஜூலை 1 -7  பக்கம் 14 ]

என்று கூறியதன் மூலம் போராட்டங்களை அண்ணன் ஜமாஅத் போராட்டங்களை கைவிட்டதாக தெரிகிறதே? 
-அப்துல்லாஹ். பாப்பாவூர்.

பதில்; தமுமுகவால் கைப்பற்றப்பட்ட உணர்வு அலுவலகத்தை[?] மீட்பது மார்க்கத்தின் கடமை என்று பேசியதோடு, 'ஏகத்துவத்தை பாதுக்காக்க அணி திரண்டு வாருங்கள் என்று அறை கூவல்  விடுத்தது அண்ணன் ஜமாஅத். முதலில் தமுமுகவின் இந்த ஆக்கிரமிப்பு, காவல்துறையின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடும், காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வரின் ஆசியோடும் தான் இந்தச் சட்ட விரோத ஆக்கிரமிப்பு நடந்துள்ளது என்ற சந்தேகம் உறுதியானதால் ஜூன் 9ஆம் தேதி சட்டமன்ற முற்றுகை போராட்டம் என்றார்கள்.

பின்னர்,

மமகட்சியின் இந்த அராஜகங்களுக்கு அதிமுக அரசின் ஆதரவு இருக்கிறதா? அல்லது அரசுக்கு தெரியாமலேயே இவர்கள் ஆட்டம் போடுகிறார்களா என்ற சந்தேகமாக  இருக்கிறது என்று அந்தர் பல்டியடித்து 09 .6 .2011   அன்று நடை பெறவிருந்த தமிழக சட்டமன்ற முற்றுகை போரடடத்தை ஜூன் 14  ம் தள்ளி வைத்ததோடு அதற்குள் தங்களிடம் சாவி ஒப்படைக்கப்பட  வேண்டும் என்று அதிகாரிகளிடம் கண்டிப்பாக கூறியுள்ளதாக கூப்பாடும்  போட்டார்கள்.

இவர்கள் கூறியது போன்று சாவி கிடைக்காத  நிலையில், இவர்கள் அறிவித்தபடி 14  ம் தேதி சட்டமன்ற முற்றுகை அல்லது முதல்வர் வீடு முற்றுகை உறுதியாக நடத்தியிருக்க வேண்டுமல்லவா? ஆனால் அதிலிருந்தும் பல்டியடித்து அடுத்த சட்டமன்றம் எப்போது கூடுகிறதோ அன்றைக்கு முற்றுகை என்று அறிவித்தார்கள். அந்த அறிவிப்பின் போது, ''காவல்துறை தமுமுகவிடமிருந்து சாவியை வாங்கி நம்மிடம் தராமல் ஆர்.டி.ஒ விடம் வழங்கி விட்டது. எஸ்.பி. பட்டினம் பள்ளிவாசல் போல பல ஆண்டுகளுக்கு பூட்டி  வைத்து நம்மை ஏமாற்ற நினைக்கிறது. எனவே இந்த காவல்துறை ஒரு போதும்   திருந்தப் போவதில்லை. எனவே காவல்துறைக்குக்கும், அரசுக்கும்  நமது கண்டனத்தை  வலுவாக பதிவு செய்யவே சட்டமன்றம் கூடும் முதல் நாள் முற்றுகை போராட்டம் என்றார்கள். பார்க்க; http://www.tntj.net/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/

இதற்கிடையில் திடீரென்று,
1- ஒரு வாரத்துக்குள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தர்னா – தொடர் முழக்கப்போர்ராட்டம் – நடத்துவது
2- சட்ட சபை கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடன் சட்ட சபை முற்றுகை போராட்டம் நடத்துவது
3- நமக்குச் சொந்தமான உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் போரட்டத்துக்கான தேதியை சட்ட சபை முற்றுகைப் போராட்டத்தில் அறிவித்து அந்தப் போராட்டத்தை வீரியத்துடன் செயல்படுத்துவது
4- உணர்வு அலுவலகத்தைக் கைப்பற்றும் அந்தப் போராட்டத்தின் போது நான்காம் கட்டமாக இறுதிக் கட்ட போராட்டத்தை அறிவிப்பது .
என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். சொன்னது மாதிரி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடத்தாமல் சென்னையில்  மட்டும் கடந்த 28  ம் தேதி போராட்டம் நடத்தியவர்கள் அது பிசுபிசுத்த காரணத்தால் இப்போது நீங்கள் சொன்னது போன்று போராட்டத்தை ஒத்தி வைத்ததோடு இன்னொரு தமாஷான விஷயத்தையும் சொல்லியுள்ளார்கள்.
''மம கட்சியினரின் உணர்வு அலுவக ஆக்கிரமிப்பை அடியோடு பெயர்த்தெறிந்து எச்சரிக்கை விடுத்ததன் மூலம் ஜெயலலிதா அவர்கள் தமிழகத்தில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வெறுப்பைச் சம்பாதிப்பதில் இருந்து தன்னைக் காத்துக் கொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்' என்று கூறியுள்ளார்கள்.
என்ன புரிகிறதா? தமுமுகவின் ஆக்கிரமிப்புக்கு ஜெயலலிதாவோ அவரது அதிகாரிகளோ  காரணம் இல்லை என்று இவர்கள் அதிகாரிகளின் நடவடிக்கை மூலம் புரிந்து கொண்டார்களாம். எனவே போராட்டம் ரத்தாம். ஆகா என்னே ஞானோதயம்? அதிகாரிகளின் எந்த நடவடிக்கையை பார்த்து  இவர்கள் திருப்தியடைந்தார்கள்? சாவியை இவர்களிடம் தந்து விட்டார்களா? ''சாவியை அதிகாரிகள் கைப்பற்றி ஆர்.டி.ஒ. விடம் ஒப்படைத்து விட்டார்கள். இந்த அலுவலகத்தை  இன்னொரு எஸ். பி. பட்டினமாக்க  பார்க்கிறார்கள் என்று குமுறித்தானே சட்டமன்றம் கூடும் முதல் நாள் போராட்டம் என்றீர்கள்? பார்க்க வீடியோ;http://www.tntj.net/%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/%e0%ae%9a%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%82%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2/
இப்போது இவர்கள் போராட்டங்கள் ரத்து என்று சொல்வதற்கு அதிகாரிகளின் செயல்பாடுகள் காரணமல்ல. மாறாக தமுமுக வைத்த 'செக்' தான்  காரணம். சாவி ஆர்.டி. ஓ கையில் சென்றவுடன் எப்படியாவது நம்ம கைக்கு வந்துவிடும் என்ற நப்பாசையில் இருந்த அண்ணன் ஜமாஅத்தின் 
எண்ணத்தில் மண்ணள்ளி போட்டது தமுமுக. ஆர்.டி.ஓ விசாரணைக்கு கோர்ட்டில் தடை வாங்கிவிட்டது தமுமுக. அதனால் அந்த  தடையை உடைக்க அண்ணன் ஜமாஅத் கோர்ட்டு படியேறியே தீர வேண்டும். என்னதான் ஆர்பாட்டம்- முற்றுகை என்று காட்டுக் கத்தல் கத்தினாலும், கோர்ட்டில் ஆர்.டி.ஓ விசாரணைக்கு தடை  இருக்கும் வரைக்கும் ஒரு துரும்பைக் கூட அசைக்க முடியாது. அது மட்டுமன்றி சமீபத்தில் நடத்திய போராட்டம் பிசுபிசுத்ததோடு சமுதாயத்தவரின் எதிர்ப்பையும் அண்ணன் ஜமாத்திற்கு பெற்றுத் தந்ததால்  தான் இந்த ஒத்தி வைப்புகள் என்பதுதான் உண்மை. அனாலும் அண்ணனை பின்பற்றும் அவரது தம்பிகளுக்கு ஒரு போதும் மண்டையில் ஏறாது.

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010