********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

மேலப்பாளையத்தில் பல கோடி ஸ்வாஹா! மோசடிக்கு துணை போன லுஹா! - செங்கிஸ்கான்

Tuesday, July 12, 2011





















பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அன்புள்ள செங்கிஸ்கான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..காலையில் நீங்கள் போன் போடும்போது நான் பிசியாகி விட்டேன். மாலையில் நான் போன் போடும்போது நீங்கள் பிசியாகி விட்டீர்கள். கைர் விஷயத்துக்கு வருகிறேன்.

வியாபாரம் என்றால் லாபமும் வரும் நஷ்டமும் வரும். லாபம் வரும்போது சந்தோசமாக வாங்கினீர்களே யாரிடமும் போய் சொன்னீர்களா? நஷ்டம் வந்ததும் ஏன் பிரச்சனை பண்ணுகிறீர்கள் என்று லுஹா கோபமாக குத்பாவில் பேசி வருகிறார்.

வியாபாரம் என்றால் லாபமும் வரும் நஷ்டமும் வரும் என்பது உண்மைதான். லாபம் என்பதை மாதம் ஒரு லட்சம் என்று கூறி வந்திருக்கிறார்கள். நஷ்டம் என்பதை ஒரே மாதத்தில் 50கோடிக்கு மேல் நஷ்டம் என்று கை விரித்து இருக்கிறார்கள்.

இதுவரை என்ன வியாபாரம் என்றும் யார் பொறுப்பில் நடக்கிறது என்றும் சரியாக தெளிவாக தெரியப்படுத்தவே இல்லை.

வெளியில் சொல்ல முடியாது ரகசியம் ஆனால் ஹலால்தான்.

அரசாங்கத்தை ஏமாற்றும் வியாபாரம் ஆனால் ஹலால்தான்.

தூத்துக்குடி கப்பலில் இரும்பு வரும் அரசாங்கத்துக்கு தெரியாமல் வாங்கி அரசாங்கத்துக்கே விற்கும் வியாபாரம்.

கப்பலில் சோப்பு, சீப்பு, கண்டது கழியது என பல வரும் அதை காண்ராக்ட்டாக எடுத்து விற்கும் வியாபாரம்.

பொருள் நல்ல பொருள்தான் வெளிநாட்டில் தேதி முடிந்து விட்டது (எக்ஸ்பெரி ஆகி விட்டது) என்றாலும் டேமேஜ் பீஸ் என்றாலும் குப்பையில் போட்டு விடுவார்கள். அவற்றை கொண்டு வந்து இந்தியாவில் விற்கும் வியாபாரம்.

இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக கூறி இருக்கிறார்கள்.

முதலில் 25ஆயிரமாக பலரிடம் வாங்கி இருக்கிறார்கள். 25 ஆயிரத்துக்கு மாதம் 5 ஆயிரம் லாபமாம். இதில் பணம் கொடுத்தவருக்கு மாதம் 3 ஆயிரம் வாங்கி கொடுத்தவருக்கு 2ஆயிரம். இது பொது நியதி.

இதில் மசூது ஆலிம் மூலம் கொடுத்தால் பணம் கொடுத்தவருக்கு மாதம் 2500. மசூது ஆலிமுக்கு 2500. லுஹா மூலம் கொடுத்தால் பணம் கொடுத்தவருக்கு மாதம் 2000. லுஹாவுக்கு 3000.

இப்படியாக ஒரு 4 மாதம் கதையை ஓட்டி இருக்கிறார்கள். இது ஹலாலா இது ஹலாலா என்ற கேள்விக்கு ஹலால் ஹலால் என்ற உறுதியான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள் லுஹா, மசூது ஆகிய முப்திகள். இதன் மூலம் த.த.ஜ.வினரை மட்டுமல்ல சுத்தமான ஹக் மார்க்க தவ்ஹீதுவாதிகள் அனைவரையும் வீதியில் இறக்கி விட்டிருக்கிறார்கள்.

25க்கு 3 வாங்கி ருசி கண்டவர்கள். இதை பார்த்து ஆசைபட்டவர்கள் என அனைவரும் குடி இருந்த வீடுகளை, நகைகளை விற்றும் அடைமானத்துக்கு வைத்தும் லட்சம் லட்சமாக கொடுத்து இருக்கிறார்கள்.

பணம் கொடுத்த யாருக்கும் எழுத்து மூலமாக பணம் பெற்றதற்கு எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. ஒரே ஆதாரம் அந்த சாப்பாடு சாப்பிட மாட்டோம் இந்த சாப்பாடு சாப்பிட மாட்டோம் என்ற கூப்பாடு போடும் தவ்ஹீதுவாதிகள் என்ற ஆதாரம் மட்டும்தான்.

லுஹா பத்வாவை நம்பி பணம் கொடுக்காதீர்கள் 97க்கு முன்பு வரை ஜிஹாது ஜிஹாது என முழங்கி இளைஞர்கள் அனைவரையும் தூண்டி விட்டு உள்ளே போக வைத்தான். கடைசியில் நான் பேசினேன் உங்களுக்கு சிந்திக்கும் மூளை இல்லையா என்று கழன்று கொண்டான். லுஹா ஒரு மண் சுவர் நம்பாதீர்கள். அவனுக்கு கிடைக்கும் அற்ப லாபத்துக்காக விலை போகக் கூடியவன். அனுபவ ரீதியாக பார்த்தவன் என்றேன்.

2011மார்ச் 13ல் தாயகம் வரும் முன்பே பலரிடம் போன் போட்டு பேசி இது ஹலாலான வழி அல்ல. லுஹாவுக்கு ஒரு அமவ்ண்டு கிடைத்திருக்கிறது. மசூது ஆலீமுக்கும் ஒரு பெரிய அமவ்ண்டு கிடைத்திருக்கிறது. அதற்காக இதற்கு ஹலால் பத்வா கொடுத்து இருக்கிறார்கள். இதன் பின்னணியில் போதை பொருள் விற்பனை இருக்கிறது என்பதை நான் அறிந்து விட்டேன் என்று கூறினேன். யாரும் கேட்கவில்லை என்னை வெறுத்தார்கள்.

தாயகம் சென்ற என்னை காண வரக் கூடியவர்களில் பல தவ்ஹீதுவாதிகள் வரவில்லை. லுஹா மீது கொண்ட வெறுப்பால் ஒரு ஹலாலான வியாபராத்தை நான் அசிங்கப்படுத்தி விட்டதாகக் கூறினார்கள்.

மாத மாதம் வந்த லாபம் திடீரென வரவில்லை. தேர்தல் வருகிறது ஆட்சி மாறினால் இந்த தொழிலை தொடர்ந்து நடத்த முடியுமா என்பதை சொல்ல முடியாது என்ற செய்தியை விட்டார்கள்.

தேர்தல் கெடுபிடியால் பணம் கொண்டு வர முடியவில்லை. என்ற செய்தியை விட்டு பார்த்தார்கள்.

ஆட்சி மாறி விட்டதால் புது லைசென்சு போட வேண்டி உள்ளது என்றும் என்றும் காதில் பூ சுற்றினார்கள்.

கடைசியாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று கூறி வருகிறார்கள்.

வியாபாரம் என்றால் லாபமும் வரும் நஷ்டமும் வரும். ஓரே மாதத்தில் போட்ட அனைத்து முதலும் போய் விடுமா? ஒரே மாதத்தில் 50கோடிக்கு மேல் நஷ்டம் என்கிறார்கள். இதை சமுதாயம் நம்ப வேண்டும் என்கிறார்கள்.

புருஷனுக்குத் தெரியாமல் பணம் கொடுத்த மனைவிகள். பிள்ளைக்கு தெரியாமல் பணம் கொடுத்த பெற்றோர்கள். அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக விஸா இருந்தும் அரபு நாடு போகாமல் விஸா தேதியை காலாவதி ஆக்கி விட்டவர்கள். ஒரு லட்சத்துக்கு மாதம் 12 ஆயிரம் என்றவுடன் விஸாவை கேன்சல் செய்து விட்டு சர்வீஸ் பணத்தை அப்படியே கொண்டு போய் கொடுத்தவர்கள். இப்பொழுது ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியாமல் கண்ணீர் வடிக்கிறார்கள்.
இந்த தொழில் ஹராம் என்று பி.ஜெ. கூறி விட்டதாக  இன்று செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் அந்த பி.ஜெ. நெல்லை வந்தபொழுது இந்த தொழிலின் தலைவர் த.த.ஜ. கபூர் என்பரது சொகுசு வண்டியில்தான் பவனி வந்திருக்கிறார்.

தூக்கு போட்டு தொங்க சென்ற இருவர்.

விஷ மருந்து குடிக்கச் சென்ற ஒருவன்.

மாடியிலிருந்து குதிக்கச் சென்ற ஒருவன்.
இப்படியாக 4 பேர் தடுத்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

முப்தி லுஹாவோ வியாபாரம் என்றால் லாபமும் வரும் நஷ்டமும் வரும் என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்.
 இது வரை என்ன வியாபாரம் செய்தோம்.
 யார் பெயரில் லைசென்ஸ் போட்டிருந்தோம்.
எந்த இடத்தில் வைத்து விற்பனை செய்தோம்.
 என்ன என்ன விற்பனை செய்தோம்.
எங்கே வாங்கினோம் எந்த வியாபாரியிடம் வாங்கினோம் என்பதை லுஹாவும் சொல்லவில்லை. மசூது ஆலிமும் சொல்லவில்லை. அந்த ரகசிய வியாபாரம் என்ன?
அனைத்துக்கும் ஆதாரம் கேட்பவர்கள் இதற்குரிய ஆதாரத்தை வெளியிட தயங்குவது ஏன்?

கஞ்சா வியாபாரியிடம் சிக்கியுள்ள முஸ்லிம்களின் 50 கோடியை மீட்க வழி செய்யுங்கள் என்று நேற்று கண்ணியத்திற்குரிய பாக்கர், ஹைதர் அலி, ஜவாஹிருல்லாஹ், பி.ஜெய்னுல் ஆபிதீன் ஆகியவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.
                    அன்புடன்.
கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி
********************************************************************************************




















பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.

அன்புள்ள செங்கிஸ்கான் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..காலையில் நீங்கள் போன் போடும்போது நான் பிசியாகி விட்டேன். மாலையில் நான் போன் போடும்போது நீங்கள் பிசியாகி விட்டீர்கள். கைர் விஷயத்துக்கு வருகிறேன்.

வியாபாரம் என்றால் லாபமும் வரும் நஷ்டமும் வரும். லாபம் வரும்போது சந்தோசமாக வாங்கினீர்களே யாரிடமும் போய் சொன்னீர்களா? நஷ்டம் வந்ததும் ஏன் பிரச்சனை பண்ணுகிறீர்கள் என்று லுஹா கோபமாக குத்பாவில் பேசி வருகிறார்.

வியாபாரம் என்றால் லாபமும் வரும் நஷ்டமும் வரும் என்பது உண்மைதான். லாபம் என்பதை மாதம் ஒரு லட்சம் என்று கூறி வந்திருக்கிறார்கள். நஷ்டம் என்பதை ஒரே மாதத்தில் 50கோடிக்கு மேல் நஷ்டம் என்று கை விரித்து இருக்கிறார்கள்.

இதுவரை என்ன வியாபாரம் என்றும் யார் பொறுப்பில் நடக்கிறது என்றும் சரியாக தெளிவாக தெரியப்படுத்தவே இல்லை.

வெளியில் சொல்ல முடியாது ரகசியம் ஆனால் ஹலால்தான்.

அரசாங்கத்தை ஏமாற்றும் வியாபாரம் ஆனால் ஹலால்தான்.

தூத்துக்குடி கப்பலில் இரும்பு வரும் அரசாங்கத்துக்கு தெரியாமல் வாங்கி அரசாங்கத்துக்கே விற்கும் வியாபாரம்.

கப்பலில் சோப்பு, சீப்பு, கண்டது கழியது என பல வரும் அதை காண்ராக்ட்டாக எடுத்து விற்கும் வியாபாரம்.

பொருள் நல்ல பொருள்தான் வெளிநாட்டில் தேதி முடிந்து விட்டது (எக்ஸ்பெரி ஆகி விட்டது) என்றாலும் டேமேஜ் பீஸ் என்றாலும் குப்பையில் போட்டு விடுவார்கள். அவற்றை கொண்டு வந்து இந்தியாவில் விற்கும் வியாபாரம்.

இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமாக கூறி இருக்கிறார்கள்.

முதலில் 25ஆயிரமாக பலரிடம் வாங்கி இருக்கிறார்கள். 25 ஆயிரத்துக்கு மாதம் 5 ஆயிரம் லாபமாம். இதில் பணம் கொடுத்தவருக்கு மாதம் 3 ஆயிரம் வாங்கி கொடுத்தவருக்கு 2ஆயிரம். இது பொது நியதி.

இதில் மசூது ஆலிம் மூலம் கொடுத்தால் பணம் கொடுத்தவருக்கு மாதம் 2500. மசூது ஆலிமுக்கு 2500. லுஹா மூலம் கொடுத்தால் பணம் கொடுத்தவருக்கு மாதம் 2000. லுஹாவுக்கு 3000.

இப்படியாக ஒரு 4 மாதம் கதையை ஓட்டி இருக்கிறார்கள். இது ஹலாலா இது ஹலாலா என்ற கேள்விக்கு ஹலால் ஹலால் என்ற உறுதியான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள் லுஹா, மசூது ஆகிய முப்திகள். இதன் மூலம் த.த.ஜ.வினரை மட்டுமல்ல சுத்தமான ஹக் மார்க்க தவ்ஹீதுவாதிகள் அனைவரையும் வீதியில் இறக்கி விட்டிருக்கிறார்கள்.

25க்கு 3 வாங்கி ருசி கண்டவர்கள். இதை பார்த்து ஆசைபட்டவர்கள் என அனைவரும் குடி இருந்த வீடுகளை, நகைகளை விற்றும் அடைமானத்துக்கு வைத்தும் லட்சம் லட்சமாக கொடுத்து இருக்கிறார்கள்.

பணம் கொடுத்த யாருக்கும் எழுத்து மூலமாக பணம் பெற்றதற்கு எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. ஒரே ஆதாரம் அந்த சாப்பாடு சாப்பிட மாட்டோம் இந்த சாப்பாடு சாப்பிட மாட்டோம் என்ற கூப்பாடு போடும் தவ்ஹீதுவாதிகள் என்ற ஆதாரம் மட்டும்தான்.

லுஹா பத்வாவை நம்பி பணம் கொடுக்காதீர்கள் 97க்கு முன்பு வரை ஜிஹாது ஜிஹாது என முழங்கி இளைஞர்கள் அனைவரையும் தூண்டி விட்டு உள்ளே போக வைத்தான். கடைசியில் நான் பேசினேன் உங்களுக்கு சிந்திக்கும் மூளை இல்லையா என்று கழன்று கொண்டான். லுஹா ஒரு மண் சுவர் நம்பாதீர்கள். அவனுக்கு கிடைக்கும் அற்ப லாபத்துக்காக விலை போகக் கூடியவன். அனுபவ ரீதியாக பார்த்தவன் என்றேன்.

2011மார்ச் 13ல் தாயகம் வரும் முன்பே பலரிடம் போன் போட்டு பேசி இது ஹலாலான வழி அல்ல. லுஹாவுக்கு ஒரு அமவ்ண்டு கிடைத்திருக்கிறது. மசூது ஆலீமுக்கும் ஒரு பெரிய அமவ்ண்டு கிடைத்திருக்கிறது. அதற்காக இதற்கு ஹலால் பத்வா கொடுத்து இருக்கிறார்கள். இதன் பின்னணியில் போதை பொருள் விற்பனை இருக்கிறது என்பதை நான் அறிந்து விட்டேன் என்று கூறினேன். யாரும் கேட்கவில்லை என்னை வெறுத்தார்கள்.

தாயகம் சென்ற என்னை காண வரக் கூடியவர்களில் பல தவ்ஹீதுவாதிகள் வரவில்லை. லுஹா மீது கொண்ட வெறுப்பால் ஒரு ஹலாலான வியாபராத்தை நான் அசிங்கப்படுத்தி விட்டதாகக் கூறினார்கள்.

மாத மாதம் வந்த லாபம் திடீரென வரவில்லை. தேர்தல் வருகிறது ஆட்சி மாறினால் இந்த தொழிலை தொடர்ந்து நடத்த முடியுமா என்பதை சொல்ல முடியாது என்ற செய்தியை விட்டார்கள்.

தேர்தல் கெடுபிடியால் பணம் கொண்டு வர முடியவில்லை. என்ற செய்தியை விட்டு பார்த்தார்கள்.

ஆட்சி மாறி விட்டதால் புது லைசென்சு போட வேண்டி உள்ளது என்றும் என்றும் காதில் பூ சுற்றினார்கள்.

கடைசியாக வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று கூறி வருகிறார்கள்.

வியாபாரம் என்றால் லாபமும் வரும் நஷ்டமும் வரும். ஓரே மாதத்தில் போட்ட அனைத்து முதலும் போய் விடுமா? ஒரே மாதத்தில் 50கோடிக்கு மேல் நஷ்டம் என்கிறார்கள். இதை சமுதாயம் நம்ப வேண்டும் என்கிறார்கள்.

புருஷனுக்குத் தெரியாமல் பணம் கொடுத்த மனைவிகள். பிள்ளைக்கு தெரியாமல் பணம் கொடுத்த பெற்றோர்கள். அரசனை நம்பி புருஷனை கை விட்ட கதையாக விஸா இருந்தும் அரபு நாடு போகாமல் விஸா தேதியை காலாவதி ஆக்கி விட்டவர்கள். ஒரு லட்சத்துக்கு மாதம் 12 ஆயிரம் என்றவுடன் விஸாவை கேன்சல் செய்து விட்டு சர்வீஸ் பணத்தை அப்படியே கொண்டு போய் கொடுத்தவர்கள். இப்பொழுது ஸ்கூல் பீஸ் கூட கட்ட முடியாமல் கண்ணீர் வடிக்கிறார்கள்.
இந்த தொழில் ஹராம் என்று பி.ஜெ. கூறி விட்டதாக  இன்று செய்தி வெளியாகி உள்ளது. ஆனால் அந்த பி.ஜெ. நெல்லை வந்தபொழுது இந்த தொழிலின் தலைவர் த.த.ஜ. கபூர் என்பரது சொகுசு வண்டியில்தான் பவனி வந்திருக்கிறார்.

தூக்கு போட்டு தொங்க சென்ற இருவர்.

விஷ மருந்து குடிக்கச் சென்ற ஒருவன்.

மாடியிலிருந்து குதிக்கச் சென்ற ஒருவன்.
இப்படியாக 4 பேர் தடுத்து காப்பாற்றப்பட்டிருக்கிறார்கள்.

முப்தி லுஹாவோ வியாபாரம் என்றால் லாபமும் வரும் நஷ்டமும் வரும் என்று வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறார்.
 இது வரை என்ன வியாபாரம் செய்தோம்.
 யார் பெயரில் லைசென்ஸ் போட்டிருந்தோம்.
எந்த இடத்தில் வைத்து விற்பனை செய்தோம்.
 என்ன என்ன விற்பனை செய்தோம்.
எங்கே வாங்கினோம் எந்த வியாபாரியிடம் வாங்கினோம் என்பதை லுஹாவும் சொல்லவில்லை. மசூது ஆலிமும் சொல்லவில்லை. அந்த ரகசிய வியாபாரம் என்ன?
அனைத்துக்கும் ஆதாரம் கேட்பவர்கள் இதற்குரிய ஆதாரத்தை வெளியிட தயங்குவது ஏன்?

கஞ்சா வியாபாரியிடம் சிக்கியுள்ள முஸ்லிம்களின் 50 கோடியை மீட்க வழி செய்யுங்கள் என்று நேற்று கண்ணியத்திற்குரிய பாக்கர், ஹைதர் அலி, ஜவாஹிருல்லாஹ், பி.ஜெய்னுல் ஆபிதீன் ஆகியவர்களுக்கு நான் எழுதியுள்ள கடிதத்தையும் பார்த்துக் கொள்ளுங்கள். வஸ்ஸலாம்.
                    அன்புடன்.
கா.அ.முஹம்மது பழுலுல் இலாஹி

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010