********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

நார்வே குண்டுவெடிப்பு மறைக்கப்பட்ட தகவல்கள்!

Saturday, July 30, 2011

ஜூலை 22ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஐரோப்பாவை மட்டும் அல்ல உலகத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது மீண்டும் ஒருமுறை தீவிரவாதம், பயங்கரவாதிகள் என்ற வாசகம் உச்சரிக்கப்பட்டது. ஆனால் இப்போது இடமும் ஆட்களும் தான் வேறு வேறு.  சரியாக வெள்ளிக்கிழமை மதியம் அரசு அலுவலகங்களை குறிவைத்தே இந்த குண்டுவெடிப் புகள் நிகழ்த்தப்பட்டன. குண்டு வெடிப்பில் ஏழு பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்பினைத் தொடர்ந்து சிலமணி நேரங்களில் ஆளும் கட்சி கூட்டத்தில் தீடீரென தோன்றிய ஒரு மர்ம மனிதன் சரமாரியாக சுட்டுத் தள்ளி 80க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தான். குண்டுவெடிப்பு நடந்தவுடன் இந்த செயல் நிச்சயம் அல் கைதாவின் வேலையாகத் தான் இருக்கும் என ஊடகங்கள் புறப்பட்டன.

நார்வேயில் ரொம்ப கால மாக இருக்கும் உள்ளூர் பாகிஸ்தானியர்கள் தான் இந்த செயலுக்கு காரணமாக இருக்கும் என பல்வேறு முனைகளில் இருந்தும் கருத்துக்கள் பரவின. அவை பரவின என்பதைவிட பரப்பப்பட்டன என்பதே நிஜம்.

குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் 10க்கும் குறைவானவர்கள் என்ற தகவலும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 90பேர் கொல்லப்பட்ட தகவலும் வெளியாக வழக்கமாக உப்பு, புளி, மிளகாய் தூள் சேர்த்து காரசாரமாக கதை வசனம் எழுதி பட்டையை கிளப்பும் புளுகு பரப்பும் பல ஊடகங்கள் சோர்வடைந்தன.

இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் அவங்களே தான். சந்தேகமில்லை அவர்கள் தான் என கீறல் விழுந்த ரிகார்ட்டுகளாக புலம்பியவர்கள் நொந்து போனார்கள்.

நார்வே குண்டுவெடிப்பு ஐரோப்பாவில் பரவிவரும் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் தீவிரத்தினை காட்டுகிறது என முதல் நாள்நீட்டி முழக்கியவர்கள் மறுநாள் சாப்பிடுவதற்கும் கொட்டாவி விடுவதற்கும் மட்டுமே வாய்திறந்தார்கள்.

நார்வே குண்டுவெடிப்பின் தகவல் முடிச்சுகள் ஒவ்வொன் றாக அவிழ அவிழ புளுகு பட்டாளத்தின் நிலைமை பரிதாபகரமாய் அமைந்தது. துப்பாக்கியால் சுட்டவன். ஒரு நார்வே நாட்டுக்காரன். வலதுசாரி கொள்கையுடையன். ஒரு தீவிர கிறித்தவன். 32 வயதான ஆண்டர்ஸ் பெஹரிங் பெலிவிக் என்பதே அவன் பெயர்.

அவ்வளவுதான் சதிகாரன் வெள்ளைக்காரன் என்றவுடன் அவனுடைய மூதாதையார் எந்த இனம் என்பதை பற்றியெல்லாம் கூட சிலர் ஆய்வில் ஈடுபட்டார்கள். அதை வைத்தாவது அவன் எந்த நாட்டுக்காரன் என்பதை வைத்து நாம் நினைத்ததுபோல் பொய்களை பரப்பலாம் என நினைத்தவர்களுக்கு சரியான ஏமாற்றம் காத்திருந்தது.

அதில் சிலபேர் கொஞ்சம் அதிகமானவே புதிய பரப்புரை யை தொடங்கினார்கள். அல்கைதா இப்போதெல்லாம் வெள்ளை காரர்களை வேலைக்கு எடுக்கத் தொடங்கியுள்ளார்கள் என்றும் கதை பரப்பல் நடந்தது.
http://tmmk.in/images/stories/aslam/norway-bomb%20blast-1.jpg
இப்படி புளுகுகளை பரப்பமுடியாதவர்கள் தங்கள் முயற்சிகளில் தோற்றுப்போன தோடு, பிரச்சினையின் தீவிரத்தை முனை மழுங்கச் செய்யும் வேலையிலும் கூர்மையாக இறங்கினார்கள்.

சதி செய்தவன் முஸ்லிம் என கதை பரப்பமுடியாததால் எக்கேடோ கெட்டு போகட்டும் என்ற எண்ணத்துடன் துப்பாக்கி சூடு நடத்தியன் ஒரு பைத்தியக்காரன் என கற்பனைகளை கருத்துக்களாக பரப்பிவிட்டு அமைதிகாக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் நிகழ்த்தப்பட்ட சதிமி கவும் பயங்கரமானது, அமைதி யையும் சமாதானத்தையும் என்றை க்கும் நார்வேயில் தீவிர வலதுசாரி குழுக்கள் புதிய நாசிச கொள்கை கொண்டவர்கள் தீவிர குணம் கொண்டவர்கள் நார்வேயில் பெருகிவருவதன் அறிகுறியே இந்த குண்டு வெடிப்பு என தெரிய வந்துள்ளது.

நார்வே நாடு இந்த பூமிப்பந்தில் அமைதி நிலவ வேண்டும் என விரும்பும் நாடாகும் சுவிட்சர்லாந் தைப் போல அல்லாமல் உண்மை யிலேயே அமைதியை நேசிக்கும் நாடு நார்வே ஆகும்.

நமது அண்டை நாடான இலங்கையில் விடுதலைப்புலிகளுக் கும் அரசாங்கத்திற்கும் இடையி லான பேச்சுவார்த்தையில் நார்வே முக்கியப்பங்கு வகித்தது. உண்மையில் இன அழிப்பு போர் நடைபெறக்கூடாது என பாடுபட்ட நார்வே தூதுக்குழுவின் தலைவர் எரிக்சோல்ஹிமை மறக்கமுடியுமா? என்ன?

எனினும் இலங்கை சமாதான பேச்சுவார்த்தையில் தமிழர்களின் நிலையை கருணையுடன் பார்த்தது நார்வே தூதுக்குழு என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பிடிக்காத சக்திகள் ஏதும் இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருக்கக்கூடுமா? என்ற ஐயப் பாட்டில் விசாரணைகள் நடத்தப் பட வேண்டும் என்பதே சர்வதேச பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் முக்கிய சூத்திரதாரியாக கருதப் படும் ஆண்டர்ஸ் கடும் தீவிர கொள்கை கொண்டவன். இவனின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இணையதளங்களில் அவர் பயன்படுத்திய வாசகங்கள் அவனது எண்ண ஒட்டத்தை காட்டியுள்ளன. ஒரு மதநம்பிக்கையாளன் ஒரு லட்சம் வீரர்களுக்கு சமமானவன் என்றும் ஒரு வாசகம் அதில் இருக்கிறது.

திருக்குர்ஆனின் வசனங்களுக்கு தவறான பொருள் கொடுத்து கொச்சைப்படுத்திய நெதர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் குர்ஆனை இழிவுபடுத்தி 'ஃபித்னா' என்ற டாகுமெண்டரி படம் எடுத்து பலத்த சர்ச்சைக்குரியவனாகக் கருதப்பட்ட கீட்வைல்டர்ஸ் முக்கிய முஸ்லிம் எதிர்பாளர்களை தனது உற்றநண்பர்களாக கொண்டி ருக்கும் இந்த வெள்ளைக்கார பயங்கரவாதி தன்னை நார்வேயின் தேசிய வாதியாக காட்டிக்கொண்டு தனது முழக்கத்தினை சர்வதேசி யவாதத்திற்கு எதிரான தேசிய வாதிகளின் உரிமைப்போர் என வெறித்தனமாக கூறியுள்ளான்.

சர்வதேச அளவில் தற்போது கம்யூனிசமும் உலகில் ஆதிக்கம் செலுத்தவில்லை முதலாளித் துவம் என்று அழைக்கப்படும் காபிடலிஸமும் ஆதிக்கம் செலுத்த வில்லை. தற்போது உலகளாவிய கொள்கையாக நுகர்வோர் கொள்கை என்ற கன்ஸ்யூமரிசம் முக்கிய இடத்தைப்பிடிக்கிறது. கம்யூனிஸத்தையும் கேபிடலிஸத் தையும் பின்னுக்கு தள்ளி கன்ஸ்யூமரிசம் முன் வரிசைக்கு வரத்தொடங்கியதில் இருந்து தொழிலாளர்கள், வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி போன்றவை அனைத்தும் நுகர்வோர் நலனுக்காகவும், நுகர்வோர் லாபத்துக்காகவும் மட்டுமே என்ற லட்சியம் முழங்கப்பட்டது. குறைந்த செலவில் நிறைந்த உழைப்பு வரவேற்கப்பட்டன. குறைந்த பதவியில் நிறைந்த கடமைகள் வழங்கப்பட்டன.

குறைந்த அளவு ஊதியத்தில் அதிக பொறுப்பு சுமையுடன் கூடிய பணிகளுக்கு ஆசிய ஆப்பிரிக்க மக்கள் பெருமளவு வந்தனர். மேற்குலகில் பெரும்பான் மையினராக வாழும் வெள்ளைக் காரர்களுக்கு அவர்கள் நாட்டிலே யே வாய்ப்புகள் குறையும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
ஏற்கனவே நிற வெறியால் பெரும் ஆத்திரம் கொண்டு வாழ்ந்த வெள்ளையர்களுக்கு ஆசிய ஆப்பிரிக்க மக்கள் தங்கள் நாட்டில் வந்து தங்களது வேலை வாய்ப்புகளை பறிக்கி றார்கள் என்ற அச்சம் அதிகம் உண்டு. அதுமட்டுமின்றி வெள்ளையர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை தவிடுபொடியாக்குவது போல் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்கள் தங்கள் சமயசெழுமையையும், பண்பாட்டையும் பேணத்துவங்கி யதையே ஏதோ நாகரீகங்களுக்கு இடையிலான யுத்தம் என்பதைப் போல் மேற்குலக ஆதிக்கவாதிகள் எண்ணத் தொடங்கியதன் விளைவு ஆண்டர்ஸ் போன்றவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கியுள்ளது.

அதனால் சமரச கருத்தாளர் களுக்கும் கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக நியோ நாஜிக்களும், போலி தேசியவாதிகளும் ஐரோப் பிய உள்ளிட்ட பகுதிகளில் இந்த அபாய நிலை அதிகரித்து வருகிறது.

ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் நியூநாஜிக்கள், மற்றும் தேசிய வாதிகளின் அரசியல் அழுத்தங்கள் மற்றும் மறைமுக மிரட்டல்களுக்கு பணிந்து வரும் நிலையில் நார்வேயின் செயல்பாடு நெஞ்சுரம் மிக்கதாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று.
பாலஸ்தீன விடுதலைக்கு அங்கீ காரம் வழங்க வேண்டும். ஆக்கிர மிப்பு இஸ்ரேலின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற அளவில் நார்வேயின் இளைஞர்கள் குறிப்பாக தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்கள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதையும் இஸ்ரேலை கண்டிப்பதையும் ஒரு கொள்கைப் பிரகடனமாக செயல்படுத்தத் தொடங்கியதால் யூத சக்திகளுக்கு மட்டுமின்றி, மேற்குலக ஆக்கிரமிப்பு சக்திகளுக்கும் வெள்ளைநிற வெறியர்களுக்கும் அது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.

நார்வே தற்போது நேட்டோ கூட்டமைப்பு என்ற வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிறது. நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதால் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அனுப்பப்பட்ட நேட் டோ படைகளில் நார்வேயின் துருப்புகளும் அங்கம் வகித்தன.
லிபியாவை சிதைக்க அனுப்பப் பட்ட நேட்டோ படையணியிலும் நார்வேயின் படைகள் இருந்தன. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், லிபியாவிலும் நேட்டோ படைகள் அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் அமைதி ஆர்வலர் களான நார்வே நாட்டை வேதனையுற செய்தது.

நேட்டோ படைகளின் மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படு கொலைகளுக்கும் எத்தனைகாலம் தான் ரத்தசாட்சியாக இருப்பது என்ற சுய ஆவேசத்தின் விளைவாக இதுவரை லிபியாவின் அப்பாவி மக்களின் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய நார்வே போர் விமானங்கள் குண்டுகளை வீசவே வீசாது என அறிவித்துள்ளன.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நார்வே விமானங்கள் லிபியா மீது குண்டுகளை வீசாது என அறிவித்திருக்கிறது.
நார்வேயின் பாலஸ்தீன ஆதரவு சமாதான முன் முயற்சி கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்றவற்றைக் கண்டு எச்சரிக்கை அடைந்த நேட்டோ கூட்டமைப்பு நார்வே மீது நடத்திய தாக்குதலின் பின்னணியில் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

நேட்டோ கூட்டமைப்பு தங்கள் அணியில் இருந்து விலகி சமாதானம் மனித நேயம் எனப் பேசி கூட்டு நாடுகள் எதுவும் உருப்பட்டுவிடக்கூடாது என்ற கொடிய எண்ணத்துடன் நேட்டோ அமைப்பே நிலிகிஞிமிளி என்ற ரகசிய பயங்கரவாத அமைப்பு ஒன்றை உருவாக்கி வைத்துள்ளது. அது பிரிந்து விட நினைக்கும் உறுப்பு நாடுகளை மிரட்டி பணிய வைக்கும் வேலையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முதலாம் வளைகுடாப் போரில் ஈராக்குக்கு எதிராக வான்தாக்குதல் தொடுப்பதில் இருந்து விலகி நியாய உணர்வுடன் நடந்து கொண்ட இத்தாலிக்கு எதிராக அவ்வப்போது இத்தாலியில் குண்டுவெடிப்புகளை நடத்துவது நிலிகிஞிமிளி பயங்கரவாதக் குழுவின் வேலையாகும்.
ஆம் சமாதான ஆர்வலர்களின் நாடான நார்வேக்கு இன்று நிகழ்ந்துள்ள இழப்புக்கு கூட நிலிகிஞிமிளி பின்னணியில் இருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் அது விரைவில் மறைக்கப்பட்டுவிடும். பாவம் நெதர்லாந்து மக்கள்.

-
அபூஸாலிஹ்
TMMK
********************************************************************************************
ஜூலை 22ம் தேதி நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு ஐரோப்பாவை மட்டும் அல்ல உலகத்தை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது மீண்டும் ஒருமுறை தீவிரவாதம், பயங்கரவாதிகள் என்ற வாசகம் உச்சரிக்கப்பட்டது. ஆனால் இப்போது இடமும் ஆட்களும் தான் வேறு வேறு.  சரியாக வெள்ளிக்கிழமை மதியம் அரசு அலுவலகங்களை குறிவைத்தே இந்த குண்டுவெடிப் புகள் நிகழ்த்தப்பட்டன. குண்டு வெடிப்பில் ஏழு பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.

இந்த குண்டுவெடிப்பினைத் தொடர்ந்து சிலமணி நேரங்களில் ஆளும் கட்சி கூட்டத்தில் தீடீரென தோன்றிய ஒரு மர்ம மனிதன் சரமாரியாக சுட்டுத் தள்ளி 80க்கும் மேற்பட்டவர்களைக் கொன்று குவித்தான். குண்டுவெடிப்பு நடந்தவுடன் இந்த செயல் நிச்சயம் அல் கைதாவின் வேலையாகத் தான் இருக்கும் என ஊடகங்கள் புறப்பட்டன.

நார்வேயில் ரொம்ப கால மாக இருக்கும் உள்ளூர் பாகிஸ்தானியர்கள் தான் இந்த செயலுக்கு காரணமாக இருக்கும் என பல்வேறு முனைகளில் இருந்தும் கருத்துக்கள் பரவின. அவை பரவின என்பதைவிட பரப்பப்பட்டன என்பதே நிஜம்.

குண்டுவெடிப்பில் இறந்தவர்கள் 10க்கும் குறைவானவர்கள் என்ற தகவலும் அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த துப்பாக்கி சூட்டில் 90பேர் கொல்லப்பட்ட தகவலும் வெளியாக வழக்கமாக உப்பு, புளி, மிளகாய் தூள் சேர்த்து காரசாரமாக கதை வசனம் எழுதி பட்டையை கிளப்பும் புளுகு பரப்பும் பல ஊடகங்கள் சோர்வடைந்தன.

இந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர்கள் அவங்களே தான். சந்தேகமில்லை அவர்கள் தான் என கீறல் விழுந்த ரிகார்ட்டுகளாக புலம்பியவர்கள் நொந்து போனார்கள்.

நார்வே குண்டுவெடிப்பு ஐரோப்பாவில் பரவிவரும் இஸ்லாமியப் பயங்கரவாதத்தின் தீவிரத்தினை காட்டுகிறது என முதல் நாள்நீட்டி முழக்கியவர்கள் மறுநாள் சாப்பிடுவதற்கும் கொட்டாவி விடுவதற்கும் மட்டுமே வாய்திறந்தார்கள்.

நார்வே குண்டுவெடிப்பின் தகவல் முடிச்சுகள் ஒவ்வொன் றாக அவிழ அவிழ புளுகு பட்டாளத்தின் நிலைமை பரிதாபகரமாய் அமைந்தது. துப்பாக்கியால் சுட்டவன். ஒரு நார்வே நாட்டுக்காரன். வலதுசாரி கொள்கையுடையன். ஒரு தீவிர கிறித்தவன். 32 வயதான ஆண்டர்ஸ் பெஹரிங் பெலிவிக் என்பதே அவன் பெயர்.

அவ்வளவுதான் சதிகாரன் வெள்ளைக்காரன் என்றவுடன் அவனுடைய மூதாதையார் எந்த இனம் என்பதை பற்றியெல்லாம் கூட சிலர் ஆய்வில் ஈடுபட்டார்கள். அதை வைத்தாவது அவன் எந்த நாட்டுக்காரன் என்பதை வைத்து நாம் நினைத்ததுபோல் பொய்களை பரப்பலாம் என நினைத்தவர்களுக்கு சரியான ஏமாற்றம் காத்திருந்தது.

அதில் சிலபேர் கொஞ்சம் அதிகமானவே புதிய பரப்புரை யை தொடங்கினார்கள். அல்கைதா இப்போதெல்லாம் வெள்ளை காரர்களை வேலைக்கு எடுக்கத் தொடங்கியுள்ளார்கள் என்றும் கதை பரப்பல் நடந்தது.
http://tmmk.in/images/stories/aslam/norway-bomb%20blast-1.jpg
இப்படி புளுகுகளை பரப்பமுடியாதவர்கள் தங்கள் முயற்சிகளில் தோற்றுப்போன தோடு, பிரச்சினையின் தீவிரத்தை முனை மழுங்கச் செய்யும் வேலையிலும் கூர்மையாக இறங்கினார்கள்.

சதி செய்தவன் முஸ்லிம் என கதை பரப்பமுடியாததால் எக்கேடோ கெட்டு போகட்டும் என்ற எண்ணத்துடன் துப்பாக்கி சூடு நடத்தியன் ஒரு பைத்தியக்காரன் என கற்பனைகளை கருத்துக்களாக பரப்பிவிட்டு அமைதிகாக்க ஆரம்பித்தார்கள்.

ஆனால் நிகழ்த்தப்பட்ட சதிமி கவும் பயங்கரமானது, அமைதி யையும் சமாதானத்தையும் என்றை க்கும் நார்வேயில் தீவிர வலதுசாரி குழுக்கள் புதிய நாசிச கொள்கை கொண்டவர்கள் தீவிர குணம் கொண்டவர்கள் நார்வேயில் பெருகிவருவதன் அறிகுறியே இந்த குண்டு வெடிப்பு என தெரிய வந்துள்ளது.

நார்வே நாடு இந்த பூமிப்பந்தில் அமைதி நிலவ வேண்டும் என விரும்பும் நாடாகும் சுவிட்சர்லாந் தைப் போல அல்லாமல் உண்மை யிலேயே அமைதியை நேசிக்கும் நாடு நார்வே ஆகும்.

நமது அண்டை நாடான இலங்கையில் விடுதலைப்புலிகளுக் கும் அரசாங்கத்திற்கும் இடையி லான பேச்சுவார்த்தையில் நார்வே முக்கியப்பங்கு வகித்தது. உண்மையில் இன அழிப்பு போர் நடைபெறக்கூடாது என பாடுபட்ட நார்வே தூதுக்குழுவின் தலைவர் எரிக்சோல்ஹிமை மறக்கமுடியுமா? என்ன?

எனினும் இலங்கை சமாதான பேச்சுவார்த்தையில் தமிழர்களின் நிலையை கருணையுடன் பார்த்தது நார்வே தூதுக்குழு என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பிடிக்காத சக்திகள் ஏதும் இந்த குண்டுவெடிப்பின் பின்னணியில் இருக்கக்கூடுமா? என்ற ஐயப் பாட்டில் விசாரணைகள் நடத்தப் பட வேண்டும் என்பதே சர்வதேச பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.

இந்த குண்டுவெடிப்பில் முக்கிய சூத்திரதாரியாக கருதப் படும் ஆண்டர்ஸ் கடும் தீவிர கொள்கை கொண்டவன். இவனின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் இணையதளங்களில் அவர் பயன்படுத்திய வாசகங்கள் அவனது எண்ண ஒட்டத்தை காட்டியுள்ளன. ஒரு மதநம்பிக்கையாளன் ஒரு லட்சம் வீரர்களுக்கு சமமானவன் என்றும் ஒரு வாசகம் அதில் இருக்கிறது.

திருக்குர்ஆனின் வசனங்களுக்கு தவறான பொருள் கொடுத்து கொச்சைப்படுத்திய நெதர்லாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் குர்ஆனை இழிவுபடுத்தி 'ஃபித்னா' என்ற டாகுமெண்டரி படம் எடுத்து பலத்த சர்ச்சைக்குரியவனாகக் கருதப்பட்ட கீட்வைல்டர்ஸ் முக்கிய முஸ்லிம் எதிர்பாளர்களை தனது உற்றநண்பர்களாக கொண்டி ருக்கும் இந்த வெள்ளைக்கார பயங்கரவாதி தன்னை நார்வேயின் தேசிய வாதியாக காட்டிக்கொண்டு தனது முழக்கத்தினை சர்வதேசி யவாதத்திற்கு எதிரான தேசிய வாதிகளின் உரிமைப்போர் என வெறித்தனமாக கூறியுள்ளான்.

சர்வதேச அளவில் தற்போது கம்யூனிசமும் உலகில் ஆதிக்கம் செலுத்தவில்லை முதலாளித் துவம் என்று அழைக்கப்படும் காபிடலிஸமும் ஆதிக்கம் செலுத்த வில்லை. தற்போது உலகளாவிய கொள்கையாக நுகர்வோர் கொள்கை என்ற கன்ஸ்யூமரிசம் முக்கிய இடத்தைப்பிடிக்கிறது. கம்யூனிஸத்தையும் கேபிடலிஸத் தையும் பின்னுக்கு தள்ளி கன்ஸ்யூமரிசம் முன் வரிசைக்கு வரத்தொடங்கியதில் இருந்து தொழிலாளர்கள், வர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதி போன்றவை அனைத்தும் நுகர்வோர் நலனுக்காகவும், நுகர்வோர் லாபத்துக்காகவும் மட்டுமே என்ற லட்சியம் முழங்கப்பட்டது. குறைந்த செலவில் நிறைந்த உழைப்பு வரவேற்கப்பட்டன. குறைந்த பதவியில் நிறைந்த கடமைகள் வழங்கப்பட்டன.

குறைந்த அளவு ஊதியத்தில் அதிக பொறுப்பு சுமையுடன் கூடிய பணிகளுக்கு ஆசிய ஆப்பிரிக்க மக்கள் பெருமளவு வந்தனர். மேற்குலகில் பெரும்பான் மையினராக வாழும் வெள்ளைக் காரர்களுக்கு அவர்கள் நாட்டிலே யே வாய்ப்புகள் குறையும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
ஏற்கனவே நிற வெறியால் பெரும் ஆத்திரம் கொண்டு வாழ்ந்த வெள்ளையர்களுக்கு ஆசிய ஆப்பிரிக்க மக்கள் தங்கள் நாட்டில் வந்து தங்களது வேலை வாய்ப்புகளை பறிக்கி றார்கள் என்ற அச்சம் அதிகம் உண்டு. அதுமட்டுமின்றி வெள்ளையர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தை தவிடுபொடியாக்குவது போல் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்கள் தங்கள் சமயசெழுமையையும், பண்பாட்டையும் பேணத்துவங்கி யதையே ஏதோ நாகரீகங்களுக்கு இடையிலான யுத்தம் என்பதைப் போல் மேற்குலக ஆதிக்கவாதிகள் எண்ணத் தொடங்கியதன் விளைவு ஆண்டர்ஸ் போன்றவர்களின் எண்ணிக்கையை அதிகமாக்கியுள்ளது.

அதனால் சமரச கருத்தாளர் களுக்கும் கட்சிகளுக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக நியோ நாஜிக்களும், போலி தேசியவாதிகளும் ஐரோப் பிய உள்ளிட்ட பகுதிகளில் இந்த அபாய நிலை அதிகரித்து வருகிறது.

ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் நியூநாஜிக்கள், மற்றும் தேசிய வாதிகளின் அரசியல் அழுத்தங்கள் மற்றும் மறைமுக மிரட்டல்களுக்கு பணிந்து வரும் நிலையில் நார்வேயின் செயல்பாடு நெஞ்சுரம் மிக்கதாக விளங்குகிறது என்றால் அது மிகையன்று.
பாலஸ்தீன விடுதலைக்கு அங்கீ காரம் வழங்க வேண்டும். ஆக்கிர மிப்பு இஸ்ரேலின் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற அளவில் நார்வேயின் இளைஞர்கள் குறிப்பாக தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்கள் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதையும் இஸ்ரேலை கண்டிப்பதையும் ஒரு கொள்கைப் பிரகடனமாக செயல்படுத்தத் தொடங்கியதால் யூத சக்திகளுக்கு மட்டுமின்றி, மேற்குலக ஆக்கிரமிப்பு சக்திகளுக்கும் வெள்ளைநிற வெறியர்களுக்கும் அது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது.

நார்வே தற்போது நேட்டோ கூட்டமைப்பு என்ற வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கிறது. நேட்டோ கூட்டமைப்பில் அங்கம் வகிப்பதால் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு அனுப்பப்பட்ட நேட் டோ படைகளில் நார்வேயின் துருப்புகளும் அங்கம் வகித்தன.
லிபியாவை சிதைக்க அனுப்பப் பட்ட நேட்டோ படையணியிலும் நார்வேயின் படைகள் இருந்தன. ஆனால் ஆப்கானிஸ்தானிலும், லிபியாவிலும் நேட்டோ படைகள் அப்பாவி மக்களுக்கு எதிராக மேற்கொண்ட மனிதத்தன்மையற்ற தாக்குதல்கள் அமைதி ஆர்வலர் களான நார்வே நாட்டை வேதனையுற செய்தது.

நேட்டோ படைகளின் மனித உரிமை மீறல்களுக்கும் இனப்படு கொலைகளுக்கும் எத்தனைகாலம் தான் ரத்தசாட்சியாக இருப்பது என்ற சுய ஆவேசத்தின் விளைவாக இதுவரை லிபியாவின் அப்பாவி மக்களின் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்திய நார்வே போர் விமானங்கள் குண்டுகளை வீசவே வீசாது என அறிவித்துள்ளன.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நார்வே விமானங்கள் லிபியா மீது குண்டுகளை வீசாது என அறிவித்திருக்கிறது.
நார்வேயின் பாலஸ்தீன ஆதரவு சமாதான முன் முயற்சி கள், ஏகாதிபத்திய எதிர்ப்பு போன்றவற்றைக் கண்டு எச்சரிக்கை அடைந்த நேட்டோ கூட்டமைப்பு நார்வே மீது நடத்திய தாக்குதலின் பின்னணியில் உள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

நேட்டோ கூட்டமைப்பு தங்கள் அணியில் இருந்து விலகி சமாதானம் மனித நேயம் எனப் பேசி கூட்டு நாடுகள் எதுவும் உருப்பட்டுவிடக்கூடாது என்ற கொடிய எண்ணத்துடன் நேட்டோ அமைப்பே நிலிகிஞிமிளி என்ற ரகசிய பயங்கரவாத அமைப்பு ஒன்றை உருவாக்கி வைத்துள்ளது. அது பிரிந்து விட நினைக்கும் உறுப்பு நாடுகளை மிரட்டி பணிய வைக்கும் வேலையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

முதலாம் வளைகுடாப் போரில் ஈராக்குக்கு எதிராக வான்தாக்குதல் தொடுப்பதில் இருந்து விலகி நியாய உணர்வுடன் நடந்து கொண்ட இத்தாலிக்கு எதிராக அவ்வப்போது இத்தாலியில் குண்டுவெடிப்புகளை நடத்துவது நிலிகிஞிமிளி பயங்கரவாதக் குழுவின் வேலையாகும்.
ஆம் சமாதான ஆர்வலர்களின் நாடான நார்வேக்கு இன்று நிகழ்ந்துள்ள இழப்புக்கு கூட நிலிகிஞிமிளி பின்னணியில் இருப்பதை மறுக்கமுடியாது. ஆனால் அது விரைவில் மறைக்கப்பட்டுவிடும். பாவம் நெதர்லாந்து மக்கள்.

-
அபூஸாலிஹ்
TMMK

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010