********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

தொடர்கள் (23 ஆகஸ்ட் 2011)

Friday, August 26, 2011


பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 38: 27.11.91

சிவகாசி அருகே உள்ள பள்ளப்​பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். விருதுநகர் அருகே உள்ள வாய்ப்பூட்டான்​பட்டிக்காரர் வேலுச்சாமி. இருவருக்கும் திருமணம் முடிந்து ஆறு வயதில் மகன் இருக்கும் நிலையில், ஒரு நாள் பாண்டியம்மாள் காணாமல் போனார்.

து வரை சட்டத் துறையே சந்தித்திராத ஒரு வினோத வழக்கு அது... காவல் துறை தனது கவனக்குறைவினால் களங்கத்தைப் பூசிக்கொண்ட வழக்​கும்கூட!
சில நாட்கள் கழித்து, ஆனைக்குட்டம் அருகே ஒரு பெண்ணின் சடலம் அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைக்கப்பட்டுக் கிடந்தது. அவர் யார் என்று அடையாளம் காண இயலாமல் அநாதைப் பிரேதமாகக் கருதி, போஸ்ட்​மார்ட்டம் செய்யப்பட்ட பிறகு போலீ​ஸார் புதைத்தனர்.
அந்தப் பிணத்தின் புகைப்படத்தைப் பார்த்து, 'இது என் தங்கை பாண்டியம்​மாள்தான்’ என அவரது அண்ணன் கனகராஜ் அடையாளம் காட்டியதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு, பாண்டியம்மாளின் கணவர் வேலுச்சாமி மற்றும் மதுரைவீரன், அர்ஜுனன் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். 'பாண்டியம்மாளைக் கொலை செய்தனர்’ என அவர்கள் மீது குற்றச்சாட்டு!
மதுரை நீதிமன்றத்தில் கொலை வழக்கு நடக்க... முதலில், ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மூவரில் மதுரைவீரன், அர்ஜுனன் இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.
அக்டோபர் எட்டாம் தேதி வழக்கில் திடுக்கிடும் திருப்பம். கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்​பட்ட பாண்டியம்மாளே நேரில் நீதிமன்றத்துக்கு வந்து, 'நான்தான் பாண்டியம்மாள். நான் சாகவில்லை. என் கணவரை விடுதலை செய்யுங்கள்!’ என்றார்.
நீதிமன்றம் பரபரத்தது. 'அந்தப் பெண் உண்மை​யான பாண்டியம்மாள்தானா?’ என்று விசாரிக்க அரசுத் தரப்புக்கு அக்டோபர் 28-ம் தேதி வரை அவகாசம் தந்தார் நீதிபதி. ஆனால், கொடுத்த தேதியன்று, 'இன்னமும் விசாரிக்கவில்லை’ என்றார் அரசுத் தரப்பு வக்கீல். மீண்டும் நவம்பர் 8-ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. அரசுத் தரப்பு வக்கீல் அன்றும் நீதிமன்றத்துக்கு வந்து, 'இன்னும் உறுதிப்படுத்தவில்லை’ என்று கீறல் விழுந்த ரிக்கார்டுபோலச் சொன்னார்.
இதற்கிடையே, பாண்டியம்மாளின் கணவர் வேலுச்சாமியை ஜாமீனில் எடுப்பதற்காக மனு கொடுக்கப்பட்டு, அதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார். ஆனால், வேலுச்சாமி ஜாமீனில் வெளியே வரவில்லை. அதற்கு வேலுச்சாமி தரப்பில், ரொக்க ஜாமீனுக்குப் பணம் கட்ட முடியாததும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
மீண்டும் நவம்பர் மாதம் 21-ம் தேதி வரை அரசுத் தரப்புக்கு நேரம் கொடுக்கப்பட்டது. அத்துடன் அதே தேதி, 'அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்புக்கும் பொதுவான மரியாதைக்குரிய மனிதர்களைச் சாட்சிகளாக வரவழைக்க வேண்டும்’ என்றும் சொன்னது நீதிமன்றம்.
(இந்த நிலையில்தான் நம் ஆசிரியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு 'ரிட்’ தாக்கல் செய்தார். இதுபற்றிய விவரங்கள் பெட்டிச் செய்தியில்...)
நவம்பர் 21... காலை 10 மணி... மதுரை நீதிமன்ற வளாகம்... அங்கு வழக்கத்தைவிட ஏகப் பரபரப்பு.
பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று நீதிமன்றம் நிரம்பி வழிந்தது!
பொதுவான சாட்சிகளாக 11 பேருக்கு நீதிமன்றம் ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தது. முதலில் பாண்டியம்​மாளின் அண்ணன் கனகராஜ் சாட்சி சொல்ல கூண்டில்ஏறினார். ''முதன் முதலில் போலீஸ்​காரங்க என்கிட்ட ஒரு பிணத்தோட போட்​டோவைக் காட்டி 'இது உன் தங்கை பாண்டியம்மாதானே?’னு கேட்டப் பவே, நான் 'இல்லை’னு சொன்​னேன். ஆனா, இப்பிடி சோடிச்சுட்டாங்க. இப்ப இங்க நிக்கறதுதான் என் தங்கச்சி பாண்டி​யம்மா!'' என்று சொன்னார். ஆமத்தூர் கிராம நிர்வாக அதிகாரி பழனிச்​சாமியும் தலையாரி ராமசாமியும், ''பாண்டியம்மாளை எங்களுக்குத் தெரியவே தெரியாது!'' என்றார்கள். அடுத்தடுத்து வரிசையாகச் சாட்சி சொல்ல வந்தவர்கள் அந்தப் பெண்ணை 'பாண்டியம்மாள்தான்’ என்றே அடையாளம் சொன்​னார்கள். கடைசியாகச் சாட்சி சொல்ல வந்த களிங்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவர், ''எனக்குப் பாண்டியம்மாகூட நல்ல பழக்கம்... விருதுநகர் பஸ் ஸ்டாண்டுல ராத் திரி 11 மணிக்கு மேலே நாலைஞ்சு பேர் அந்தம்மா கிட்டேஜாலியா பேசு வோம். சம்பவம் நடந்த மறு நாள்கூட...'' என்று எதையோ சொல்ல ஆரம்பிக்க, நீதிபதி இடையில் மறித்தார்.
'மதிய இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் கூடும்’ எனக் கூறி நீதிமன்றம் கலைந்தது.
நீதிமன்றம் முதலில் சம்மன் அனுப்பிய பட்டியலில் கணேசன் பெயர் இல்லை. பிறகு 12-வது சாட்சியாக அவர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ''கடைசி நேரத்தில் ஏதோ புதிதாகக் குழப்பத்தை ஏற்படுத்த போலீஸார்தான் அவரை ஏற்பாடு செய்து அழைத்து வந்தனர்...'' என்று சிலர் பேசிக்கொண்டார்கள்.
கூடியிருந்த மக்கள், 'தீர்ப்பு என்னவாகும்?’ என கும்பல் கும்பலாக நின்று விவாதித்துக்கொண்டு இருந்தார்கள். 4.15 மணிக்கு வந்த நீதிபதி தனது தீர்ப்பைச் சொன்னார்.
கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வேலுச்சாமி, மதுரைவீரன், அர்ஜுனன் மூவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
அதே சமயம், 'ஏற்கெனவே ஒரு பெண் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்... அந்தப் பெண் யார் என்பதையும், அதற்குக் காரணமானவர்களையும் காவல் துறை சிரத்தையோடு கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!’ எனக் கேட்டுக்கொண்டார்.
பாண்டியம்மாளும் அவருடன் வந்திருந்த கிராமத்துக்காரர்களும், ''ஐயா புண்ணியவானே... நல்ல தீர்ப்பு சொன்னதுக்குக் கோடி புண்ணியம். உங்க புள்ளைகுட்டி எல்லாம் நல்லா இருக்கணும்யா!'' என்று கண்ணீரோடு நீதிபதியை நோக்கிக் கும்பிட்டு அழுதார்கள்.
வெளியே வந்த வேலுச்சாமியை ஓடிப்போய்க் கட்டித் தழுவிக்கொண்ட அவரது மகன் கணேசன், ''வாப்பா... வீட்டுக்குப் போவோம்'' என்று சிணுங்க... அருகில் சென்ற பாண்டியம்மாள் பரவசப்பட, சுற்றி நின்றவர்களையும் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது.
பாண்டியம்மாள் தரப்பில் ஆஜரான வக்கீல் மனோகரன், ''ஏதோ தமிழ் சினிமாபோல நடந்துவிட்டது. என் சர்வீஸில் மறக்க முடியாத அனுபவம் இது. இனிமேலாவது இந்தத் தம்பதி சந்தோஷமாக வாழட்டும்!'' என்றார் உணர்ச்சிமயமாக.
பாண்டியம்மாள் - வேலுச்சாமி மீண்டும் தங்களின் கிராமத்துக்குப் போய்ப் புதிய வாழ்க்கையைத் தொடங்கப்போகிறார்கள்.
வழக்கில் குற்றவாளியாக இருந்து விடுதலை யான மதுரைவீரன், விருதுநகர் மாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடனாக முதுகில் அலகு குத்தி தேர் இழுக்கப் போகிறாராம்.
ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் அமைதியாகக் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த அந்த மனிதர்களின் வாழ்வில், போலீஸாரின் கவனக் குறைவால் ஏற்பட்ட ஒரு குழப்பம் புயலாக உருமாறி, அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியைச் சிதைத்து அவர்கள் குடும்பத்தையும் அலைக்கழித்துவிட்டது.
மதியம் 2 மணி. நீதிமன்ற உணவு இடை வேளை... புகைப்படக்காரரோடு ஒரு மரத்தடி தேடி ஓய்வாக அமர்ந்தோம். அப்போது ஒரு நபர் கையில் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவோடு இங்கும் அங்கும் அலைவது கண்ணில் பட, அவரை நெருங்கி விசாரித்தோம்.
முள் முள்ளாக முடி முளைத்த மொட்டைத் தலை... சோகத் தாடியோடு பரிதாபமாகத் தோற்றமளித்த அவர் கையில் இருந்தது ஒரு பெண்ணின் போட்டோ.
''யார் இது?'' என நாம் கேட்க, ''இது எம் பொண்டாட்டி சாந்தி போட்டோங்க... என் பேர் தாந்தோண்டி. திண்டுக்கல் பக்கம்... பாரதி நகர் என் ஊர். ஏப்ரல் மாசம் 16-ம் தேதி, எம் பொண்டாட்டி வீட்டுலேருந்து காணாமப் போயிருச்சு. தற்செயலா இன்னிக்குப் பேப்பர்ல பாண்டியம்மா போட்டோ பார்த்தேன். எம் பொண்டாட்டி மாதிரி தெரிஞ்சது. அதுதான் இங்கே வந்தேன். ஆனா, இந்த அம்மா வேற. சாந்தி நல்ல செவப்புங்க...'' என்று சொல்லிக்கொண்டே போனார்.
அப்போது, பேச்சில் தன் பெயர் அடிபடுகிறதே என்று பாண்டியம்மாள் நம்மிடம் வந்தார். விஷயத்தைச் சொன்னோம். ஆச்சரியத்தில் மூழ்கிப்போன பாண்டியம்மாள் அந்த நபரைப் பார்த்து, 'அண்ணே... இன்னிக்குத்தான் ஏதோ விடிவு பொறக்கப் போகுதுன்னு நெனைச்சுக் காத்திருக்கோம். பூராத்தையும் குழப்பிடாதீங்க...'' என்று கையெடுத்துக் கும்பிட்டார்.
ஒரு பாண்டியம்மாள் திரும்பிவிட்டார். இன்னும் இன்னும் எத்தனை சாந்திகளோ?
ரா.கண்ணன்,
கரு.பழனியப்பன்
படங்கள்: கே.ராஜசேகரன்
 ஆசிரியர் தொடர்ந்த வழக்கு
 பாண்டியம்மாள் வழக்கில் நமது காவல் துறையினர் தாக்கல் செய்திருக்கும் குற்றப் பத்திரிகையைப் பார்த்தாலே, அவர்களது கில்லாடித்தனமான - கேஸ் ஜோடிக்கும் திறமை தெரிந்துவிடும். குற்றப் பத்திரிகை சொல்கிறது:
'வாய்ப்பூட்டான்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி பாண்டியம்மாளுக்கும் அர்ஜுனன் என்ற வேறு ஒரு நபருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதை விசாரித்த அந்த ஊர்ப் பஞ்சாயத்தி னர், 'பாண்டியம்மாளும், அர்ஜுனனும் சேர்ந்து வாழ வேண்டும்’ என்று தீர்ப்பு சொன்னார்கள். இதை அர்ஜுனன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், வேலுச்சாமி, அர்ஜுனன் இருவருக்குமே அவமானம் ஏற்பட்டு, அவர்கள் மதுரைவீரன் என்ற இன்னொரு நபருடன் சேர்ந்து பாண்டியம்மாளைக் கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி விருதுநகருக்குப் பாண்டியம்மாளைக் கடத்திச் சென்று அங்கு திரைப்படம் பார்த்துவிட்டு, 12.2.91 காலை 4.30 மணிக்கு ஆனைக்குட்டம் வந்தார்கள். அங்கு பாண்டியம்மாளை அர்ஜுனன் ஓடவிடாமல் பிடித்துக்கொள்ள, 'இதோடு தொலைந்து போ’ என்று சொல்லி மதுரைவீரன் அரிவாளால் மண்டையில் ஓங்கி வெட்டினான். பாண்டியம்மாள் கீழே விழுந்துவிட்டார். மீண்டும் கழுத்தில் இரண்டு மூன்று வெட்டுகள் வெட்டினான். 'இன்னும் சாகவில்லை’ என்று அந்த அரிவாளை வாங்கி மூன்றாவது எதிரி (அர்ஜுனன்) வலதுபுற முதுகிலும், வலதுபுறத்தின் கீழும் வெட்டிக் காயங்கள் ஏற்படுத்தினான். எதிரிகள் ஏற்படுத்திய காயங்களின் விளைவால் பாண்டியம்மாள் இறந்துவிட்டார்.’
- இப்படித் தொடரும் அந்தக் குற்றப்பத்திரிகையில், 'அர்ஜுனனோடு பாண்டியம்மாள் சேர்ந்து வாழ வேண்டும் என்று வாய்ப்பூட்டான்பட்டிப் பஞ்சாயத்து தீர்ப்பு சொல்லி, அதை அர்ஜுனன் ஏற்க மறுத்தான்.’ என்பது வரை இருப்பது மட்டுமே உண்மை. அதைத் தொடர்ந்து வருபவை அனைத்தும், நமது காவல் துறையின் கற்பனையில் உதித்த (க்ரைம்) கதை!
'உயிரோடு இருக்கும் ஒரு பெண் 'கொல்லப்பட்டாள்’ என்று நீதிமன்றத்தையும் வெளியுலகத்தையும் நம்பவைத்து நமது காவல் துறை ஏமாற்றிய கொடுமை ஒரு புறம் இருக்க, இந்தப் பொய் வழக்கால் மூன்று நிரபராதிகளின் சுதந்திரம், அடிப்படை உரிமைகள் பாதித்து - இவை சட்ட விரோதமாகச் சிறையில் அடைக்கப்பட்டு, சித்ரவதைக்கு ஆளான அவலம் இன்னொரு புறம்!
இதை எல்லாம் மனத்தில் கொண்டுதான் நம் ஆசிரியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். ஆசிரியர் சார்பாக வழக்கறிஞர் சந்துரு தாக்கல் செய்த மனுவில்...
- சட்ட விரோதமாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகள் என்ற பெயரில் போலீஸார் கண்காணிப்பில் இருக்கும் மூன்று நிரபராதிகளுக்கும் நியாயம் வழங்க வேண்டும்!
- ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்காக போலீஸார் நடத்திய வன்முறைத் தாண்டவத் தில் சித்ரவதைக்கு உள்ளாகி, சிறையில் அடைக்கப்பட்டு, சுதந்திரம் இழந்த நிரபராதிகள் ஒவ்வொருவருக்கும் தலா 3 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
- தவறு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது சகாக்களின் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது கிரிமினல் வழக்கும் தொடர வேண்டும்.
- தமிழகக் காவல் துறையினர் குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு முறையைப்பற்றி ஒரு முழுமையான நீதி விசாரணை நடத்தி, அதன் மூலம் இனி இப்படிப்பட்ட தவறுகள் நடக்காமல் தடுக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட மூன்று பேரின் குடும்பங்களுக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்திருந்தோம். நவம்பர் மாதம் 20-ம் தேதி புதன்கிழமை அந்த மனுவைத் தாக்கல் செய்தோம். மனுவின் மீதான விசாரணை 22-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று நடப்பதாக இருந்தது.
இந்த 'ரிட்’ மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் வருவதற்குள்ளாகவே, 21-ம் தேதி வியாழனன்று ராமநாதபுரம் செஷன்ஸ் கோர்ட்டில், பாதிக்கப்பட்ட மூன்று நபர்களுமே நிரபராதிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.
அதற்கடுத்த நாள் (22-ம் தேதி) நாம் தொடுத்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருணாசலம், மருதமுத்து இருவரு டைய பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தது.
'பாதிக்கப்பட்ட மூன்று பேரும் விடுதலை ஆகிவிட்டார்கள்’ என்பதை அறிந்த நீதிபதி கள்... 'சட்ட விரோதமாகச் சிறையில் அடைக்கப் பட்டவர்களை உடனடியாக விடுவிக்கும் உரிமை யும் நோக்கமும் மட்டுமே இந்த பெஞ்ச்சுக்கு உண்டு. பாதிக்கப்பட்டவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள் என்ற நிலையில், இந்த வழக்கில் இந்த பெஞ்ச்சின் வேலை முடிகிறது. உங்களது மற்ற கோரிக்கைகள் அடுத்த வாரம் நியமிக்கப்படும் வேறு ஒரு பெஞ்ச்சில் வாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்'' என்று சொன்னார்கள்.
*******************************************************************************
அணு ஆட்டம்!

கிழக்கிந்திய கம்பெனிகளும், கிளர்ந்தெழும் அணு உலைகளும்...
 'அணுத் திமிர் அடக்கு!’
கவிஞர் அறிவுமதி

'கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்த​மொன்று’ நடத்திய 'காந்தி என்னும் சாந்தமூர்த்தி’ வெள்ளைக்காரர்களிடம் இருந்து விடுதலை வாங்கித் தந்தார். புற விடுதலை அடைந்தோமே தவிர, அக விடுதலை அடையவில்லை. உள்ளுக்குள் அடிமைகளாகவே இருந்தோம். வெள்ளைக்காரர்களின் ஆன்மாவற்ற அரசக் கட்டமைப்பு, மனசாட்சி அற்ற அறிவியல், இயற்கையை அழித்து நாசமாக்கி பணக்காரர்கள் மட்டுமே செழித்தோங்கும் வளர்ச்சி வழிமுறைகள் - இவற்றை அப்படியே கற்றுக்கொண்டு ஆதிக்கவாதிகளின் அடி​யற்றி நடந்தோம்.

ங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, போர்ச்சுக்கல் போன்ற நாடுகளில் இருந்து வியாபாரம் செய்ய வந்தவர்கள், நம்மை அடிமைப்படுத்தியதும், அடக்கி ஆண்டதும், நமது செல்வத்தை, உழைப்பை, விளைபொருட்களை, வரிப் பணத்தை எல்லாம் தமது நாடுகளுக்கு அனுப்பி வளம் சேர்த்துக்கொண்டதும் வரலாறு. அழையா விருந்தாளிகளாக வந்தார்கள்... கால்வைக்க இடம் கொடுத்தோம், தலைவைத்துப் படுத்துக்கொண்டார்கள். பிரித்து ஆள்வது எனும் சித்தாந்தத்தின் உதவியோடு இந்து - முஸ்லிம், இந்தியா - பாகிஸ்தான் என்றெல்லாம் திரித்து, துரோகிகளைச் சேர்த்துக் கொண்டு, எதிர்த்தோரை அழித்து ஒழித்துக் கனகச்சிதமாக நடந்தது காலனி ஆதிக்கம்.
லெனின் கண்ட புரட்சி, ஸ்டாலினால் நசுக்கப்பட்டதுபோல... காந்தி தந்த நல்வழி நேருவால் அழிக்கப்பட்டது. வெள்ளை இனக் கொள்ளையர்களின் அறிவியல், அரசியல், அழிவியலை வாழ்வியலாகக்கொண்டு புதிய பாரதத்தைப் படைக்கப் புறப்பட்டார் நேரு. காந்தியைக் கொன்றுவிட்டு, நேருவோடு நின்று நாம் விதைத்த வினையை இன்றைக்கு அறுத்துக் கொண்டு இருக்கிறோம். நேருவிடம் இருந்த எளிமையும் உண்மையும் இல்லாத அவரது வழித்தோன்றல்களால் நாம் மீண்டும் முதற் கட்டத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
முன்பு அழையா விருந்தாளிகளாக வந்த வெள்ளைக்கார கம்பெனிகளை இப்போது காலில் விழுந்து வருந்தி அழைத்து வந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும், அணு உலைப் பூங்காக்களிலும் அமர்த்தி புளகாங்கிதம் அடை​கிறோம். காலனி ஆதிக்க நாடகத்தின் அடுத்த அங்கம் அரங்கேறுகிறது. நமது கைதட்டல்களுடன்!
குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டம் மித்தி விர்தி எனும் ஊரில் ஏ.பி.1,000 அமெரிக்க அணு உலைப் பூங்கா நிறுவப்பட இருக்கிறது. மித்தி விர்தி என்றால் இனிப்பான தண்ணீர் என்று அர்த்தம். கடலோரத்திலேயே தண்ணீர் அப்படி ஒரு சுவையோடு இருக்கிறது. அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மீனவ மக்களும், விவசாயிகளும் இந்த அமெரிக்க அணு மின் திட்டத்தை வெறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள்.
அடுத்த மாநிலமான மகாராஷ்டிராவில் ரத்ன​கிரி மாவட்டம் ஜைதாப்பூரில் அரெவா எனும் பிரெஞ்சு நிறுவனத்தின் இ.பி.ஆர். அணு உலைப் பூங்கா அமைய இருக்கிறது. இங்கும் மீனவர்களும், விவசாயிகளும் எதிர்த்துப் போராடுகிறார்கள். அணு ஆயுதங்களை எதிர்த்தும், அணு உலைகளை ஆதரித்தும் வந்த கம்யூனிஸ்ட்கள், ஜைதாபூர் திட்டத்தை எதிர்க்கிறார்கள். ஓர் அண்மைச்சந்திப்பின்போது வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ராஜாவிடம் காரணம் கேட்டோம். 'அது நிரூபிக்கப்​படாத தொழில்நுட்பம்’ என்றார். அப்படியானால், 'கூடங்குளத்தில் அமைய இருக்கும் ரஷ்ய வி.வி.இ.ஆர்.1000 அணு உலையும் நிரூபிக்கப்படாத தொழில்​நுட்பம்தானே?’ எனக் கேட்டபோது, 'கூடங்குளம்பற்றி எனக்குத் தெரியாது!’ என்றார்.
தற்போது கூடங்குளம் அணு மின் நிலையங்​களுக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்து போராடுகிறார்கள். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டதுபோல... வேலையும் கிடைக்கவில்லை. வளர்ச்சியும் வரவில்லை; ஊரும், உறவும்கூட கைவிட்டுப் போய்விடுமோ என அஞ்சுகிறார்கள். கூடங்குளம் போன்ற ரஷ்ய அணு உலைப் பூங்கா மேற்கு வங்க மாநிலம் பூர்பா மேதினிப்பூர் மாவட்டம் ஹரிப்பூரில் நிறுவத் திட்டம் இடப்பட்டது. அணு சக்தித் துறை அதிகாரிகள் வந்தபோதெல்லாம், உள்ளூர் மக்கள் குடும்பத்தோடு சாலைகளில் படுத்து அவர்களைத் தடுத்ததாகச் சொன்னார்கள். திரிணாமுல் காங்கிரஸும், மாவோயிஸ்ட்களும் மக்களை ஆதரித்தார்கள். முதல்வர் பதவி ஏற்றிருக்கும் மம்தா பானர்ஜி, 'இந்தத் திட்டம் தேவை இல்லை’ என்றும், 'வங்க மாநிலத்திலே எங்கும் வேண்டாம்’ என்றும் அறிவித்து இருக்கிறார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொவாடா எனும் இடத்தில் அமெரிக்காவின் ஏ.பி.1,000 அணு உலைப் பூங்கா அமைக்க அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஜெனரல் எலெக்ட்ரிக், வெஸ்ட்டிங் ஹவுஸ் எனும் நிறுவனங்கள்தான் இந்த அணு உலைகளைத் தயாரித்து இயக்க இருக்கின்றன. ஜப்பானில் வெடித்த ஃபுகுஷிமா உலைகள், ஜெனரல் எலெக்ட்ரிக் உலைகள்தான்.
இவை எல்லாம் போதாதென்று தென் கொரியாவி​டம் இருந்து ஓ.பி.ஆர். அணு உலைகள் வாங்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் தென் கொரியாவுக்குச் சென்ற நமது ஜனாதிபதி, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார். அண்மையிலேயே ஜப்பான் நாட்டில் சந்தித்த தென் கொரிய நண்பர்கள், 'ஒரு பெண் தலைவர் அதுவும் ஓர் இந்தியப் பெண் தலைவர் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் இருந்தது’ என்று சொன்னார்கள். என்னால் எதுவும் பேச இயலவில்லை.
ஒரிசா கடற்கரை உட்பட நாட்டின் பல பகுதிகளில் புதிய அணு மின் நிலையங்கள் திட்டமிடப்​படுகின்றன. இந்த அணு உலைப் பூங்காக்கள் எல்லாம் பூத்துக் குலுங்கும்போது, நமது காற்றும், மண்ணும், மண்ணில் வளர்பவை, வாழ்பவை எல்லாமும், நீரும், கடலும், கடலுணவும் - அனைத்துமே விஷமாக்கப்படும். நவீன கிழக்கிந்திய கம்பெனிகள் தம் கொள்ளை லாபத்தைக் குவித்து வைத்து... அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும், பிரான்ஸுக்கும் அனுப்புவார்கள். இந்திய ஏஜென்டுகள் தங்களது கமிஷன்களை ஸ்விஸ் வங்கிகளில் சேமித்து வைப்பார்கள்.
முதலாம் காலனி ஆதிக்கத்தினால் நடுத்தெருவில் விடப்பட்ட பெண்கள், தலித்துகள், அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், நகர்ப்புற ஏழைகள் இன்னும் நசுக்கப்படுவார்கள். சட்டபூர்வமான, உள்ளூர் ஏஜென்ட்களின் உதவி​யோடு நடைபெறும் நவீன காலனி ஆதிக்கத்தை எதிர்ப்பது ஆபத்தான வேலை, அகற்றுவது கடினமான காரியம்.
எதிர்காலம் வேண்டும் என்றால் இரண்டாம் விடுதலைப் போர் இன்றே, இப்போதே, இங்கேயே தொடங்கப்பட வேண்டும். அற வழியில் போரிடத் தயாராவோம்!
விஞ்ஞானி ஏ.ஜி. சத்யநேசன்
1926-ம் ஆண்டு பிறந்து, இரண்டு முனைவர் பட்டங்கள் பெற்று, இந்தியாவின் சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவராக உயர்ந்தவர் டாக்டர் சத்யநேசன். வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையிலும், மருத்துவத் துறையிலும், பணியாற்றினார். பிரசித்தி பெற்ற அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக் குழுவிலும் கொச்சியில் உள்ள மத்தியக் கடல் மீன் ஆய்வு நிறுவனத்திலும் சிறப்பு அறிவியல் அறிஞராகக் கடமையாற்​றியவர். 1982-ம் ஆண்டு இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். அணு மின் நிலையங்களைக் கடுமையாக எதிர்க்கும் இந்த மக்கள் விஞ்ஞானி, கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராகப் பேசியும், எழுதியும், போராடியும் வருகிறார்.
- அதிரும்..
 ******************************************************************************

மிஸ்டர் மியாவ்: கோபக்கார தாத்தா

மதுரையில் 'விருமாண்டி’ படத்தின் பூஜையை விமரிசையாக கொண்டாடினார், கமல். அதுபோல 'வேலாயுதம்’ படத்தின் ஆடியோ விழாவை மதுரையில் நடத்த ஆசைப்படுகிறார், விஜய். தகவல் ஆஸ்கார் ரவியின் காதுக்கு போக... உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம். அப்புறமென்ன ரசிகர் கூட்டத்தை சேர்க்கும் செயல்... ரகசியமாக நடந்து வருகிறது! 
'பையா’ படம் பரபரப்பாக தமிழகத்தில் கல்லா கட்டியது. அந்தப் படத்தை இந்தியில் ரீ-மேக் செய்யப் போகிறார்கள். தம்பி கார்த்தி நடித்த கேரக்டரில் சூர்யா நடிக்கிறார்!    
அரசியல் நெருக்கடியால், 'மங்காத்தா’ படத்தை வேறு சினிமா கம்பெனிக்கு விற்றார், அழகிரி மைந்தன். இந்த விஷயம் கேட்டு கோபமான தாத்தா கருணாநிதி ''அவங்களுக்கு பயந்துக்கிட்டு எதுக்கு படத்தை விக்கிற... தைரியமா நீயே படத்தை ரிலீஸ் பண்ணு... என்னதான் நடக்குதுன்னு பாக்குறேன்...'' என்று உஷ்ணமானாராம்!
தெலுங்கு சினிமாவுக்கு, 'குட்பை’ சொல்லி விட்டார், அனுஷ்கா. கமலின் 'விஸ்வரூபம்’, ஆர்யாவுடன் செல்வராகவன் படம், சுராஜுடன் கார்த்தி படம், விஜய்யுடன் விக்ரம் படம் என்று நிரந்தரமாக சென்னையிலேயே டேரா போட்டுவிட்டார்.
'வேலாயுதம்’ முடித்த கையோடு அர்ஜுன் நடிக்கும் படத்தைத் தயாரிக்​கிறார், ஆஸ்கார் ரவிச்சந்திரன். செல்வராகவன் உதவியாளர் இளவரசன் இயக்குகிறார்.


எலியும் பூனையுமாய் இருந்த தள நடிகரையும்  புத்த டைரக்டரை​யும்  இணைத்து வைத்தவர், மாஜி பிரமாண்ட தயாரிப்​பாளர்.  'தன்னைத்தான் தயாரிக்க அழைப்பார்கள்’ என்று ஆவலுடன் அவர் காத்திருக்க, இயக்குநரே தயாரிப்பாளராகிவிட்டார்.
அந்த மகா கலைஞனுக்கு  ஏன் இந்த சீப் பப்ளிசிட்டி ஆசை என்று அவ்விட பூமியில் ஆதங்கம் கொள்கிறார்கள். உலகையே உலுக்​கிய ஹாலிவுட் படத்தின்  கதை என்னுடையது என்று அலப்பறை செய்கிறாராம்.

********************************************************************************************

பழசு இன்றும் புதுசு

நேற்றும் நமதே - 38: 27.11.91

சிவகாசி அருகே உள்ள பள்ளப்​பட்டியைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். விருதுநகர் அருகே உள்ள வாய்ப்பூட்டான்​பட்டிக்காரர் வேலுச்சாமி. இருவருக்கும் திருமணம் முடிந்து ஆறு வயதில் மகன் இருக்கும் நிலையில், ஒரு நாள் பாண்டியம்மாள் காணாமல் போனார்.

து வரை சட்டத் துறையே சந்தித்திராத ஒரு வினோத வழக்கு அது... காவல் துறை தனது கவனக்குறைவினால் களங்கத்தைப் பூசிக்கொண்ட வழக்​கும்கூட!
சில நாட்கள் கழித்து, ஆனைக்குட்டம் அருகே ஒரு பெண்ணின் சடலம் அடையாளம் தெரியாத அளவுக்குச் சிதைக்கப்பட்டுக் கிடந்தது. அவர் யார் என்று அடையாளம் காண இயலாமல் அநாதைப் பிரேதமாகக் கருதி, போஸ்ட்​மார்ட்டம் செய்யப்பட்ட பிறகு போலீ​ஸார் புதைத்தனர்.
அந்தப் பிணத்தின் புகைப்படத்தைப் பார்த்து, 'இது என் தங்கை பாண்டியம்​மாள்தான்’ என அவரது அண்ணன் கனகராஜ் அடையாளம் காட்டியதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டு, பாண்டியம்மாளின் கணவர் வேலுச்சாமி மற்றும் மதுரைவீரன், அர்ஜுனன் ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். 'பாண்டியம்மாளைக் கொலை செய்தனர்’ என அவர்கள் மீது குற்றச்சாட்டு!
மதுரை நீதிமன்றத்தில் கொலை வழக்கு நடக்க... முதலில், ரிமாண்ட் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மூவரில் மதுரைவீரன், அர்ஜுனன் இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர்.
அக்டோபர் எட்டாம் தேதி வழக்கில் திடுக்கிடும் திருப்பம். கொலை செய்யப்பட்டதாகச் சொல்லப்​பட்ட பாண்டியம்மாளே நேரில் நீதிமன்றத்துக்கு வந்து, 'நான்தான் பாண்டியம்மாள். நான் சாகவில்லை. என் கணவரை விடுதலை செய்யுங்கள்!’ என்றார்.
நீதிமன்றம் பரபரத்தது. 'அந்தப் பெண் உண்மை​யான பாண்டியம்மாள்தானா?’ என்று விசாரிக்க அரசுத் தரப்புக்கு அக்டோபர் 28-ம் தேதி வரை அவகாசம் தந்தார் நீதிபதி. ஆனால், கொடுத்த தேதியன்று, 'இன்னமும் விசாரிக்கவில்லை’ என்றார் அரசுத் தரப்பு வக்கீல். மீண்டும் நவம்பர் 8-ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. அரசுத் தரப்பு வக்கீல் அன்றும் நீதிமன்றத்துக்கு வந்து, 'இன்னும் உறுதிப்படுத்தவில்லை’ என்று கீறல் விழுந்த ரிக்கார்டுபோலச் சொன்னார்.
இதற்கிடையே, பாண்டியம்மாளின் கணவர் வேலுச்சாமியை ஜாமீனில் எடுப்பதற்காக மனு கொடுக்கப்பட்டு, அதை நீதிபதியும் ஏற்றுக்கொண்டார். ஆனால், வேலுச்சாமி ஜாமீனில் வெளியே வரவில்லை. அதற்கு வேலுச்சாமி தரப்பில், ரொக்க ஜாமீனுக்குப் பணம் கட்ட முடியாததும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
மீண்டும் நவம்பர் மாதம் 21-ம் தேதி வரை அரசுத் தரப்புக்கு நேரம் கொடுக்கப்பட்டது. அத்துடன் அதே தேதி, 'அந்தக் கிராமத்தைச் சேர்ந்த இரு தரப்புக்கும் பொதுவான மரியாதைக்குரிய மனிதர்களைச் சாட்சிகளாக வரவழைக்க வேண்டும்’ என்றும் சொன்னது நீதிமன்றம்.
(இந்த நிலையில்தான் நம் ஆசிரியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு 'ரிட்’ தாக்கல் செய்தார். இதுபற்றிய விவரங்கள் பெட்டிச் செய்தியில்...)
நவம்பர் 21... காலை 10 மணி... மதுரை நீதிமன்ற வளாகம்... அங்கு வழக்கத்தைவிட ஏகப் பரபரப்பு.
பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என்று நீதிமன்றம் நிரம்பி வழிந்தது!
பொதுவான சாட்சிகளாக 11 பேருக்கு நீதிமன்றம் ஏற்கெனவே சம்மன் அனுப்பி இருந்தது. முதலில் பாண்டியம்​மாளின் அண்ணன் கனகராஜ் சாட்சி சொல்ல கூண்டில்ஏறினார். ''முதன் முதலில் போலீஸ்​காரங்க என்கிட்ட ஒரு பிணத்தோட போட்​டோவைக் காட்டி 'இது உன் தங்கை பாண்டியம்மாதானே?’னு கேட்டப் பவே, நான் 'இல்லை’னு சொன்​னேன். ஆனா, இப்பிடி சோடிச்சுட்டாங்க. இப்ப இங்க நிக்கறதுதான் என் தங்கச்சி பாண்டி​யம்மா!'' என்று சொன்னார். ஆமத்தூர் கிராம நிர்வாக அதிகாரி பழனிச்​சாமியும் தலையாரி ராமசாமியும், ''பாண்டியம்மாளை எங்களுக்குத் தெரியவே தெரியாது!'' என்றார்கள். அடுத்தடுத்து வரிசையாகச் சாட்சி சொல்ல வந்தவர்கள் அந்தப் பெண்ணை 'பாண்டியம்மாள்தான்’ என்றே அடையாளம் சொன்​னார்கள். கடைசியாகச் சாட்சி சொல்ல வந்த களிங்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவர், ''எனக்குப் பாண்டியம்மாகூட நல்ல பழக்கம்... விருதுநகர் பஸ் ஸ்டாண்டுல ராத் திரி 11 மணிக்கு மேலே நாலைஞ்சு பேர் அந்தம்மா கிட்டேஜாலியா பேசு வோம். சம்பவம் நடந்த மறு நாள்கூட...'' என்று எதையோ சொல்ல ஆரம்பிக்க, நீதிபதி இடையில் மறித்தார்.
'மதிய இடைவேளைக்குப் பிறகு, மீண்டும் கூடும்’ எனக் கூறி நீதிமன்றம் கலைந்தது.
நீதிமன்றம் முதலில் சம்மன் அனுப்பிய பட்டியலில் கணேசன் பெயர் இல்லை. பிறகு 12-வது சாட்சியாக அவர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். ''கடைசி நேரத்தில் ஏதோ புதிதாகக் குழப்பத்தை ஏற்படுத்த போலீஸார்தான் அவரை ஏற்பாடு செய்து அழைத்து வந்தனர்...'' என்று சிலர் பேசிக்கொண்டார்கள்.
கூடியிருந்த மக்கள், 'தீர்ப்பு என்னவாகும்?’ என கும்பல் கும்பலாக நின்று விவாதித்துக்கொண்டு இருந்தார்கள். 4.15 மணிக்கு வந்த நீதிபதி தனது தீர்ப்பைச் சொன்னார்.
கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட வேலுச்சாமி, மதுரைவீரன், அர்ஜுனன் மூவரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
அதே சமயம், 'ஏற்கெனவே ஒரு பெண் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்... அந்தப் பெண் யார் என்பதையும், அதற்குக் காரணமானவர்களையும் காவல் துறை சிரத்தையோடு கண்டுபிடித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!’ எனக் கேட்டுக்கொண்டார்.
பாண்டியம்மாளும் அவருடன் வந்திருந்த கிராமத்துக்காரர்களும், ''ஐயா புண்ணியவானே... நல்ல தீர்ப்பு சொன்னதுக்குக் கோடி புண்ணியம். உங்க புள்ளைகுட்டி எல்லாம் நல்லா இருக்கணும்யா!'' என்று கண்ணீரோடு நீதிபதியை நோக்கிக் கும்பிட்டு அழுதார்கள்.
வெளியே வந்த வேலுச்சாமியை ஓடிப்போய்க் கட்டித் தழுவிக்கொண்ட அவரது மகன் கணேசன், ''வாப்பா... வீட்டுக்குப் போவோம்'' என்று சிணுங்க... அருகில் சென்ற பாண்டியம்மாள் பரவசப்பட, சுற்றி நின்றவர்களையும் மகிழ்ச்சி தொற்றிக்கொண்டது.
பாண்டியம்மாள் தரப்பில் ஆஜரான வக்கீல் மனோகரன், ''ஏதோ தமிழ் சினிமாபோல நடந்துவிட்டது. என் சர்வீஸில் மறக்க முடியாத அனுபவம் இது. இனிமேலாவது இந்தத் தம்பதி சந்தோஷமாக வாழட்டும்!'' என்றார் உணர்ச்சிமயமாக.
பாண்டியம்மாள் - வேலுச்சாமி மீண்டும் தங்களின் கிராமத்துக்குப் போய்ப் புதிய வாழ்க்கையைத் தொடங்கப்போகிறார்கள்.
வழக்கில் குற்றவாளியாக இருந்து விடுதலை யான மதுரைவீரன், விருதுநகர் மாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடனாக முதுகில் அலகு குத்தி தேர் இழுக்கப் போகிறாராம்.
ஒரு சின்னஞ்சிறு கிராமத்தில் அமைதியாகக் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த அந்த மனிதர்களின் வாழ்வில், போலீஸாரின் கவனக் குறைவால் ஏற்பட்ட ஒரு குழப்பம் புயலாக உருமாறி, அவர்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியைச் சிதைத்து அவர்கள் குடும்பத்தையும் அலைக்கழித்துவிட்டது.
மதியம் 2 மணி. நீதிமன்ற உணவு இடை வேளை... புகைப்படக்காரரோடு ஒரு மரத்தடி தேடி ஓய்வாக அமர்ந்தோம். அப்போது ஒரு நபர் கையில் ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோவோடு இங்கும் அங்கும் அலைவது கண்ணில் பட, அவரை நெருங்கி விசாரித்தோம்.
முள் முள்ளாக முடி முளைத்த மொட்டைத் தலை... சோகத் தாடியோடு பரிதாபமாகத் தோற்றமளித்த அவர் கையில் இருந்தது ஒரு பெண்ணின் போட்டோ.
''யார் இது?'' என நாம் கேட்க, ''இது எம் பொண்டாட்டி சாந்தி போட்டோங்க... என் பேர் தாந்தோண்டி. திண்டுக்கல் பக்கம்... பாரதி நகர் என் ஊர். ஏப்ரல் மாசம் 16-ம் தேதி, எம் பொண்டாட்டி வீட்டுலேருந்து காணாமப் போயிருச்சு. தற்செயலா இன்னிக்குப் பேப்பர்ல பாண்டியம்மா போட்டோ பார்த்தேன். எம் பொண்டாட்டி மாதிரி தெரிஞ்சது. அதுதான் இங்கே வந்தேன். ஆனா, இந்த அம்மா வேற. சாந்தி நல்ல செவப்புங்க...'' என்று சொல்லிக்கொண்டே போனார்.
அப்போது, பேச்சில் தன் பெயர் அடிபடுகிறதே என்று பாண்டியம்மாள் நம்மிடம் வந்தார். விஷயத்தைச் சொன்னோம். ஆச்சரியத்தில் மூழ்கிப்போன பாண்டியம்மாள் அந்த நபரைப் பார்த்து, 'அண்ணே... இன்னிக்குத்தான் ஏதோ விடிவு பொறக்கப் போகுதுன்னு நெனைச்சுக் காத்திருக்கோம். பூராத்தையும் குழப்பிடாதீங்க...'' என்று கையெடுத்துக் கும்பிட்டார்.
ஒரு பாண்டியம்மாள் திரும்பிவிட்டார். இன்னும் இன்னும் எத்தனை சாந்திகளோ?
ரா.கண்ணன்,
கரு.பழனியப்பன்
படங்கள்: கே.ராஜசேகரன்
 ஆசிரியர் தொடர்ந்த வழக்கு
 பாண்டியம்மாள் வழக்கில் நமது காவல் துறையினர் தாக்கல் செய்திருக்கும் குற்றப் பத்திரிகையைப் பார்த்தாலே, அவர்களது கில்லாடித்தனமான - கேஸ் ஜோடிக்கும் திறமை தெரிந்துவிடும். குற்றப் பத்திரிகை சொல்கிறது:
'வாய்ப்பூட்டான்பட்டியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மனைவி பாண்டியம்மாளுக்கும் அர்ஜுனன் என்ற வேறு ஒரு நபருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இதை விசாரித்த அந்த ஊர்ப் பஞ்சாயத்தி னர், 'பாண்டியம்மாளும், அர்ஜுனனும் சேர்ந்து வாழ வேண்டும்’ என்று தீர்ப்பு சொன்னார்கள். இதை அர்ஜுனன் ஒப்புக்கொள்ளவில்லை. இதனால், வேலுச்சாமி, அர்ஜுனன் இருவருக்குமே அவமானம் ஏற்பட்டு, அவர்கள் மதுரைவீரன் என்ற இன்னொரு நபருடன் சேர்ந்து பாண்டியம்மாளைக் கொலை செய்ய வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி விருதுநகருக்குப் பாண்டியம்மாளைக் கடத்திச் சென்று அங்கு திரைப்படம் பார்த்துவிட்டு, 12.2.91 காலை 4.30 மணிக்கு ஆனைக்குட்டம் வந்தார்கள். அங்கு பாண்டியம்மாளை அர்ஜுனன் ஓடவிடாமல் பிடித்துக்கொள்ள, 'இதோடு தொலைந்து போ’ என்று சொல்லி மதுரைவீரன் அரிவாளால் மண்டையில் ஓங்கி வெட்டினான். பாண்டியம்மாள் கீழே விழுந்துவிட்டார். மீண்டும் கழுத்தில் இரண்டு மூன்று வெட்டுகள் வெட்டினான். 'இன்னும் சாகவில்லை’ என்று அந்த அரிவாளை வாங்கி மூன்றாவது எதிரி (அர்ஜுனன்) வலதுபுற முதுகிலும், வலதுபுறத்தின் கீழும் வெட்டிக் காயங்கள் ஏற்படுத்தினான். எதிரிகள் ஏற்படுத்திய காயங்களின் விளைவால் பாண்டியம்மாள் இறந்துவிட்டார்.’
- இப்படித் தொடரும் அந்தக் குற்றப்பத்திரிகையில், 'அர்ஜுனனோடு பாண்டியம்மாள் சேர்ந்து வாழ வேண்டும் என்று வாய்ப்பூட்டான்பட்டிப் பஞ்சாயத்து தீர்ப்பு சொல்லி, அதை அர்ஜுனன் ஏற்க மறுத்தான்.’ என்பது வரை இருப்பது மட்டுமே உண்மை. அதைத் தொடர்ந்து வருபவை அனைத்தும், நமது காவல் துறையின் கற்பனையில் உதித்த (க்ரைம்) கதை!
'உயிரோடு இருக்கும் ஒரு பெண் 'கொல்லப்பட்டாள்’ என்று நீதிமன்றத்தையும் வெளியுலகத்தையும் நம்பவைத்து நமது காவல் துறை ஏமாற்றிய கொடுமை ஒரு புறம் இருக்க, இந்தப் பொய் வழக்கால் மூன்று நிரபராதிகளின் சுதந்திரம், அடிப்படை உரிமைகள் பாதித்து - இவை சட்ட விரோதமாகச் சிறையில் அடைக்கப்பட்டு, சித்ரவதைக்கு ஆளான அவலம் இன்னொரு புறம்!
இதை எல்லாம் மனத்தில் கொண்டுதான் நம் ஆசிரியர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். ஆசிரியர் சார்பாக வழக்கறிஞர் சந்துரு தாக்கல் செய்த மனுவில்...
- சட்ட விரோதமாக போலீஸாரால் கைது செய்யப்பட்டு, குற்றவாளிகள் என்ற பெயரில் போலீஸார் கண்காணிப்பில் இருக்கும் மூன்று நிரபராதிகளுக்கும் நியாயம் வழங்க வேண்டும்!
- ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்காக போலீஸார் நடத்திய வன்முறைத் தாண்டவத் தில் சித்ரவதைக்கு உள்ளாகி, சிறையில் அடைக்கப்பட்டு, சுதந்திரம் இழந்த நிரபராதிகள் ஒவ்வொருவருக்கும் தலா 3 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
- தவறு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது சகாக்களின் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது கிரிமினல் வழக்கும் தொடர வேண்டும்.
- தமிழகக் காவல் துறையினர் குற்றங்களை விசாரிக்கும் அமைப்பு முறையைப்பற்றி ஒரு முழுமையான நீதி விசாரணை நடத்தி, அதன் மூலம் இனி இப்படிப்பட்ட தவறுகள் நடக்காமல் தடுக்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட மூன்று பேரின் குடும்பங்களுக்குப் போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வைத்திருந்தோம். நவம்பர் மாதம் 20-ம் தேதி புதன்கிழமை அந்த மனுவைத் தாக்கல் செய்தோம். மனுவின் மீதான விசாரணை 22-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று நடப்பதாக இருந்தது.
இந்த 'ரிட்’ மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் வருவதற்குள்ளாகவே, 21-ம் தேதி வியாழனன்று ராமநாதபுரம் செஷன்ஸ் கோர்ட்டில், பாதிக்கப்பட்ட மூன்று நபர்களுமே நிரபராதிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.
அதற்கடுத்த நாள் (22-ம் தேதி) நாம் தொடுத்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருணாசலம், மருதமுத்து இருவரு டைய பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தது.
'பாதிக்கப்பட்ட மூன்று பேரும் விடுதலை ஆகிவிட்டார்கள்’ என்பதை அறிந்த நீதிபதி கள்... 'சட்ட விரோதமாகச் சிறையில் அடைக்கப் பட்டவர்களை உடனடியாக விடுவிக்கும் உரிமை யும் நோக்கமும் மட்டுமே இந்த பெஞ்ச்சுக்கு உண்டு. பாதிக்கப்பட்டவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள் என்ற நிலையில், இந்த வழக்கில் இந்த பெஞ்ச்சின் வேலை முடிகிறது. உங்களது மற்ற கோரிக்கைகள் அடுத்த வாரம் நியமிக்கப்படும் வேறு ஒரு பெஞ்ச்சில் வாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்'' என்று சொன்னார்கள்.
*******************************************************************************
அணு ஆட்டம்!

கிழக்கிந்திய கம்பெனிகளும், கிளர்ந்தெழும் அணு உலைகளும்...
 'அணுத் திமிர் அடக்கு!’
கவிஞர் அறிவுமதி

'கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்த​மொன்று’ நடத்திய 'காந்தி என்னும் சாந்தமூர்த்தி’ வெள்ளைக்காரர்களிடம் இருந்து விடுதலை வாங்கித் தந்தார். புற விடுதலை அடைந்தோமே தவிர, அக விடுதலை அடையவில்லை. உள்ளுக்குள் அடிமைகளாகவே இருந்தோம். வெள்ளைக்காரர்களின் ஆன்மாவற்ற அரசக் கட்டமைப்பு, மனசாட்சி அற்ற அறிவியல், இயற்கையை அழித்து நாசமாக்கி பணக்காரர்கள் மட்டுமே செழித்தோங்கும் வளர்ச்சி வழிமுறைகள் - இவற்றை அப்படியே கற்றுக்கொண்டு ஆதிக்கவாதிகளின் அடி​யற்றி நடந்தோம்.

ங்கிலாந்து, பிரான்ஸ், நெதர்லாந்து, போர்ச்சுக்கல் போன்ற நாடுகளில் இருந்து வியாபாரம் செய்ய வந்தவர்கள், நம்மை அடிமைப்படுத்தியதும், அடக்கி ஆண்டதும், நமது செல்வத்தை, உழைப்பை, விளைபொருட்களை, வரிப் பணத்தை எல்லாம் தமது நாடுகளுக்கு அனுப்பி வளம் சேர்த்துக்கொண்டதும் வரலாறு. அழையா விருந்தாளிகளாக வந்தார்கள்... கால்வைக்க இடம் கொடுத்தோம், தலைவைத்துப் படுத்துக்கொண்டார்கள். பிரித்து ஆள்வது எனும் சித்தாந்தத்தின் உதவியோடு இந்து - முஸ்லிம், இந்தியா - பாகிஸ்தான் என்றெல்லாம் திரித்து, துரோகிகளைச் சேர்த்துக் கொண்டு, எதிர்த்தோரை அழித்து ஒழித்துக் கனகச்சிதமாக நடந்தது காலனி ஆதிக்கம்.
லெனின் கண்ட புரட்சி, ஸ்டாலினால் நசுக்கப்பட்டதுபோல... காந்தி தந்த நல்வழி நேருவால் அழிக்கப்பட்டது. வெள்ளை இனக் கொள்ளையர்களின் அறிவியல், அரசியல், அழிவியலை வாழ்வியலாகக்கொண்டு புதிய பாரதத்தைப் படைக்கப் புறப்பட்டார் நேரு. காந்தியைக் கொன்றுவிட்டு, நேருவோடு நின்று நாம் விதைத்த வினையை இன்றைக்கு அறுத்துக் கொண்டு இருக்கிறோம். நேருவிடம் இருந்த எளிமையும் உண்மையும் இல்லாத அவரது வழித்தோன்றல்களால் நாம் மீண்டும் முதற் கட்டத்துக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
முன்பு அழையா விருந்தாளிகளாக வந்த வெள்ளைக்கார கம்பெனிகளை இப்போது காலில் விழுந்து வருந்தி அழைத்து வந்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும், அணு உலைப் பூங்காக்களிலும் அமர்த்தி புளகாங்கிதம் அடை​கிறோம். காலனி ஆதிக்க நாடகத்தின் அடுத்த அங்கம் அரங்கேறுகிறது. நமது கைதட்டல்களுடன்!
குஜராத் மாநிலத்தின் பாவ்நகர் மாவட்டம் மித்தி விர்தி எனும் ஊரில் ஏ.பி.1,000 அமெரிக்க அணு உலைப் பூங்கா நிறுவப்பட இருக்கிறது. மித்தி விர்தி என்றால் இனிப்பான தண்ணீர் என்று அர்த்தம். கடலோரத்திலேயே தண்ணீர் அப்படி ஒரு சுவையோடு இருக்கிறது. அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மீனவ மக்களும், விவசாயிகளும் இந்த அமெரிக்க அணு மின் திட்டத்தை வெறுக்கிறார்கள், எதிர்க்கிறார்கள்.
அடுத்த மாநிலமான மகாராஷ்டிராவில் ரத்ன​கிரி மாவட்டம் ஜைதாப்பூரில் அரெவா எனும் பிரெஞ்சு நிறுவனத்தின் இ.பி.ஆர். அணு உலைப் பூங்கா அமைய இருக்கிறது. இங்கும் மீனவர்களும், விவசாயிகளும் எதிர்த்துப் போராடுகிறார்கள். அணு ஆயுதங்களை எதிர்த்தும், அணு உலைகளை ஆதரித்தும் வந்த கம்யூனிஸ்ட்கள், ஜைதாபூர் திட்டத்தை எதிர்க்கிறார்கள். ஓர் அண்மைச்சந்திப்பின்போது வலது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ராஜாவிடம் காரணம் கேட்டோம். 'அது நிரூபிக்கப்​படாத தொழில்நுட்பம்’ என்றார். அப்படியானால், 'கூடங்குளத்தில் அமைய இருக்கும் ரஷ்ய வி.வி.இ.ஆர்.1000 அணு உலையும் நிரூபிக்கப்படாத தொழில்​நுட்பம்தானே?’ எனக் கேட்டபோது, 'கூடங்குளம்பற்றி எனக்குத் தெரியாது!’ என்றார்.
தற்போது கூடங்குளம் அணு மின் நிலையங்​களுக்கு எதிராக மக்கள் வெகுண்டெழுந்து போராடுகிறார்கள். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்டதுபோல... வேலையும் கிடைக்கவில்லை. வளர்ச்சியும் வரவில்லை; ஊரும், உறவும்கூட கைவிட்டுப் போய்விடுமோ என அஞ்சுகிறார்கள். கூடங்குளம் போன்ற ரஷ்ய அணு உலைப் பூங்கா மேற்கு வங்க மாநிலம் பூர்பா மேதினிப்பூர் மாவட்டம் ஹரிப்பூரில் நிறுவத் திட்டம் இடப்பட்டது. அணு சக்தித் துறை அதிகாரிகள் வந்தபோதெல்லாம், உள்ளூர் மக்கள் குடும்பத்தோடு சாலைகளில் படுத்து அவர்களைத் தடுத்ததாகச் சொன்னார்கள். திரிணாமுல் காங்கிரஸும், மாவோயிஸ்ட்களும் மக்களை ஆதரித்தார்கள். முதல்வர் பதவி ஏற்றிருக்கும் மம்தா பானர்ஜி, 'இந்தத் திட்டம் தேவை இல்லை’ என்றும், 'வங்க மாநிலத்திலே எங்கும் வேண்டாம்’ என்றும் அறிவித்து இருக்கிறார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் கொவாடா எனும் இடத்தில் அமெரிக்காவின் ஏ.பி.1,000 அணு உலைப் பூங்கா அமைக்க அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஜெனரல் எலெக்ட்ரிக், வெஸ்ட்டிங் ஹவுஸ் எனும் நிறுவனங்கள்தான் இந்த அணு உலைகளைத் தயாரித்து இயக்க இருக்கின்றன. ஜப்பானில் வெடித்த ஃபுகுஷிமா உலைகள், ஜெனரல் எலெக்ட்ரிக் உலைகள்தான்.
இவை எல்லாம் போதாதென்று தென் கொரியாவி​டம் இருந்து ஓ.பி.ஆர். அணு உலைகள் வாங்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. கடந்த ஜூலை மாதம் தென் கொரியாவுக்குச் சென்ற நமது ஜனாதிபதி, அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார். அண்மையிலேயே ஜப்பான் நாட்டில் சந்தித்த தென் கொரிய நண்பர்கள், 'ஒரு பெண் தலைவர் அதுவும் ஓர் இந்தியப் பெண் தலைவர் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டது ஆச்சர்யமாகவும் வேதனையாகவும் இருந்தது’ என்று சொன்னார்கள். என்னால் எதுவும் பேச இயலவில்லை.
ஒரிசா கடற்கரை உட்பட நாட்டின் பல பகுதிகளில் புதிய அணு மின் நிலையங்கள் திட்டமிடப்​படுகின்றன. இந்த அணு உலைப் பூங்காக்கள் எல்லாம் பூத்துக் குலுங்கும்போது, நமது காற்றும், மண்ணும், மண்ணில் வளர்பவை, வாழ்பவை எல்லாமும், நீரும், கடலும், கடலுணவும் - அனைத்துமே விஷமாக்கப்படும். நவீன கிழக்கிந்திய கம்பெனிகள் தம் கொள்ளை லாபத்தைக் குவித்து வைத்து... அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும், பிரான்ஸுக்கும் அனுப்புவார்கள். இந்திய ஏஜென்டுகள் தங்களது கமிஷன்களை ஸ்விஸ் வங்கிகளில் சேமித்து வைப்பார்கள்.
முதலாம் காலனி ஆதிக்கத்தினால் நடுத்தெருவில் விடப்பட்ட பெண்கள், தலித்துகள், அமைப்புசாரா தொழிலாளர்கள், விவசாயக் கூலிகள், நகர்ப்புற ஏழைகள் இன்னும் நசுக்கப்படுவார்கள். சட்டபூர்வமான, உள்ளூர் ஏஜென்ட்களின் உதவி​யோடு நடைபெறும் நவீன காலனி ஆதிக்கத்தை எதிர்ப்பது ஆபத்தான வேலை, அகற்றுவது கடினமான காரியம்.
எதிர்காலம் வேண்டும் என்றால் இரண்டாம் விடுதலைப் போர் இன்றே, இப்போதே, இங்கேயே தொடங்கப்பட வேண்டும். அற வழியில் போரிடத் தயாராவோம்!
விஞ்ஞானி ஏ.ஜி. சத்யநேசன்
1926-ம் ஆண்டு பிறந்து, இரண்டு முனைவர் பட்டங்கள் பெற்று, இந்தியாவின் சிறந்த விஞ்ஞானிகளுள் ஒருவராக உயர்ந்தவர் டாக்டர் சத்யநேசன். வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையிலும், மருத்துவத் துறையிலும், பணியாற்றினார். பிரசித்தி பெற்ற அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக் குழுவிலும் கொச்சியில் உள்ள மத்தியக் கடல் மீன் ஆய்வு நிறுவனத்திலும் சிறப்பு அறிவியல் அறிஞராகக் கடமையாற்​றியவர். 1982-ம் ஆண்டு இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். அணு மின் நிலையங்களைக் கடுமையாக எதிர்க்கும் இந்த மக்கள் விஞ்ஞானி, கூடங்குளம் அணு மின் நிலையத்துக்கு எதிராகப் பேசியும், எழுதியும், போராடியும் வருகிறார்.
- அதிரும்..
 ******************************************************************************

மிஸ்டர் மியாவ்: கோபக்கார தாத்தா

மதுரையில் 'விருமாண்டி’ படத்தின் பூஜையை விமரிசையாக கொண்டாடினார், கமல். அதுபோல 'வேலாயுதம்’ படத்தின் ஆடியோ விழாவை மதுரையில் நடத்த ஆசைப்படுகிறார், விஜய். தகவல் ஆஸ்கார் ரவியின் காதுக்கு போக... உடனடியாக ஓகே சொல்லிவிட்டாராம். அப்புறமென்ன ரசிகர் கூட்டத்தை சேர்க்கும் செயல்... ரகசியமாக நடந்து வருகிறது! 
'பையா’ படம் பரபரப்பாக தமிழகத்தில் கல்லா கட்டியது. அந்தப் படத்தை இந்தியில் ரீ-மேக் செய்யப் போகிறார்கள். தம்பி கார்த்தி நடித்த கேரக்டரில் சூர்யா நடிக்கிறார்!    
அரசியல் நெருக்கடியால், 'மங்காத்தா’ படத்தை வேறு சினிமா கம்பெனிக்கு விற்றார், அழகிரி மைந்தன். இந்த விஷயம் கேட்டு கோபமான தாத்தா கருணாநிதி ''அவங்களுக்கு பயந்துக்கிட்டு எதுக்கு படத்தை விக்கிற... தைரியமா நீயே படத்தை ரிலீஸ் பண்ணு... என்னதான் நடக்குதுன்னு பாக்குறேன்...'' என்று உஷ்ணமானாராம்!
தெலுங்கு சினிமாவுக்கு, 'குட்பை’ சொல்லி விட்டார், அனுஷ்கா. கமலின் 'விஸ்வரூபம்’, ஆர்யாவுடன் செல்வராகவன் படம், சுராஜுடன் கார்த்தி படம், விஜய்யுடன் விக்ரம் படம் என்று நிரந்தரமாக சென்னையிலேயே டேரா போட்டுவிட்டார்.
'வேலாயுதம்’ முடித்த கையோடு அர்ஜுன் நடிக்கும் படத்தைத் தயாரிக்​கிறார், ஆஸ்கார் ரவிச்சந்திரன். செல்வராகவன் உதவியாளர் இளவரசன் இயக்குகிறார்.


எலியும் பூனையுமாய் இருந்த தள நடிகரையும்  புத்த டைரக்டரை​யும்  இணைத்து வைத்தவர், மாஜி பிரமாண்ட தயாரிப்​பாளர்.  'தன்னைத்தான் தயாரிக்க அழைப்பார்கள்’ என்று ஆவலுடன் அவர் காத்திருக்க, இயக்குநரே தயாரிப்பாளராகிவிட்டார்.
அந்த மகா கலைஞனுக்கு  ஏன் இந்த சீப் பப்ளிசிட்டி ஆசை என்று அவ்விட பூமியில் ஆதங்கம் கொள்கிறார்கள். உலகையே உலுக்​கிய ஹாலிவுட் படத்தின்  கதை என்னுடையது என்று அலப்பறை செய்கிறாராம்.

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010