********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

புனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்

Monday, August 1, 2011


புனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்
கதை-கவிதை கவிதை
ஞாயிறு, 31 ஜூலை 2011 17:11
மறைவானில் உன்னிருக்கை
... மாநிலமும் சிறுதுணுக்கே
இறைவா! உன்  பார்வையிலே
... இவ்வுலகும் ஒரு துளியே!
குறையேதும் இல்லானே!
... 
கொற்றவனே உனைவணங்கி
முறையான நற்பாடல்
... 
முகிழ்க்கின்ற வேளையிதே!

சிறைபட்ட சாத்தானும்
... செயலற்று நின்றுவிட
மறையீந்த மாதத்தில்
... மாந்தரினம் மனந்திருந்த
பிறையாக ரமளானை
... பரிசளித்த பேரிறையே!
நிறைவான நல்வாழ்வை
... நித்தமும் தருவாயே!

கறைபட்ட  மனமெல்லாம்
... கழுவுதற்கும் அறியாமல்
குறைபட்ட மனிதருளம்
... குறுகிப்போய்  நிற்கையிலே
பிறைபூத்த ரமளானும்
... புனிதத்தின் அடிவானில்
நிறைவான மதியாகும்
... நம்பிக்கை பூரணமே!

கறைநீக்கும் கண்ணீரும்
... கடிமனத்தில் ஊற்றெடுக்க
இறைவா!உன் கருணையிலே
... ஒழிக்கின்றோம் பாவத்தை!
மறையோதி உணர்கையிலே
... மனமெல்லாம் பேருவகை
நிறைவான நற்பயிற்சி
... நல்குவது ரமளானே! 

- கவிஞர் இப்னு ஹம்துன்

********************************************************************************************

புனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்
கதை-கவிதை கவிதை
ஞாயிறு, 31 ஜூலை 2011 17:11
மறைவானில் உன்னிருக்கை
... மாநிலமும் சிறுதுணுக்கே
இறைவா! உன்  பார்வையிலே
... இவ்வுலகும் ஒரு துளியே!
குறையேதும் இல்லானே!
... 
கொற்றவனே உனைவணங்கி
முறையான நற்பாடல்
... 
முகிழ்க்கின்ற வேளையிதே!

சிறைபட்ட சாத்தானும்
... செயலற்று நின்றுவிட
மறையீந்த மாதத்தில்
... மாந்தரினம் மனந்திருந்த
பிறையாக ரமளானை
... பரிசளித்த பேரிறையே!
நிறைவான நல்வாழ்வை
... நித்தமும் தருவாயே!

கறைபட்ட  மனமெல்லாம்
... கழுவுதற்கும் அறியாமல்
குறைபட்ட மனிதருளம்
... குறுகிப்போய்  நிற்கையிலே
பிறைபூத்த ரமளானும்
... புனிதத்தின் அடிவானில்
நிறைவான மதியாகும்
... நம்பிக்கை பூரணமே!

கறைநீக்கும் கண்ணீரும்
... கடிமனத்தில் ஊற்றெடுக்க
இறைவா!உன் கருணையிலே
... ஒழிக்கின்றோம் பாவத்தை!
மறையோதி உணர்கையிலே
... மனமெல்லாம் பேருவகை
நிறைவான நற்பயிற்சி
... நல்குவது ரமளானே! 

- கவிஞர் இப்னு ஹம்துன்

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010