தமிழக சட்டசபை நிகழ்ச்சிகளை, பார்வையாளர் மாடத்தில் இருந்து பார்த்து விட்டு, லஞ்ச் டயத்தில் பசியுடன் நம் அலுவலகத்தில் குதித்தார் கழுகார். மினி மீல்ஸை எடுத்துப் பிரித்து வைத்தோம். ரசனையுடன் ரசித்துச் சாப்பிட்டு முடித்தார்.
''தா.கிருட்டிணன் கொலை வழக்கு, மதுரை தினகரன் அலுவலக எரிப்பு வழக்குகளில் முக்கியக்
குற்றவாளிகள் தந்திரமாகத் தப்பித்து விட்டதாகவும், அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என, மதுரை மக்கள் சார்பாகக் கோரிக்கை வைத்தாரே, திருமங்கலம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. முத்துராமலிங்கம்?'' என்று சப்ஜெக்டை நாமே எடுத்துக் கொடுத்தோம்!
''அதைத்தான் நானும் சொல்ல வந்தேன்!'' என்று பாக்கெட்டில் இருந்த குறிப்பு நோட்டை விறுவிறுவென பிரித்த கழுகார்,

''தூசு தட்டத் தயாராகிவிட்டார்கள் என்று சொல்லும்!''
''இதற்கு முன்பாக தென் மாவட்ட தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவரைத் தூக்குவதற்கு வேகவேகமாகக் காய் நகர்த்துகிறார்கள். இவர் மூலம், வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகள், மர்மக் கொலைகள் உள்ளிட்ட பல பகீர் ரகசியங்கள் அம்பலத்துக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பில், சீக்ரெட் ஆபரேஷனில் இறங்கி இருக்கிறது போலீஸ். அ.தி.மு.க. வட்டத்திலும் எக்ஸுக்கு வலுவான தொடர்பு... கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வி.ஐ.பி. ஒருவரை எதிர்த்துப் போட்டியிட்டார். தன்னால் தாக்குப் பிடிக்க முடியாது எனப் புரிந்து, 'நான் ஜெயிச்சா என்ன, அண்ணன் ஜெயிச்சா என்ன?’ என்று சொல்லிட்டுப் படுத்துவிட்டார். எதிர்த்துப் போட்டியிட்ட அ.தி.மு.க. வி.ஐ.பி. அவரை நன்கு கவனித்ததாகவும் சொல்கிறார்கள். 'ஒரு நிழல் பிரமுகர், தென் மாவட்ட தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் இருவர், ஒரு மாவட்டச் செயலாளர், வட மாவட்ட அமைச்சர் ஒருவர் ஆகிய இவர்களோடு இந்த எக்ஸ் எம்.எல்.ஏ-வும் சேர்ந்து கொண்டு அண்ணனுக்கே தெரியாமல் தனிக் கூட்டணி அமைத்து உள்ளார்கள். அதிகாரத்தால் வளைத்துச் சுருட்டியதை சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மாலத் தீவு உள்ளிட்ட நாடுகளுக்குக் கொண்டுபோய்விட்டது இந்த அறுவர் கூட்டணி’ என்றும் சொல்கிறார்கள்!''
''புது ஆக்ஷன் டீம்தான் போட வேண்டும்!''
'' 'மூணாறு பகுதியில் உள்ள ஒரு காட்டேஜ்தான் அறுவர் அணி அடிக்கடி சந்தித்துப் பேசும் இடம். பணம் கைமாறியதும், சென்டிமென்ட்டாக இங்கே உட்கார்ந்து பேசுவார்கள். டீல் முடிந்ததும், இதில் யாராவது இரண்டு பேர் மட்டும் திருவனந்தபுரம் வழியாக சம்பந்தப்பட்ட நாட்டுக்குப் பயணிப்பார்கள். அந்த இருவரில் ஒருவராக எக்ஸ் எம்.எல்.ஏ. கட்டாயம் இருப்பார். ஏனென்றால், அங்குள்ள வரவு செலவுகளைக் கண்காணித்துக்கொள்பவர் எக்ஸ். தேர்தல் முடிவுகள் வந்த நேரத்தில் இப்படி அவசரமாக ஹவாலா மூலம் சிங்கப்பூருக்கு பல கோடி போயிருக்கிறது’ என்றும் சொல்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது அன்னியோன்னியமாக இருந்த இவர்கள் அத்தனை பேருமே இப்போது சிக்கலில் இருக்கிறார்கள். தங்களுக்கு எந்த பாதிப்பும் வரக் கூடாது என்று எக்ஸ் எம்.எல்.ஏ. உட்பட மூன்று பேர், கேரளாவில் அட்டிமாலி என்ற இடத்தில் இருக்கிற சக்கிகுளத்துக் காவு அம்மன் கோயிலில் விசேஷ பூஜை செய்தார்கள். பூஜையில் மந்திரிக்கப்பட்ட சிவப்புக் கயிறை மூவருமே கையில் கட்டி உள்ளனர். இப்போது கைதாகி சிறையில் இருக்கும் ஒருவர் கையிலும் அது இருக்கிறது!''
''புது சினிமா மாதிரி இருக்கே!''

''தலைமைச் செயலகத்தின் செய்தித் துறை பக்கம் எட்டிப்பார்த்தேன். அதிகாரிகள் பம்பரமாக சுழல்கிறார்கள். வருகிற 23-ம் தேதியன்று அ.தி.மு.க. அரசு பதவியேற்ற 100 நாள் விழாவைக் கொண்டாடு கிறார்களாம். சாதனைகளைப் பட்டியல் போட்டு மக்கள் மத்தியில் கொண்டுபோகும்படி முதல்வர் ஜெயலலிதா சொல்லி இருக்கிறாராம். குறிப்பாக, பத்திரிகையாளர் ஒய்வு ஊதியம்




''விழாக்கள் ஆடம்பரம் இல்லாமல் நடக் கட்டும்!''
''சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு நித்யானந்தாவை வரவழைத்தார்களாமே...''
''நித்யானந்தா ஆசிரமம் சார்பில் கொடுக்கப் பட்டிருந்த புகார் சம்பந்தமாக ஏற்கெனவே பலரிடம் விசாரித்து முடித்துவிட்டார்கள். இப்போது நித்யானந்தாவை வரவழைத்து நடந்த சம்பவங் களை முழுமையாகக் கேட்டு பதிவு செய்து கொண்டார்களாம். அடுத்து ரஞ்சிதாவிடமும் விசாரணை இருக்கலாம். நித்யானந்தாவை மிரட்டியதாகச் சொல்லப்படுபவர்கள் மீது கைது நடவடிக்கைகள் அதிரடியாக எடுக்கப்படலாம்...''
''ம்...''
''சென்னைப் புறநகரில் இருக்கும் மருந்து கம்பெனியை மூடிய விவகாரத்தை நான் உமக்குச் சொல்லி இருந்தேன்...'' என்று கழுகார் சொல்ல, குறுக்கிட்ட நாம்,
''நாங்களும் விரிவாகப் போட்டிருந்தோமே!'' என்றோம்.
''சரிதான்... அதைத் தொடர்ந்து, அந்தக் கம்பெனியைத் திறக்க முதல்வர் உத்தரவிட்டு இருக்கிறார். மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவரை அழைத்த முதல்வர், 'அந்த மருந்து கம்பெனியை ஓப்பன் பண்ண அனுமதி கொடுத்திடுங்க. இனியாவது அவர்களை நாகரிகமாக நடந்துக்க சொல்லுங்க!’ என்று எச்சரிக்கும் தொனியில் சொல்லி அனுப்பி னாராம். அந்த அதிகாரியும் சம்பந்தப்பட்ட மருந்து கம்பெனி உரிமையாளரைக் கூப்பிட்டு, முதல்வரின் வார்த்தைகளை அப்படியே சொல்லி, கம்பெனியை திறக்க அனுமதி கடிதத்தையும் கொடுத்து அனுப்பி னாராம். இப்போது வழக்கம்போலசெயல்பட ஆரம்பித்துவிட்டதாம், அந்த மருந்து கம்பெனி'' என்ற தகவலோடு பேக்கப் ஆனார் கழுகார்!
படங்கள்: என்.விவேக், ஜெ.தான்யராஜு
அங்காடித் தெருவில் ஐ.டி-யின் அதிரடி!

'அவுங்களுக்கு 50 கோடி அவுட்’ என்று போட்டியாளர்கள் ஜாலி காட்ட... 'இங்க எப்ப வருவாங்களோ?’ என இன்னும் சில பெரும்புள்ளிகள் கிலி பிடித்துக் கிடக்கிறார்கள்.
நன்றி: ஜூவி
0 comments:
Post a Comment