********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

கல்லறைகளும் காவியமாகும்! – ஒரு கஷ்மீரத்து உளக்குமுறல்

Saturday, August 27, 2011

imagesCAEY3BUJ
நெஞ்சிலே நெருஞ்சி முட்களும்,
வயிற்றிலே நெருப்புகங்குகளும்
நெற்றியிலே தோட்டாக்களும்
சுமப்பது என்னவோ
நாங்கள் பெற்ற வரமோ?

உங்கள் வீரத்தை நிரூபிக்க
எங்களின் உயிர்கள் விளைநிலமாகின

உங்கள் தேசபக்திக்கு
எங்கள் மண் பலிகடாவானது!
எங்களின் கற்புகள்
உங்களின் வேள்விக்கு விறகாக மாறியன!

உங்கள் துரோகத்தின் பிழைகள்
எம் சந்ததியினரின் உள்ளங்களில்
இழைகளாக நிழலாடும்

உயிர்களை பறிப்பதால்
உணர்வுகளை அடக்கிவிடலாம் என
கனவு காண்கின்றீர்!
நெருப்பு உலைகளில் ஏற்றினாலும்
எங்கள் உணர்வுகள் உருக்குலையாது!

உளக்குமுறல்களை வெளிப்படுத்தினால்
உள்நாட்டு கலவரம் என்கின்றீர்!

கல்லறைகளில் புதைப்பதால்
எங்களின் கனவுகள் அஸ்தமிக்காது
இனி எம் கல்லறைகளும் காவியமாகும்!
ஒரு நாள் எங்கள் கஷ்மீர் மீண்டும்
ஓவியமாகும்!

-ஆயிஷாமைந்தன்
********************************************************************************************
imagesCAEY3BUJ
நெஞ்சிலே நெருஞ்சி முட்களும்,
வயிற்றிலே நெருப்புகங்குகளும்
நெற்றியிலே தோட்டாக்களும்
சுமப்பது என்னவோ
நாங்கள் பெற்ற வரமோ?

உங்கள் வீரத்தை நிரூபிக்க
எங்களின் உயிர்கள் விளைநிலமாகின

உங்கள் தேசபக்திக்கு
எங்கள் மண் பலிகடாவானது!
எங்களின் கற்புகள்
உங்களின் வேள்விக்கு விறகாக மாறியன!

உங்கள் துரோகத்தின் பிழைகள்
எம் சந்ததியினரின் உள்ளங்களில்
இழைகளாக நிழலாடும்

உயிர்களை பறிப்பதால்
உணர்வுகளை அடக்கிவிடலாம் என
கனவு காண்கின்றீர்!
நெருப்பு உலைகளில் ஏற்றினாலும்
எங்கள் உணர்வுகள் உருக்குலையாது!

உளக்குமுறல்களை வெளிப்படுத்தினால்
உள்நாட்டு கலவரம் என்கின்றீர்!

கல்லறைகளில் புதைப்பதால்
எங்களின் கனவுகள் அஸ்தமிக்காது
இனி எம் கல்லறைகளும் காவியமாகும்!
ஒரு நாள் எங்கள் கஷ்மீர் மீண்டும்
ஓவியமாகும்!

-ஆயிஷாமைந்தன்

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010