********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய் - செங்கொடி

Tuesday, August 16, 2011


ஆகஸ்ட் 15. இன்று சுதந்திர தினாமாம். அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாளாம். இன்று கொண்டாட்ட தினம். இன்றைய இந்த கொண்டாட்டத்தை

எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை விட்டு விடுவோம். ஏனென்றால் அது நமீதாக்களின் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்ட உச்சரிப்புகளுக்கு சிக்கெடுப்பது போன்றது. எனவே, ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்போம்.
1947ல் நடந்தது விடுதலையல்ல, ஆட்சி மாற்றம் மட்டுமே. இங்கிலாந்து வெள்ளை அரசின் நேரடி காலனி நாடாக வைத்து இந்தியாவை சுரண்டிக் கொண்டிருந்த வெள்ளையர்கள், மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் காந்தியாரின் கையிலிருந்து மெல்ல நழுவிக் கொண்டிருப்பதை உணர்ந்து தங்களின் சுரண்டலுக்கு எவ்வித பாதகமும் வந்துவிடாதபடி தங்களைக் காக்க விரும்பினார்கள். அதனால் தங்களால் வளர்த்துக் கொண்டுவரப்பட்ட காங்கிரஸிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு (கவனிக்க ஆட்சியை மட்டும்) அதிகாரத்தை தங்கள் வசம் வைத்துக் கொண்டார்கள். அதனால் 47ல் நடந்தது ஆட்சி மாற்றம் மட்டுமே விடுதலை அல்ல என்கிறோம்.
அன்று ஏகாதிபத்தியத்தின் தலைமை பாத்திரத்தை வகித்தது இங்கிலாந்து. இன்று அது அமெரிக்காவிடம். இந்தியா எனும் சுதந்திர நாடு தீட்டும் திட்டங்களின் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் நலன் மறைந்திருக்கிறது என்பது எந்த மறைவும் இன்றி வெளிப்படையாக தெரியும் இந்த நாட்களில் சுதந்திரம் என்று எதைக் கொண்டாடுகிறார்கள் இவர்கள்?
1931 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கார் அவர்கள் காந்தியைச் சந்தித்து கூறுகிறார்,
எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.
அம்பேத்காரின் இந்த விமர்சனத்திற்கான உள்ளீடு 60 களிலும் மாறவில்லை என போட்டுடைக்கிறார் தந்தை பெரியார்,
ஆகஸ்ட் பதினைந்தை, ஆரியத்தின் – பார்ப்பனியத்தின் சுதந்திரம் என்றும் சுயராஜ்ஜியம் என்றும் நாம் சொல்ல வேண்டியதாக இருப்பதை, முன்பு ஒப்புக்கொள்ளாதவர்களும் கூட ஒப்புக் கொள்ளத்தக்கவிதமாய் ஆட்சி நடைபெற்று இப்பொழுது மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் பார்ப்பனியம் திராவிடர்கள் மீது பாய்வதற்குத் தன் கொம்புளை நன்றாகக் கூர்மையாக்கிக் கொள்ளுகிறது.
படையெடுத்து வந்த வெளிநாட்டவர்களுக்கெல்லாம் இந்த நாட்டைக் காட்டிக் கொடுத்து, தான் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தோடு நடந்து வந்தது பார்ப்பனியம். வெள்ளையராட்சி ஏற்பட்ட பிறகு, அதை நிலைக்க வைத்து விக்டோரியா காலத்தில் ஒப்பந்தம் பேசித் தனது சுக வாழ்வுக்குக் கேடு இல்லாதபடி பார்த்துக் கொண்டு, முன்பு தன்னால் கூறிய மிலேச்சர்களுக்குப் பின்பு பூரண கும்பம் தூக்கிப் பூஜிக்க ஆரம்பித்தது பார்ப்பனீயம். அந்தக் காலத்தில் மற்ற மக்களையெல்லாம் நிரந்தர அடிமையாயிருக்கத் திட்டம் வகுத்துக் கொடுத்தே, தான் மட்டும் கங்காணியாக இருக்க வழி செய்து கொண்டது பார்ப்பனீயம் ……
……. வெளியுலக நெருக்கடியின் காரணமாகக் கலகக்காரர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு தன்னுடைய நன்மைக்குக் கேடில்லாதபடி, இந்த நாட்டை வடநாட்டுப் பாசிஸத் தலைவர்கள் கையில் ஒப்படைத்து விடுகிறேன் என்று வெள்ளைக்காரன் கூறிய பிறகு, இந்த நாட்டுப் பார்ப்பனியத்துக்கு ஒரே கும்மாளமாகக் கொண்டாட்டமாக ஆகிவிட்டது. தன்னினத்திற்கு மறைவாகச் சாதங்களைத் தேடிக் கொண்டு வந்த நிலைமை மாறி வெளிப்படையாகவே கொக்கரித்துத் திரியும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இன்று திண்ணியங்களுக்கும், கயர்லாஞ்சிகளுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டு சுதந்திரம் கொண்டாடிக் கொண்டிருப்பவர்களே, இன்றும் இந்த நிலை மாறிவிட்டது என நம்புகிறீர்களா? என்றால் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் என்பதன் பொருள் என்ன?
முக்கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருந்தும், – தொலைதூர கிராமங்களை விடுங்கள் – பெரு நகரத்து மக்கள் கூட மின்வெட்டிலிருந்து தப்பித்துவிட முடியவில்லை. அதேநேரம் பன்னாட்டு, தரகு நிறுவனங்கள் உள்ளே நுழையும் போதே தடையற்ற மின்சாரம் தருகிறோம் என்று தண்டனிட்டு எழுதிக் கொடுக்கிறார்களே. இதன் பிறகும் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதன் பொருள் சுதந்திரம் என்று எப்படி கூறுவீர்கள்?
தொழில் முன்னேற்றத்திற்கு உதவும் பொருட்டு பேரணைகள் கட்டுகிறோம் என்றார்கள். பல பத்தாண்டுகள் கடந்தும் அந்த அணைகளுக்காக பெயர்க்கப் பட்டவர்கள், நிவாரணம் கோரி இன்றும் அரசிடம் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேக்கப்பட்ட நீரோ நீலத்தங்கமாய் பன்னாட்டு முதலாளிகளின் கைகளை அலங்கரிக்கிறது. இதன்பிறகும் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதை சுதந்திரம் என்றா கருதுகிறீர்கள்?
வடகிழக்கு மாநிலங்களின் கனிமங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் இராட்சச மண்வெட்டியால் சுரண்டப்பட காத்திருக்கிறது. தங்கள் வாழ்விடங்களின் கீழே கனிமங்களை அடைகாத்த மக்களோ அவர்களின் வரிப்பணத்தைக் கொண்டே பசுமையாக வேட்டையாடப்படுகிறார்கள். அவர்களின் கண்களில் கரிப்பது நீங்கள் கொண்டாடும் சுதந்திரம் தான் என்பது புரிகிறதா உங்களுக்கு?
விவசாயிகளுக்கே தெரியாமல் வேளான் கழகங்கள் மூலம்  மான்சாண்டோவின் மரபீணி விதைகளை விதைத்து மண்ணை மலடாக்கி அதில் விவசாயிகளின் கழுத்துக்கு கயிற்றை பயிர் செய்வது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான். தெரியுமா உங்களுக்கு? மரபணு மாற்றப்பட்ட பயிர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்தாலோ, சுவரொட்டி ஒட்டினாலோ உள்ளே தள்ளுவோம் என்று சட்டமியற்றி கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் கைகள் தான். தெரியுமா உங்களுக்கு?
லட்சக்கணக்கான மக்களை பலி கொடுத்துவிட்டு இன்னமும் இழப்பீட்டுக்காக கையேந்திக் கொண்டிருக்கிறார்கள் போபால் மக்கள். ஆனால் அவர்களைக் கொன்ற யூனியன் காரபைடு ஆண்டர்சனை பத்திரமாக விமானம் ஏற்றி தப்பிக்கைவைத்த அரசோ, இனி இது போன்ற விபத்துகளுக்கு(!) கொள்ளையடித்தவர்கள் பொறுப்பேற்க வேண்டாம், அரசே அவர்களின் வரிப்பணத்திலிருந்து அவர்களுக்கே பிச்சையிடும் என்று சட்டமியற்றியிருக்கிறது. இதுதான் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் பொருள் என்பது விளங்கவில்லையா உங்களுக்கு?
 
தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தனியாரிடம் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு அரசு பள்ளிகளுக்கு வானம் பார்த்த கூரைகளையும், உடைந்த கரும்பலகைகளையும் பரிசளித்திருக்கிறது அரசு. கல்விக்கான ஒதுக்கீடுகளை வெட்டி வெட்டி இராணுவத்தின் கொண்டைகளில் பூவாய் சூடியிருப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
சோதனைக் கருவிகளின்றி அரசு மருத்துவமனைகளையே நோய்க்கு ஆளாக்கிவிட்டு மக்களின் கைகளில் காப்பீடு அட்டைகளைத் திணித்து அவர்களை தனியார் அட்டைகள் இரத்தம் உறிஞ்சியெடுக்க அனுமதித்திருப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பது எப்படி உங்களுக்கு தெரியாமல் போயிற்று?
மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டது குறித்து கிஞ்சிற்றும் கவலையுறாமல் அம்பானிகளின் சொத்துச் சண்டையை கரிசனையுடன் தீர்த்துவைத்ததே நாடாளுமன்றம். நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் பெயரால் தான் இது செயல்படுத்தப்பட்டது என்பது தெரியாதா உங்களுக்கு?
டன் டன்னாய் அரசி, உணவு தானியங்கள் புழுத்துப் போய் எலிகள் தின்றாலும் ஏழைகளுக்கு அதனைத் தரமாட்டேன் என்று தெனாவட்டாய் கூறினாரே ப்ப்ப்ப்ப்ப்பிரதமர். அவருக்கு அந்த திமிரை கொடுத்தது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பதை ஏன் நீங்கள் அறிந்து கொள்ளவில்லை?
ஏதோ ஓர் அரசன் கேளிக்கைகளுக்கு தடைவரக் கூடாதென்று இருட்டை விரட்டுவதற்கு அடிமைகளை கட்டிவைத்து எரித்து அந்த வெளிச்சத்தில் நடனத்தை ரசித்தானாம். வரலாற்றின் வக்கிரம் இது. கண்முன்னே எத்தனை எத்தனை தடயங்கள் இருந்தும் பின்னணியில் இருக்கும் மறுகாலனியாக்கத்தை மறந்து சுதந்திரத்தைக் கொண்டாட முடியுமென்றால், அந்த அரசனோடு நடனத்தை ரசித்த கணவான்களைப் போல் அரசன் செய்ததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறப்போகிறீர்களா?
நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கவும் இல்லை, இது உங்களை எழுப்பும் முயற்சியும் இல்லை. ஏனென்றால் நீங்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கக் கூடும். ஆனால் என் முன்னே நின்று கொண்டிருக்கும் இந்த மூன்றரை வயது குழந்தைக்கு உங்களைப் போல் நடிக்கத் தெரியவில்லை. அந்தக் குழந்தையிடம் நான் கேட்கிறேன்.
சுதந்திரம் என்றால் என்ன?
ம்…ம்… குச்சி மிட்டாய் 

********************************************************************************************

ஆகஸ்ட் 15. இன்று சுதந்திர தினாமாம். அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாளாம். இன்று கொண்டாட்ட தினம். இன்றைய இந்த கொண்டாட்டத்தை

எப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை விட்டு விடுவோம். ஏனென்றால் அது நமீதாக்களின் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்ட உச்சரிப்புகளுக்கு சிக்கெடுப்பது போன்றது. எனவே, ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்போம்.
1947ல் நடந்தது விடுதலையல்ல, ஆட்சி மாற்றம் மட்டுமே. இங்கிலாந்து வெள்ளை அரசின் நேரடி காலனி நாடாக வைத்து இந்தியாவை சுரண்டிக் கொண்டிருந்த வெள்ளையர்கள், மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் காந்தியாரின் கையிலிருந்து மெல்ல நழுவிக் கொண்டிருப்பதை உணர்ந்து தங்களின் சுரண்டலுக்கு எவ்வித பாதகமும் வந்துவிடாதபடி தங்களைக் காக்க விரும்பினார்கள். அதனால் தங்களால் வளர்த்துக் கொண்டுவரப்பட்ட காங்கிரஸிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு (கவனிக்க ஆட்சியை மட்டும்) அதிகாரத்தை தங்கள் வசம் வைத்துக் கொண்டார்கள். அதனால் 47ல் நடந்தது ஆட்சி மாற்றம் மட்டுமே விடுதலை அல்ல என்கிறோம்.
அன்று ஏகாதிபத்தியத்தின் தலைமை பாத்திரத்தை வகித்தது இங்கிலாந்து. இன்று அது அமெரிக்காவிடம். இந்தியா எனும் சுதந்திர நாடு தீட்டும் திட்டங்களின் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் நலன் மறைந்திருக்கிறது என்பது எந்த மறைவும் இன்றி வெளிப்படையாக தெரியும் இந்த நாட்களில் சுதந்திரம் என்று எதைக் கொண்டாடுகிறார்கள் இவர்கள்?
1931 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கார் அவர்கள் காந்தியைச் சந்தித்து கூறுகிறார்,
எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.
அம்பேத்காரின் இந்த விமர்சனத்திற்கான உள்ளீடு 60 களிலும் மாறவில்லை என போட்டுடைக்கிறார் தந்தை பெரியார்,
ஆகஸ்ட் பதினைந்தை, ஆரியத்தின் – பார்ப்பனியத்தின் சுதந்திரம் என்றும் சுயராஜ்ஜியம் என்றும் நாம் சொல்ல வேண்டியதாக இருப்பதை, முன்பு ஒப்புக்கொள்ளாதவர்களும் கூட ஒப்புக் கொள்ளத்தக்கவிதமாய் ஆட்சி நடைபெற்று இப்பொழுது மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் பார்ப்பனியம் திராவிடர்கள் மீது பாய்வதற்குத் தன் கொம்புளை நன்றாகக் கூர்மையாக்கிக் கொள்ளுகிறது.
படையெடுத்து வந்த வெளிநாட்டவர்களுக்கெல்லாம் இந்த நாட்டைக் காட்டிக் கொடுத்து, தான் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தோடு நடந்து வந்தது பார்ப்பனியம். வெள்ளையராட்சி ஏற்பட்ட பிறகு, அதை நிலைக்க வைத்து விக்டோரியா காலத்தில் ஒப்பந்தம் பேசித் தனது சுக வாழ்வுக்குக் கேடு இல்லாதபடி பார்த்துக் கொண்டு, முன்பு தன்னால் கூறிய மிலேச்சர்களுக்குப் பின்பு பூரண கும்பம் தூக்கிப் பூஜிக்க ஆரம்பித்தது பார்ப்பனீயம். அந்தக் காலத்தில் மற்ற மக்களையெல்லாம் நிரந்தர அடிமையாயிருக்கத் திட்டம் வகுத்துக் கொடுத்தே, தான் மட்டும் கங்காணியாக இருக்க வழி செய்து கொண்டது பார்ப்பனீயம் ……
……. வெளியுலக நெருக்கடியின் காரணமாகக் கலகக்காரர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு தன்னுடைய நன்மைக்குக் கேடில்லாதபடி, இந்த நாட்டை வடநாட்டுப் பாசிஸத் தலைவர்கள் கையில் ஒப்படைத்து விடுகிறேன் என்று வெள்ளைக்காரன் கூறிய பிறகு, இந்த நாட்டுப் பார்ப்பனியத்துக்கு ஒரே கும்மாளமாகக் கொண்டாட்டமாக ஆகிவிட்டது. தன்னினத்திற்கு மறைவாகச் சாதங்களைத் தேடிக் கொண்டு வந்த நிலைமை மாறி வெளிப்படையாகவே கொக்கரித்துத் திரியும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இன்று திண்ணியங்களுக்கும், கயர்லாஞ்சிகளுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டு சுதந்திரம் கொண்டாடிக் கொண்டிருப்பவர்களே, இன்றும் இந்த நிலை மாறிவிட்டது என நம்புகிறீர்களா? என்றால் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் என்பதன் பொருள் என்ன?
முக்கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருந்தும், – தொலைதூர கிராமங்களை விடுங்கள் – பெரு நகரத்து மக்கள் கூட மின்வெட்டிலிருந்து தப்பித்துவிட முடியவில்லை. அதேநேரம் பன்னாட்டு, தரகு நிறுவனங்கள் உள்ளே நுழையும் போதே தடையற்ற மின்சாரம் தருகிறோம் என்று தண்டனிட்டு எழுதிக் கொடுக்கிறார்களே. இதன் பிறகும் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதன் பொருள் சுதந்திரம் என்று எப்படி கூறுவீர்கள்?
தொழில் முன்னேற்றத்திற்கு உதவும் பொருட்டு பேரணைகள் கட்டுகிறோம் என்றார்கள். பல பத்தாண்டுகள் கடந்தும் அந்த அணைகளுக்காக பெயர்க்கப் பட்டவர்கள், நிவாரணம் கோரி இன்றும் அரசிடம் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேக்கப்பட்ட நீரோ நீலத்தங்கமாய் பன்னாட்டு முதலாளிகளின் கைகளை அலங்கரிக்கிறது. இதன்பிறகும் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதை சுதந்திரம் என்றா கருதுகிறீர்கள்?
வடகிழக்கு மாநிலங்களின் கனிமங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் இராட்சச மண்வெட்டியால் சுரண்டப்பட காத்திருக்கிறது. தங்கள் வாழ்விடங்களின் கீழே கனிமங்களை அடைகாத்த மக்களோ அவர்களின் வரிப்பணத்தைக் கொண்டே பசுமையாக வேட்டையாடப்படுகிறார்கள். அவர்களின் கண்களில் கரிப்பது நீங்கள் கொண்டாடும் சுதந்திரம் தான் என்பது புரிகிறதா உங்களுக்கு?
விவசாயிகளுக்கே தெரியாமல் வேளான் கழகங்கள் மூலம்  மான்சாண்டோவின் மரபீணி விதைகளை விதைத்து மண்ணை மலடாக்கி அதில் விவசாயிகளின் கழுத்துக்கு கயிற்றை பயிர் செய்வது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான். தெரியுமா உங்களுக்கு? மரபணு மாற்றப்பட்ட பயிர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்தாலோ, சுவரொட்டி ஒட்டினாலோ உள்ளே தள்ளுவோம் என்று சட்டமியற்றி கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் கைகள் தான். தெரியுமா உங்களுக்கு?
லட்சக்கணக்கான மக்களை பலி கொடுத்துவிட்டு இன்னமும் இழப்பீட்டுக்காக கையேந்திக் கொண்டிருக்கிறார்கள் போபால் மக்கள். ஆனால் அவர்களைக் கொன்ற யூனியன் காரபைடு ஆண்டர்சனை பத்திரமாக விமானம் ஏற்றி தப்பிக்கைவைத்த அரசோ, இனி இது போன்ற விபத்துகளுக்கு(!) கொள்ளையடித்தவர்கள் பொறுப்பேற்க வேண்டாம், அரசே அவர்களின் வரிப்பணத்திலிருந்து அவர்களுக்கே பிச்சையிடும் என்று சட்டமியற்றியிருக்கிறது. இதுதான் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் பொருள் என்பது விளங்கவில்லையா உங்களுக்கு?
 
தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தனியாரிடம் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு அரசு பள்ளிகளுக்கு வானம் பார்த்த கூரைகளையும், உடைந்த கரும்பலகைகளையும் பரிசளித்திருக்கிறது அரசு. கல்விக்கான ஒதுக்கீடுகளை வெட்டி வெட்டி இராணுவத்தின் கொண்டைகளில் பூவாய் சூடியிருப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா?
சோதனைக் கருவிகளின்றி அரசு மருத்துவமனைகளையே நோய்க்கு ஆளாக்கிவிட்டு மக்களின் கைகளில் காப்பீடு அட்டைகளைத் திணித்து அவர்களை தனியார் அட்டைகள் இரத்தம் உறிஞ்சியெடுக்க அனுமதித்திருப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பது எப்படி உங்களுக்கு தெரியாமல் போயிற்று?
மூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டது குறித்து கிஞ்சிற்றும் கவலையுறாமல் அம்பானிகளின் சொத்துச் சண்டையை கரிசனையுடன் தீர்த்துவைத்ததே நாடாளுமன்றம். நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் பெயரால் தான் இது செயல்படுத்தப்பட்டது என்பது தெரியாதா உங்களுக்கு?
டன் டன்னாய் அரசி, உணவு தானியங்கள் புழுத்துப் போய் எலிகள் தின்றாலும் ஏழைகளுக்கு அதனைத் தரமாட்டேன் என்று தெனாவட்டாய் கூறினாரே ப்ப்ப்ப்ப்ப்பிரதமர். அவருக்கு அந்த திமிரை கொடுத்தது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பதை ஏன் நீங்கள் அறிந்து கொள்ளவில்லை?
ஏதோ ஓர் அரசன் கேளிக்கைகளுக்கு தடைவரக் கூடாதென்று இருட்டை விரட்டுவதற்கு அடிமைகளை கட்டிவைத்து எரித்து அந்த வெளிச்சத்தில் நடனத்தை ரசித்தானாம். வரலாற்றின் வக்கிரம் இது. கண்முன்னே எத்தனை எத்தனை தடயங்கள் இருந்தும் பின்னணியில் இருக்கும் மறுகாலனியாக்கத்தை மறந்து சுதந்திரத்தைக் கொண்டாட முடியுமென்றால், அந்த அரசனோடு நடனத்தை ரசித்த கணவான்களைப் போல் அரசன் செய்ததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறப்போகிறீர்களா?
நீங்கள் தூங்கிக் கொண்டிருக்கவும் இல்லை, இது உங்களை எழுப்பும் முயற்சியும் இல்லை. ஏனென்றால் நீங்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கக் கூடும். ஆனால் என் முன்னே நின்று கொண்டிருக்கும் இந்த மூன்றரை வயது குழந்தைக்கு உங்களைப் போல் நடிக்கத் தெரியவில்லை. அந்தக் குழந்தையிடம் நான் கேட்கிறேன்.
சுதந்திரம் என்றால் என்ன?
ம்…ம்… குச்சி மிட்டாய் 

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010