********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

ராஜீவ் கொலையில் விலகாத மர்ம முடிச்சு!

Sunday, August 21, 2011


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்​டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்... மூவரும் எப்போது வேண்டுமானாலும் தூக்கு மேடையில் நிறுத்தப்படலாம்!
'மரண தண்டனையை பல்வேறு நாடுகள் ஒழித்துவிட்ட பிறகு, இந்தியா அதனைப் பின்​பற்ற வேண்டுமா?’
என்று மனித உரிமையாளர்கள் ஒரு பக்கம் கேட்​கிறார்கள். 'மூன்று தமிழர்கள் உயிரைப் பறிக்கலாமா?’ என்று தமிழின உணர்வாளர்கள் இன்னொரு பக்கம் கேட்கிறார்கள். இதற்கு மத்தியில் ஒரு குரல் வித்தியாசமாக ஒலிக்கிறது. ''ராஜீவ் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு, கொலைச் சதியில் சம்பந்தம் இல்லாதவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவது நியாயமா?’ என்பதுதான் அதிர்ச்சிக்​​குரிய முக்கியக் குரல்!
இவர்கள் அத்தனை பேரும் அடையாளம் சுட்டிச் சொல்வது சந்திராசாமி என்ற மனிதரை!
நேமி சந்த் ஜெயின் என்று அழைக்கப்படும் இவரை சந்திரா​சாமி என்றால்தான் அனை​வருக்கும் தெரியும். முன்​னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு மிக நெருக்கமான நண்பராகவும், ராஜீவ் கொலை நடந்த காலத்தில் இந்திய பிரதமராக இருந்த சந்திரசேகருக்கு நெருங்கிய சகா​வாக​வும் இருந்தார். உலகத்​தின் மிக முக்கியமான ஆயுத வியாபாரியாகச் சொல்லப்படும் கசோக்​கிக்கும் இவருக்கும் நெருங்​கிய தொடர்பு உண்டு. அரசி​யல் தலைவர்களை சதி வேலைகள் செய்து கவிழ்ப்​பதில் கைதேர்ந்தவர் இவர் என்பது வி.பி.சிங் விஷயத்தில் வெளிச்​சத்துக்கு வந்தது. காங்கிரஸில் இருந்து வெளியேறி ஆட்சியைப் பிடித்த வி.பி.சிங்கை எப்படிக் கவிழ்ப்பது என்று சிலர் திட்டமிட்டபோது, செயின் கீட்ஸ் தீவில் வி.பி.சிங் மகனுக்குச் சொத்துகள் இருப்பதாக ஆவணங்களைத் தயாரித்துத் தந்தது இந்த சந்திராசாமிதான். அந்த ஆவணங்கள் போலியானவை என்று நிரூபணம் ஆனபோது, சந்திராசாமி பெயர் டெல்லி மீடியாக்களில் அதிகம் அடிபட்டது. இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய காரியங்களுக்கு சொந்தக்காரர் இந்த சந்திராசாமி!
இவர் மீது, அன்னியச் செலாவணியை மீறிய 12 குற்றச்சாட்டுகள் இருந்தன. அதில் மூன்றில் விடுதலை ஆகிவிட்டார். மீதி 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அவர் எப்போது வெளிநாடு சென்றா லும் டெல்லி நீதிமன்றத்தின் அனுமதி பெற்றே செல்ல முடியும். 'சந்திராசாமியை வெளிநாடு செல்ல அனுமதித்தால், அவர் திரும்பி வர மாட்டார்!’ என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் பதில் மனுத் தாக்கல் செய்வார்கள். குறிப்பிட்ட தொகையை டெபாஸிட்டாகக் கட்டிவிட்டு அவர் செல்லலாம் என்று நீதிமன்றமும் அனுமதிக்கும். இது கடந்த 20 ஆண்டுகளாக நடக்கும் வழக்கம்.
கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி, 'எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும்!’ என்று அனுமதி கேட்டபோது, அமலாக்கத் துறை அதிர்ச்சிக்குரிய காரணத்தைச் சொன்னது. 'சந்திராசாமி வெளிநாடு போனால், திரும்ப மாட்டார். பல ஆதாரங்களை அழித்துவிடுவார். மேலும் அவர் மீது சி.பி.ஐ. வழக்கும் உள்ளது!’ என்றது. 'சி.பி.ஐ. வழக்குத் தொடருமா?’ என்று நீதிபதிகள் கேட்க, 'தொடரும்...’ என்று பதில் தந்தார்கள். ராஜீவ் கொலைச் சதியை விசாரித்த பல்நோக்குக் கண்காணிப்புப் புலனாய்வுப் பிரிவும் அப்போது மனுத் தாக்கல் செய்தது. அதில், 'ராஜீவ் கொலை வழக்கில் சந்திராசாமி சம்பந்தப்பட்டு உள்ளார். எனவே, அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி தரக் கூடாது’ என்று உறுதியாகச் சொன்னது. 'இதற்கு முன்னர் வெளிநாடு சென்றுவிட்டு அவர் திரும்பிவிட்டதாகச் சொல்கிறார். ஆனால், இம்முறை திரும்ப வருவாரா என நீதிமன்றத்துக்கு சந்தேகம் இருக்கிறது. உடல்நிலையைக் காரணமாகக் காட்டுவதால், அனுமதி அளிக்கலாம். 90 லட்சம் ரூபாயை டெபாஸிட்டாகச் செலுத்திவிட்டு, அவர் செல்லலாம்’ என்று நீதிமன்றம் சொல்ல... 'என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ஆனால், என் சீடர்களிடம் வாங்கிச் செலுத்திவிடுவேன்!’ என்று சொன்னார் சந்திராசாமி. பணத்தை உடனடியாகக் கட்டிவிட்டு, வெளிநாடு சென்றார். சந்திராசாமி இதுவரை அமலாக்கத் துறைக்கு 65 கோடி வரை கட்ட வேண்டிய பாக்கி உள்ளதாக அத்துறையின் வக்கீல் நீதிமன்றத்தில் கூறினார். அப்படிப்பட்ட சந்திராசாமியை வளைக்காமல் இருக்கிறார்களே என்பதுதான் தமிழ் உணர்வாளர்களின் முக்கியக் கேள்வியாக இருக்கிறது!
ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இதன் விசாரணை நடந்து, கைதான 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 19 பேரின் தண்டனை விலக்கப்பட்டு, அவர்கள் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்கள். மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற நான்கு பேரின் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதில் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு, அவர் ஆயுள் தண்டனைக் கைதியாக புழல் சிறையில் இருக்கிறார்.
நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ராஜீவுக்குத் தரப்பட்ட பாதுகாப்பில்ஏதாவது குளறுபடிகள் நடந்ததா, அதற்கு யார் குற்றவாளி என்பதை அந்த கமிஷன் விசாரித்தது. இதில் பல அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
மூன்றாவதாக அமைக்கப்பட்டது நீதிபதி ஜெயின் கமிஷன். ராஜீவ் படுகொலை செய்யப்​பட்டதற்கான பின்னணிகள், அதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் பற்றி இது விசாரித்தது. இந்த கமிஷனில்தான் பல்வேறு சர்ச்சைக்குரிய மனிதர்கள் தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தார்கள்.
பல்வேறு வர்த்தகங்களில் சம்பந்தப்பட்ட பப்லு ஸ்ரீவத்சவா என்பவர் ஜெயின்கமிஷனிடம் அளித்த வாக்குமூலத்தில், ''ராஜீவ் கொலைச் செய்தி கேட்டதும்சந்திராசாமி மகிழ்ச்சியில் கூத்தாடினார். 'நரசிம்மராவைப் பிரதமராக்கப்போறேன்...’ என்று சொல்லிக்​கொண்டே, ராவ் வீட்டுக்கு போன் செய்து அரை மணி நேரத்துக்கு மேல் பேசிக்கொண்டு இருந்தார்...'' என்று வாக்குமூலம் கொடுத்தார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. பிரமுகர் ரமேஷ் தலால், 'சந்திராசாமிக்கு இந்த சதியில் பங்கு இருக்கிறது’ என்று சொன்னதாகவும், அதைத் தொடர்ந்து தன்னை சந்திராசாமி மிரட்டியதாகவும் 1995-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேட்டி கொடுத்துள்ளார். சந்திராசாமியின் சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகள் தொடர்பாக, மகந்த் சேவா தாஸ் சிங் என்பவர் ஒரு வாக்குமூலம் கொடுத்தார். அவர், ஷாஹித் பெருமன் சிரோமணி அகாலிதள் அமைப்பின் தலைவர். இவை அனைத்தையுமே பதிவு செய்துள்ளது ஜெயின் கமிஷன்.
ஆனால், சந்திராசாமிக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் திடீரென்று காணாமல்போன தகவல்களும் 97-ம் ஆண்டு அம்பலம் ஆனது. 89-ம் ஆண்டு முதல் ராஜீவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய அதிகாரிகளது அறிக்கையுடன் சந்திரா​சாமியின் தொலைபேசி உரையாடல்களை மறித்துக் கேட்கப்பட்ட செய்திகளின் ஆவணத் தொகுப்பும் காணாமல்போனது.
இவை அனைத்துக்கும் மேலாக பெங்களூ​ருவைச் சேர்ந்த ரங்கநாத் என்பவரது வாக்கு​மூலமும் சந்திராசாமியை நேரடியாகக் குற்றம் சாட்டி இருந்தது. ''பெங்களூருவில் இருந்து எங்களை சந்திராசாமி தப்பவைத்துவிடுவார். நேபாளத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவதாகவும் சொல்லி இருக்கிறார்’ என்று சிவராசன் தன்னிடம் சொன்னதாக ரங்கநாத், தனது வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார். சிவராசன் பெங்களூருவில் தங்குவதற்கு வீடு கொடுத்த ரங்கநாத், ராஜீவ் வழக்கில் 26-வது குற்றவாளியாக இருந்து தூக்குத் தண்டனை பெற்றவர். உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்.
சென்னையில் இருந்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கார்மேகம், ஈழத்துக்குச் சென்று வந்துவிட்டு தனது அனுபவங்களை 'ஈழப் புலிகளுடன் ஒரு வாரம்’ என்ற தலைப்பில் தினமணியில் தொடராக எழுதினார். அவர் இலங்கை சென்றிருந்தபோது, நடிகை பமீலா அங்கு இருந்தது குறித்த தகவலைச் சொல்கிறார். மிஸ் கே.என்.சிங் என்ற பெயரில் பமீலா, ஈழப் பகுதிக்குள் சென்றிருந்தாராம். கொழும்பு சென்ற அவரை விமானப் படை விமானத்தில் சிங்கள அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்தனர். இந்திய அழகு ராணிப் போட்டியில் வென்ற இந்த பஞ்சாபிப் பெண் பிரிட்டனில் குடியிருந்தவர். ஆயுதத் தரகர் என்று டெல்லி மீடியாக்களால் அடையாளப்படுத்தப்படும் கஸோகியுடன் நெருக்கமாக இருந்தவர். அவரைப்பற்றி கொழும்பு பத்திரிகைகள் அப்போது என்ன எழுதியது என்று கார்மேகம் சொல்கிறார்....
'பிரபாகரனை எப்படியும் தேடிப் பிடித்துத் தருவேன் என்று சந்திராசாமி, இந்திய அரசிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாராம். எந்த வழியைக் கையாண்டாவது அதனை செய்து முடிப்பதாக அவர் சபதம் ஏற்றிருக்கிறாராம். அந்த சபதத்தை நிறைவேற்றத்தான், அவர் பமீலாவை இலங்கைக்கு அனுப்பி இருக்கிறார் என்று கொழும்பு நாளேட்டில் செய்தி வந்தது. பமீலா இப்போதும் சந்திராசாமியின் மக்கள் தொடர்பாளர்களில் ஒருவராக இருப்பதாகத் தெரிகிறது. பிரபாகரனை சந்திக்க ஈழப் புலிகள் அனுமதிக்கவில்லை!’ என்று அன்று கொழும்புவில் பரவிய தகவல்களை எழுதுகிறார்.
ஜெயின் கமிஷன் வாக்குமூலங்கள் முதல் கொழும்பு பத்திரிகைகள் வரைக்கும் சந்திராசாமியை நோக்கியே நீளும் நிலையில், அவரை விசாரிக்காமல் ராஜீவ் வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதாக எப்படிச் சொல்ல முடியும்?
ப.திருமாவேலன்


நன்றி: ஜூவி
********************************************************************************************

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்​டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்... மூவரும் எப்போது வேண்டுமானாலும் தூக்கு மேடையில் நிறுத்தப்படலாம்!
'மரண தண்டனையை பல்வேறு நாடுகள் ஒழித்துவிட்ட பிறகு, இந்தியா அதனைப் பின்​பற்ற வேண்டுமா?’
என்று மனித உரிமையாளர்கள் ஒரு பக்கம் கேட்​கிறார்கள். 'மூன்று தமிழர்கள் உயிரைப் பறிக்கலாமா?’ என்று தமிழின உணர்வாளர்கள் இன்னொரு பக்கம் கேட்கிறார்கள். இதற்கு மத்தியில் ஒரு குரல் வித்தியாசமாக ஒலிக்கிறது. ''ராஜீவ் கொலையின் உண்மைக் குற்றவாளிகள் வெளியில் இருக்கிறார்கள். அவர்களை விட்டுவிட்டு, கொலைச் சதியில் சம்பந்தம் இல்லாதவர்களை தூக்கு மேடைக்கு அனுப்புவது நியாயமா?’ என்பதுதான் அதிர்ச்சிக்​​குரிய முக்கியக் குரல்!
இவர்கள் அத்தனை பேரும் அடையாளம் சுட்டிச் சொல்வது சந்திராசாமி என்ற மனிதரை!
நேமி சந்த் ஜெயின் என்று அழைக்கப்படும் இவரை சந்திரா​சாமி என்றால்தான் அனை​வருக்கும் தெரியும். முன்​னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு மிக நெருக்கமான நண்பராகவும், ராஜீவ் கொலை நடந்த காலத்தில் இந்திய பிரதமராக இருந்த சந்திரசேகருக்கு நெருங்கிய சகா​வாக​வும் இருந்தார். உலகத்​தின் மிக முக்கியமான ஆயுத வியாபாரியாகச் சொல்லப்படும் கசோக்​கிக்கும் இவருக்கும் நெருங்​கிய தொடர்பு உண்டு. அரசி​யல் தலைவர்களை சதி வேலைகள் செய்து கவிழ்ப்​பதில் கைதேர்ந்தவர் இவர் என்பது வி.பி.சிங் விஷயத்தில் வெளிச்​சத்துக்கு வந்தது. காங்கிரஸில் இருந்து வெளியேறி ஆட்சியைப் பிடித்த வி.பி.சிங்கை எப்படிக் கவிழ்ப்பது என்று சிலர் திட்டமிட்டபோது, செயின் கீட்ஸ் தீவில் வி.பி.சிங் மகனுக்குச் சொத்துகள் இருப்பதாக ஆவணங்களைத் தயாரித்துத் தந்தது இந்த சந்திராசாமிதான். அந்த ஆவணங்கள் போலியானவை என்று நிரூபணம் ஆனபோது, சந்திராசாமி பெயர் டெல்லி மீடியாக்களில் அதிகம் அடிபட்டது. இப்படிப்பட்ட சர்ச்சைக்குரிய காரியங்களுக்கு சொந்தக்காரர் இந்த சந்திராசாமி!
இவர் மீது, அன்னியச் செலாவணியை மீறிய 12 குற்றச்சாட்டுகள் இருந்தன. அதில் மூன்றில் விடுதலை ஆகிவிட்டார். மீதி 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அவர் எப்போது வெளிநாடு சென்றா லும் டெல்லி நீதிமன்றத்தின் அனுமதி பெற்றே செல்ல முடியும். 'சந்திராசாமியை வெளிநாடு செல்ல அனுமதித்தால், அவர் திரும்பி வர மாட்டார்!’ என்று பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் பதில் மனுத் தாக்கல் செய்வார்கள். குறிப்பிட்ட தொகையை டெபாஸிட்டாகக் கட்டிவிட்டு அவர் செல்லலாம் என்று நீதிமன்றமும் அனுமதிக்கும். இது கடந்த 20 ஆண்டுகளாக நடக்கும் வழக்கம்.
கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி, 'எனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல வேண்டும்!’ என்று அனுமதி கேட்டபோது, அமலாக்கத் துறை அதிர்ச்சிக்குரிய காரணத்தைச் சொன்னது. 'சந்திராசாமி வெளிநாடு போனால், திரும்ப மாட்டார். பல ஆதாரங்களை அழித்துவிடுவார். மேலும் அவர் மீது சி.பி.ஐ. வழக்கும் உள்ளது!’ என்றது. 'சி.பி.ஐ. வழக்குத் தொடருமா?’ என்று நீதிபதிகள் கேட்க, 'தொடரும்...’ என்று பதில் தந்தார்கள். ராஜீவ் கொலைச் சதியை விசாரித்த பல்நோக்குக் கண்காணிப்புப் புலனாய்வுப் பிரிவும் அப்போது மனுத் தாக்கல் செய்தது. அதில், 'ராஜீவ் கொலை வழக்கில் சந்திராசாமி சம்பந்தப்பட்டு உள்ளார். எனவே, அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி தரக் கூடாது’ என்று உறுதியாகச் சொன்னது. 'இதற்கு முன்னர் வெளிநாடு சென்றுவிட்டு அவர் திரும்பிவிட்டதாகச் சொல்கிறார். ஆனால், இம்முறை திரும்ப வருவாரா என நீதிமன்றத்துக்கு சந்தேகம் இருக்கிறது. உடல்நிலையைக் காரணமாகக் காட்டுவதால், அனுமதி அளிக்கலாம். 90 லட்சம் ரூபாயை டெபாஸிட்டாகச் செலுத்திவிட்டு, அவர் செல்லலாம்’ என்று நீதிமன்றம் சொல்ல... 'என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. ஆனால், என் சீடர்களிடம் வாங்கிச் செலுத்திவிடுவேன்!’ என்று சொன்னார் சந்திராசாமி. பணத்தை உடனடியாகக் கட்டிவிட்டு, வெளிநாடு சென்றார். சந்திராசாமி இதுவரை அமலாக்கத் துறைக்கு 65 கோடி வரை கட்ட வேண்டிய பாக்கி உள்ளதாக அத்துறையின் வக்கீல் நீதிமன்றத்தில் கூறினார். அப்படிப்பட்ட சந்திராசாமியை வளைக்காமல் இருக்கிறார்களே என்பதுதான் தமிழ் உணர்வாளர்களின் முக்கியக் கேள்வியாக இருக்கிறது!
ராஜீவ் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இதன் விசாரணை நடந்து, கைதான 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதில் 19 பேரின் தண்டனை விலக்கப்பட்டு, அவர்கள் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்கள். மூன்று பேருக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. மற்ற நான்கு பேரின் தூக்குத் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதில் நளினியின் கருணை மனு ஏற்கப்பட்டு, அவர் ஆயுள் தண்டனைக் கைதியாக புழல் சிறையில் இருக்கிறார்.
நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. ராஜீவுக்குத் தரப்பட்ட பாதுகாப்பில்ஏதாவது குளறுபடிகள் நடந்ததா, அதற்கு யார் குற்றவாளி என்பதை அந்த கமிஷன் விசாரித்தது. இதில் பல அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.
மூன்றாவதாக அமைக்கப்பட்டது நீதிபதி ஜெயின் கமிஷன். ராஜீவ் படுகொலை செய்யப்​பட்டதற்கான பின்னணிகள், அதில் சம்பந்தப்பட்டுள்ள நபர்கள் பற்றி இது விசாரித்தது. இந்த கமிஷனில்தான் பல்வேறு சர்ச்சைக்குரிய மனிதர்கள் தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்தார்கள்.
பல்வேறு வர்த்தகங்களில் சம்பந்தப்பட்ட பப்லு ஸ்ரீவத்சவா என்பவர் ஜெயின்கமிஷனிடம் அளித்த வாக்குமூலத்தில், ''ராஜீவ் கொலைச் செய்தி கேட்டதும்சந்திராசாமி மகிழ்ச்சியில் கூத்தாடினார். 'நரசிம்மராவைப் பிரதமராக்கப்போறேன்...’ என்று சொல்லிக்​கொண்டே, ராவ் வீட்டுக்கு போன் செய்து அரை மணி நேரத்துக்கு மேல் பேசிக்கொண்டு இருந்தார்...'' என்று வாக்குமூலம் கொடுத்தார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பி.ஜே.பி. பிரமுகர் ரமேஷ் தலால், 'சந்திராசாமிக்கு இந்த சதியில் பங்கு இருக்கிறது’ என்று சொன்னதாகவும், அதைத் தொடர்ந்து தன்னை சந்திராசாமி மிரட்டியதாகவும் 1995-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பேட்டி கொடுத்துள்ளார். சந்திராசாமியின் சந்தேகத்துக்கு உரிய நடவடிக்கைகள் தொடர்பாக, மகந்த் சேவா தாஸ் சிங் என்பவர் ஒரு வாக்குமூலம் கொடுத்தார். அவர், ஷாஹித் பெருமன் சிரோமணி அகாலிதள் அமைப்பின் தலைவர். இவை அனைத்தையுமே பதிவு செய்துள்ளது ஜெயின் கமிஷன்.
ஆனால், சந்திராசாமிக்கு எதிரான பல்வேறு ஆவணங்கள் திடீரென்று காணாமல்போன தகவல்களும் 97-ம் ஆண்டு அம்பலம் ஆனது. 89-ம் ஆண்டு முதல் ராஜீவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய அதிகாரிகளது அறிக்கையுடன் சந்திரா​சாமியின் தொலைபேசி உரையாடல்களை மறித்துக் கேட்கப்பட்ட செய்திகளின் ஆவணத் தொகுப்பும் காணாமல்போனது.
இவை அனைத்துக்கும் மேலாக பெங்களூ​ருவைச் சேர்ந்த ரங்கநாத் என்பவரது வாக்கு​மூலமும் சந்திராசாமியை நேரடியாகக் குற்றம் சாட்டி இருந்தது. ''பெங்களூருவில் இருந்து எங்களை சந்திராசாமி தப்பவைத்துவிடுவார். நேபாளத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவதாகவும் சொல்லி இருக்கிறார்’ என்று சிவராசன் தன்னிடம் சொன்னதாக ரங்கநாத், தனது வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார். சிவராசன் பெங்களூருவில் தங்குவதற்கு வீடு கொடுத்த ரங்கநாத், ராஜீவ் வழக்கில் 26-வது குற்றவாளியாக இருந்து தூக்குத் தண்டனை பெற்றவர். உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்.
சென்னையில் இருந்த பத்திரிகையாளர் எஸ்.எம்.கார்மேகம், ஈழத்துக்குச் சென்று வந்துவிட்டு தனது அனுபவங்களை 'ஈழப் புலிகளுடன் ஒரு வாரம்’ என்ற தலைப்பில் தினமணியில் தொடராக எழுதினார். அவர் இலங்கை சென்றிருந்தபோது, நடிகை பமீலா அங்கு இருந்தது குறித்த தகவலைச் சொல்கிறார். மிஸ் கே.என்.சிங் என்ற பெயரில் பமீலா, ஈழப் பகுதிக்குள் சென்றிருந்தாராம். கொழும்பு சென்ற அவரை விமானப் படை விமானத்தில் சிங்கள அதிகாரிகள் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பிவைத்தனர். இந்திய அழகு ராணிப் போட்டியில் வென்ற இந்த பஞ்சாபிப் பெண் பிரிட்டனில் குடியிருந்தவர். ஆயுதத் தரகர் என்று டெல்லி மீடியாக்களால் அடையாளப்படுத்தப்படும் கஸோகியுடன் நெருக்கமாக இருந்தவர். அவரைப்பற்றி கொழும்பு பத்திரிகைகள் அப்போது என்ன எழுதியது என்று கார்மேகம் சொல்கிறார்....
'பிரபாகரனை எப்படியும் தேடிப் பிடித்துத் தருவேன் என்று சந்திராசாமி, இந்திய அரசிடம் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறாராம். எந்த வழியைக் கையாண்டாவது அதனை செய்து முடிப்பதாக அவர் சபதம் ஏற்றிருக்கிறாராம். அந்த சபதத்தை நிறைவேற்றத்தான், அவர் பமீலாவை இலங்கைக்கு அனுப்பி இருக்கிறார் என்று கொழும்பு நாளேட்டில் செய்தி வந்தது. பமீலா இப்போதும் சந்திராசாமியின் மக்கள் தொடர்பாளர்களில் ஒருவராக இருப்பதாகத் தெரிகிறது. பிரபாகரனை சந்திக்க ஈழப் புலிகள் அனுமதிக்கவில்லை!’ என்று அன்று கொழும்புவில் பரவிய தகவல்களை எழுதுகிறார்.
ஜெயின் கமிஷன் வாக்குமூலங்கள் முதல் கொழும்பு பத்திரிகைகள் வரைக்கும் சந்திராசாமியை நோக்கியே நீளும் நிலையில், அவரை விசாரிக்காமல் ராஜீவ் வழக்கின் விசாரணை முடிந்துவிட்டதாக எப்படிச் சொல்ல முடியும்?
ப.திருமாவேலன்


நன்றி: ஜூவி

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010