********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************

ஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி

ஹதீஸ் எண்: 181

அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)

'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா?' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

சைஃபுல்லாஹ் ஹாஜா நீக்கம்; உளரும் பொய்யன் பீஜே - அப்துல் முஹைமின்

Saturday, August 27, 2011


ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

அண்ணன் ஜமாஅத்தின் மாநில தணிக்கைக்குழு உறுப்பினராக  இருந்த, மாநில நிர்வாகியான  சைஃபுல்லாஹ் ஹாஜா அவர்களை ஒரு சாதாரண கிளைப் பொதுக்குழு அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியதாக கூறியது அண்ணன்  ஜமாஅத்தின் ஃபைலாவிற்கு முரண் என்பதை  நாம் அண்ணன் ஜமாத்தின் ஃபைலாவை மேற்கோள்காட்டி எழுதியிருந்தோம். படிக்க;http://amaibbukal.blogspot.com/2011/08/blog-post_06.html
 
இதற்கு வழக்கம் போல பதில் எழுதிய பொய்யனின் பினாமி, சைபுல்லாஹ் ஹாஜா நீக்கம் எனபது ததஜ பைலா விதிமுறைப்படியே என்று நிரூபிக்க முடியாமல், '' தவறு செய்யும் கழுசடை எவனா இருந்தாலும் அவன கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளி கதவ சாத்தறத விட்டுட்டு பைலா ஒயிலா என்று பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? என்று எழுதி சைபுல்லாஹ் ஹாஜா அவர்களின் நீக்கம் என்பது ததஜவின் விதிப்படியல்ல. மாறாக அண்ணனின் 'மதி'ப்படியே என்று ஏற்கனவே ஒப்புக்கொண்டது.
 
இதற்கிடையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு உணர்வு வார இதழில் பதிலளித்துள்ள பொய்யன் பீஜே, தணிக்கைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து சைபுல்லாஹ் ஹாஜாவை நீக்கியது மாநில நிர்வாகமும்- மேலாண்மைக் குழுவும் இணைந்த கூட்டு கூட்டத்தில் தான் என்று கூறியுள்ளார். 
 
பொய்யன்பீஜே தனது கூற்றில் உண்மையாளராக இருந்தால் சைபுல்லாஹ் ஹாஜா மாநில நிர்வாகத்தால் நீக்கப்பட்டது எப்போது என்பதையும், அது குறித்த செய்தி எங்கே எதில்  வெளியிடப்பட்டது என்பதையும் காட்ட வேண்டும். 


மேலும் அதே பதிலில், சைபுல்லாஹ் ஹாஜா உறுப்பினராக இருந்த கிளையில் பரிந்துரை செய்யப்பட்டு அவர் உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் கூறியுள்ளார். ''ஒரு உறுப்பினரை நீக்கம் செய்யும் அதிகாரம் மாநிலத்திற்கு இல்லை; மாநில நிர்வாகமே ஒருவரை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க விரும்பினாலும் கிளைக்கு பரிந்துரை செய்து அந்த  உறுப்பினர் அங்கம் வகிக்கும் கிளைதான் அவரை நீக்க முடியும் என்ற விதி ஃபைலாவில் எங்குள்ளது என்பதையும் பீஜே காட்டவேண்டும்.  ஒரு உறுப்பினரை நீக்க கிளை மாநிலத்திற்கு பரிந்துரைக்க வேண்டுமா? அல்லது மாநிலம் கிளைக்கு பரிந்துரைக்க வேண்டுமா? என்றும் பொய்யன்பீஜே சொல்லவேண்டும்.

மேலும் சைபுல்லாஹ் ஒரு பேச்சுக்கு சாதாரண உறுப்பினர் என்றே வைத்துக் கொண்டு பார்த்தாலும் எந்த ஒரு உறுப்பினரையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்ற எந்த கிளைக்கும் பைலா அனுமதிக்கவில்லை. ஒரு உறுப்பினரை நீக்குவது குறித்து பைலா என்ன சொல்கிறது என்றால்,

சட்ட விதி மீறல் நடவடிக்கை;
அமைப்பின் நலனிற்கோ, நோக்கத்திற்கோ, சட்டவிதிகளுக்கோ மாறாகவோ அல்லது அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலோ எந்த உறுப்பினராவது செயல்பட்டால் அவரது நடவடிக்கை குறித்து அவர் உறுப்பினராக உள்ள கிளை அல்லது மாவட்ட நிர்வாகக்குழு தலைமை நிர்வாகக் குழுவிடம் அறிக்கைதாக்கல் செய்து அவரை நீக்கி நடவடிக்கை அல்லது இதர நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும். தலைமை நிர்வாகக் குழு அதனை பரிசீலித்து அப்பரிந்துரை சரியெனக் கண்டால் உறுப்பினரை அமைப்பிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கும் அல்லது இதர நடவடிக்கை எடுக்கும்.அவ்வாறான உறுப்பினர்கள் மீது நேரடியாக நடவடிக்கை
மேற்கொள்ளவும் தலைமை நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.


மேற்கண்ட பைலா விதி ஒரு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் மாநில நிர்வாகத்திற்கு வழங்கியிருக்க, மாநில நிர்வாகமே சைபுல்லாஹ்வை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்காமல், கிளைக்கு பரிந்துரை செய்யவேண்டியதன் அவசியமென்ன? என்பதையும் பொய்யன்பீஜே சொல்லவேண்டும்.  
 
மேலும் பொய்யன்பீஜேயின் கூற்றுப்படி சம்மந்தப்பட்ட கிளைதான் ஒருவரை தகுதி நீக்கம் செய்யமுடியும் என்றால், பாக்கரை மன்னடி பொதுக் குழுவை கூட்டித்தான் நீக்கினாரா? இக்பாலை ராயபுரம் பொதுக்குழுவை கூட்டியும், ஷிப்லியை முத்துப்பேட்டை பொதுக்குழுவை கூட்டியும், அபூ பைசலை கூனிமேடு பொதுக்குழுவை கூட்டியும் தான் நீக்கினாரா?  என்றும் பீஜே சொல்லவேண்டும். சைபுல்லாஹ்விற்கு  ஒரு சட்டம் இவர்களுக்கு ஒரு சட்டமா?
 
ஆக, சைபுல்லாஹ்வை கிளை பொதுக்குழு மூலம் நீக்கியது பைலாவுக்கு முரண் என்பதும், அவரை அவரது சொந்த மண்ணில் செல்லாக்காசாக காட்டவே இந்த நாடகம் எனபதையும் பொய்யன்  பீஜே மற்றும் பினாமியின் உளறல்கள் உறுதிப் படுத்துகிறது.
********************************************************************************************

ஒப்பற்ற ஓரிறையின் திருப்பெயரால்..

அண்ணன் ஜமாஅத்தின் மாநில தணிக்கைக்குழு உறுப்பினராக  இருந்த, மாநில நிர்வாகியான  சைஃபுல்லாஹ் ஹாஜா அவர்களை ஒரு சாதாரண கிளைப் பொதுக்குழு அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கியதாக கூறியது அண்ணன்  ஜமாஅத்தின் ஃபைலாவிற்கு முரண் என்பதை  நாம் அண்ணன் ஜமாத்தின் ஃபைலாவை மேற்கோள்காட்டி எழுதியிருந்தோம். படிக்க;http://amaibbukal.blogspot.com/2011/08/blog-post_06.html
 
இதற்கு வழக்கம் போல பதில் எழுதிய பொய்யனின் பினாமி, சைபுல்லாஹ் ஹாஜா நீக்கம் எனபது ததஜ பைலா விதிமுறைப்படியே என்று நிரூபிக்க முடியாமல், '' தவறு செய்யும் கழுசடை எவனா இருந்தாலும் அவன கழுத்தப் புடிச்சி வெளிய தள்ளி கதவ சாத்தறத விட்டுட்டு பைலா ஒயிலா என்று பார்த்துக் கொண்டிருக்க முடியுமா? என்று எழுதி சைபுல்லாஹ் ஹாஜா அவர்களின் நீக்கம் என்பது ததஜவின் விதிப்படியல்ல. மாறாக அண்ணனின் 'மதி'ப்படியே என்று ஏற்கனவே ஒப்புக்கொண்டது.
 
இதற்கிடையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு உணர்வு வார இதழில் பதிலளித்துள்ள பொய்யன் பீஜே, தணிக்கைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து சைபுல்லாஹ் ஹாஜாவை நீக்கியது மாநில நிர்வாகமும்- மேலாண்மைக் குழுவும் இணைந்த கூட்டு கூட்டத்தில் தான் என்று கூறியுள்ளார். 
 
பொய்யன்பீஜே தனது கூற்றில் உண்மையாளராக இருந்தால் சைபுல்லாஹ் ஹாஜா மாநில நிர்வாகத்தால் நீக்கப்பட்டது எப்போது என்பதையும், அது குறித்த செய்தி எங்கே எதில்  வெளியிடப்பட்டது என்பதையும் காட்ட வேண்டும். 


மேலும் அதே பதிலில், சைபுல்லாஹ் ஹாஜா உறுப்பினராக இருந்த கிளையில் பரிந்துரை செய்யப்பட்டு அவர் உறுப்பினர் தகுதியில் இருந்து நீக்கப்பட்டார் என்றும் கூறியுள்ளார். ''ஒரு உறுப்பினரை நீக்கம் செய்யும் அதிகாரம் மாநிலத்திற்கு இல்லை; மாநில நிர்வாகமே ஒருவரை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க விரும்பினாலும் கிளைக்கு பரிந்துரை செய்து அந்த  உறுப்பினர் அங்கம் வகிக்கும் கிளைதான் அவரை நீக்க முடியும் என்ற விதி ஃபைலாவில் எங்குள்ளது என்பதையும் பீஜே காட்டவேண்டும்.  ஒரு உறுப்பினரை நீக்க கிளை மாநிலத்திற்கு பரிந்துரைக்க வேண்டுமா? அல்லது மாநிலம் கிளைக்கு பரிந்துரைக்க வேண்டுமா? என்றும் பொய்யன்பீஜே சொல்லவேண்டும்.

மேலும் சைபுல்லாஹ் ஒரு பேச்சுக்கு சாதாரண உறுப்பினர் என்றே வைத்துக் கொண்டு பார்த்தாலும் எந்த ஒரு உறுப்பினரையும் நீக்கி தீர்மானம் நிறைவேற்ற எந்த கிளைக்கும் பைலா அனுமதிக்கவில்லை. ஒரு உறுப்பினரை நீக்குவது குறித்து பைலா என்ன சொல்கிறது என்றால்,

சட்ட விதி மீறல் நடவடிக்கை;
அமைப்பின் நலனிற்கோ, நோக்கத்திற்கோ, சட்டவிதிகளுக்கோ மாறாகவோ அல்லது அமைப்பின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதத்திலோ எந்த உறுப்பினராவது செயல்பட்டால் அவரது நடவடிக்கை குறித்து அவர் உறுப்பினராக உள்ள கிளை அல்லது மாவட்ட நிர்வாகக்குழு தலைமை நிர்வாகக் குழுவிடம் அறிக்கைதாக்கல் செய்து அவரை நீக்கி நடவடிக்கை அல்லது இதர நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கும். தலைமை நிர்வாகக் குழு அதனை பரிசீலித்து அப்பரிந்துரை சரியெனக் கண்டால் உறுப்பினரை அமைப்பிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கும் அல்லது இதர நடவடிக்கை எடுக்கும்.அவ்வாறான உறுப்பினர்கள் மீது நேரடியாக நடவடிக்கை
மேற்கொள்ளவும் தலைமை நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.


மேற்கண்ட பைலா விதி ஒரு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் மாநில நிர்வாகத்திற்கு வழங்கியிருக்க, மாநில நிர்வாகமே சைபுல்லாஹ்வை அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்காமல், கிளைக்கு பரிந்துரை செய்யவேண்டியதன் அவசியமென்ன? என்பதையும் பொய்யன்பீஜே சொல்லவேண்டும்.  
 
மேலும் பொய்யன்பீஜேயின் கூற்றுப்படி சம்மந்தப்பட்ட கிளைதான் ஒருவரை தகுதி நீக்கம் செய்யமுடியும் என்றால், பாக்கரை மன்னடி பொதுக் குழுவை கூட்டித்தான் நீக்கினாரா? இக்பாலை ராயபுரம் பொதுக்குழுவை கூட்டியும், ஷிப்லியை முத்துப்பேட்டை பொதுக்குழுவை கூட்டியும், அபூ பைசலை கூனிமேடு பொதுக்குழுவை கூட்டியும் தான் நீக்கினாரா?  என்றும் பீஜே சொல்லவேண்டும். சைபுல்லாஹ்விற்கு  ஒரு சட்டம் இவர்களுக்கு ஒரு சட்டமா?
 
ஆக, சைபுல்லாஹ்வை கிளை பொதுக்குழு மூலம் நீக்கியது பைலாவுக்கு முரண் என்பதும், அவரை அவரது சொந்த மண்ணில் செல்லாக்காசாக காட்டவே இந்த நாடகம் எனபதையும் பொய்யன்  பீஜே மற்றும் பினாமியின் உளறல்கள் உறுதிப் படுத்துகிறது.

0 comments:

Post a Comment

Cricket

 
இயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010